செய்திகள் :

Anand Mahindra: `வரலாற்றை மாற்றிய ஒரு வாக்கு' - ஆனந்த் மஹிந்திரா வியந்த திருப்பத்தூர் தேர்தல் களம்!

post image

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் இந்த முறை முன்னெப்போதும் இல்லாத வகையில் கடுமையான போட்டி நிலவியது. தமிழகத்தின் கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்த தி.மு.க-வின் மூத்த நிர்வாகி கே.ஆர்.பெரியகருப்பன் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் ஸ்ரீனிவாச சேதுபதி ஆகியோருக்கு இடையே நேரடி மோதல் உருவானது.

வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்திலிருந்தே இருவரும் மாறி மாறி முன்னிலை பெற்று வந்தனர். கடைசி நிமிடம் வரை நீடித்த இந்த "துப்பாக்கிச் சண்டை" போன்ற போட்டியில், இறுதி முடிவுகள் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

தவெக வேட்பாளர் ஸ்ரீனிவாச சேதுபதி 83,375 வாக்குகளும், திமுக-வின் கே.ஆர்.பெரியகருப்பன் 83,374 வாக்குகளும் பெற்றிருந்தனர். அதாவது வெறும் 1 வாக்கு வித்தியாசத்தில் ஸ்ரீனிவாச சேதுபதி வெற்றி பெற்று, மாபெரும் கட்சியின் அமைச்சரை வீழ்த்தினார்.

இந்தத் தேர்தல் முடிவை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா, ஜனநாயகத்தில் தனிமனிதனின் வாக்கு எவ்வளவு முக்கியமானது என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தன் எக்ஸ் பக்கத்தில், ``இந்தத் தேர்தல் முடிவுகளில் எத்தனையோ திருப்பங்கள் இருந்தாலும், திருப்பத்தூர் தொகுதியின் இந்த முடிவுதான் எனது நினைவில் என்றும் நீங்காமல் இருக்கும். 1.66 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவான ஒரு இடத்தில், ஒரே ஒரு வாக்கு வரலாற்றையே மாற்றியமைத்திருக்கிறது. ஒவ்வொரு குழந்தையும் வளரும்போது, தன்னிடம் உள்ள மிகப்பெரிய அதிகாரம் 'The Power of One' வாக்கு என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். உங்கள் ஒரு வாக்கிற்கு எவ்வளவு வலிமை இருக்கிறது என்பதற்கு இந்தத் தேர்தல் முடிவே சிறந்த உதாரணம்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

அவரின் பதிவு, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மும்பை: மாமரத்தில் விளைந்த சீதாப்பழம்? வைரலாகும் வீடியோ; ஆராய்ச்சியாளர் சொல்வது என்ன?

மும்பை அருகே மாமரம் ஒன்றில் சீதாப்பழம் விளைந்திருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மும்பை அருகில் இருக்கும் பிவண்டி என்ற இடத்தைச் சேர்ந்தவர் ஜெயேஷ் பாட்டீல். இவர் மளிகைக்கடை வைத்தி... மேலும் பார்க்க

சொல்லியடித்த சுவேந்து; சறுக்கிய மம்தா - மேற்கு வங்கத்தில் பாஜக முந்தியது எப்படி?

மேற்கு வங்க சட்டமன்றத்திற்கு இரண்டு கட்டமாக நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டது. காலையில் இருந்தே பா.ஜ.கவும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் தொடர்ந்து ஒன்றையொன்று முந்திக்கொண்டிருந்தது... மேலும் பார்க்க

`குருவை மிஞ்சிய சிஷ்யன்' - மம்தாவிடம் அரசியல் பயின்று அவரையே வென்று முதல்வராகும் சுவந்து அதிகாரி?

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் ஆரம்பத்தில் இருந்தே கடும் சர்ச்சைக்குறியதாக இருந்தது. வாக்காளர் சீர்திருத்தம் கொண்டு வரப்பட்டதற்கு அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மொத்தம் ... மேலும் பார்க்க

மும்பை: பூங்காவில் 9 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்; உதவி போலீஸ் கமிஷனர் கைது; என்ன நடந்தது?

மும்பை ஒர்லி பகுதியில் இருக்கும் பூங்காவில் 9 வயது சிறுமி விளையாடிக்கொண்டிருந்தாள். அங்கு வந்த 56 வயது உதவி போலீஸ் கமிஷனர் பூங்காவில் யாரும் இல்லாததைத் தெரிந்து கொண்டு சிறுமியிடம் சென்றார். அவர் அச்சி... மேலும் பார்க்க

நெதர்லாந்து அரசக் குடும்பத்தை உலுக்கிய 'இரத்தக் களரி' சதி; இளவரசியைக் குறிவைத்த பயங்கரவாதி கைது

நெதர்லாந்து நாட்டின் அரசக் குடும்பத்தையே உலுக்கியுள்ள ஒரு பயங்கரமான கொலைச் சதி, கடைசி நேரத்தில் முறியடிக்கப்பட்டு உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்த நாட்டின் வருங்கால அரசியான இளவரசி கேத்தல... மேலும் பார்க்க

மொபைல் போனுக்கு அடிமையான பிள்ளைகள்; மீட்க லட்சக்கணக்கில் செலவு செய்து பவுன்சர்களை நியமித்த பெற்றோர்!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 16 வயது பெண் எப்போதும் மொபைல் போனில் மூழ்கியபடி இருந்தார். அவர் எப்போதும் சமூக வலைத்தளப் பக்கத்தில் தனக்கு தெரியாதவர்களுடன் சாட்டிங் செய்து கொண்டிருப்பார். திடீரென சமூக வ... மேலும் பார்க்க