செய்திகள் :

``பொது வெளியில் நடனமாடியது இதுவே முதல் முறை!'' - மனம் திறந்து பேசிய பிரேமலதா விஜயகாந்த்

post image

தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தின் நிறுவனரான நடிகர் விஜயகாந்தின் மறைவுக்குப் பிறகு அந்த இயக்கத்தின் பொதுச் செயலாளராக உருவெடுத்திருக்கிறார் அவரின் மனைவி பிரேமலதா.

விஜயகாந்த் வாழ்ந்த காலத்திலும் அவருடன் இணைந்து நேரடி அரசியலில் ஈடுபட்டு வந்தவர் என்றாலும், வரவிருக்கும் 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தன்னையும் தனது இயக்கத்தின் இருப்பை நிரூபிக்க வேண்டிய நிலையில் இருக்கிறார்.

படுகர் இன மக்களுடன் பிரேமலதா விஜயகாந்த்
படுகர் இன மக்களுடன் பிரேமலதா விஜயகாந்த்

இதன் வெள்ளோட்டமாகவே 'உள்ளம் தேடி, இல்லம் நாடி' என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

நீலகிரி மாவட்டம் குன்னூருக்கு நேற்று சென்ற அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். முன்னதாக மாவட்ட செயலாளரின் கிராமமான கோடமலை படுகர் கிராமத்திற்குச் சென்று அந்த மக்களைப் போன்றே உடையணிந்து அவர்களுடன் சேர்ந்து நடனமாடியும் மகிழ்ந்திருக்கிறார்.

இந்த அனுபவம் குறித்து தொண்டர்களுடன் பகிர்ந்த பிரேமலதா, "கேப்டனின் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த கடந்த 10 ஆண்டுகளில் அவரை பராமரிப்பதிலயே முழு கவனத்தையும் செலுத்தி வந்தேன். எனக்கும் கேப்டனுக்கும் பிடித்த இடமான ஊட்டிக்கு கூட கடந்த 10 ஆண்டுகளாக வரவில்லை.

படுகர் இன மக்களுடன் பிரேமலதா விஜயகாந்த்
படுகர் இன மக்களுடன் பிரேமலதா விஜயகாந்த்

இன்னும் சொல்லப்போனால் இதுவரை பொதுவெளியில் நடனமாடியதில்லை. இதுவே முதல் முறை. படுகர் சமுதாய மக்களின் அன்பு உபசரிப்பு மற்றும் கலாச்சாரத்திற்கு மதிப்பளிக்கும் விதமாகவே அவர்களுடன் சேர்ந்து நடனமாடினேன்" என மனம் திறந்து பேசியிருக்கிறார்.

``விவசாயிகள் கொண்டு வந்த நெல்லை கொள்முதல் செய்திருந்தால் வீணாகி இருக்காது'' - எடப்பாடி பழனிசாமி

நிரந்தர டிஜிபிசேலம் ஓமலூர் கமலாபுரம் விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது எடப்பாடி பழனிசாமி பேசுகையில், "அமைச்சர் ரகுபதி செய்தியாளர் சந்திப்பில... மேலும் பார்க்க

தவெக: பிரசாரத்தை தொடங்கும் தவெக தலைவர் விஜய், அனுமதி மறுத்த காவல்துறை - காரணம் என்ன?

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கரூரில் தேர்தல் பிரச்சார பரப்புரை மேற்கொண்டபோது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதனால் விஜய் பிரச்சாரத்தை தற்காலிகமாக நிறுத்தினார். இதற்கிடையே சென்னையி... மேலும் பார்க்க

‘‘பங்கைப் பிரி... பங்கைப் பிரி...’’ - கூட்டணிப் பேச்சுவார்த்தை பஞ்சாயத்து!

‘50 தொகுதி லட்சியம்... 40 தொகுதி நிச்சயம்’ - கூட்டணிப் பேச்சுவார்த்தையின்போது நம் அரசியல்வாதிகள் சொல்லும் `பங்கைப் பிரி’ தொகுதிப் பங்கீட்டுக் கோரிக்கை இது! சிறிய, பெரிய கட்சிகள் பிரச்னையில்லாமல் பங்கு... மேலும் பார்க்க

``மக்களை தேடி, மக்கள் தலைவர் ரதயாத்திரை'' - கொடியசைத்து துவக்கிய பிரேமலதா விஜயகாந்த் | Photo Album

``மக்களை தேடி, மக்கள் தலைவர் ரதயாத்திரை'' - பிரேமலதா விஜயகாந்த்``மக்களை தேடி, மக்கள் தலைவர் ரதயாத்திரை'' - பிரேமலதா விஜயகாந்த் மக்களை தேடி மக்கள் தலைவர் ரத யாத்திரை``மக்களை தேடி, மக்கள் தலைவர் ரதயாத்த... மேலும் பார்க்க

``தேசிய ஜனநாயக கூட்டணி பீகாரைப் போல தமிழகத்திலும் ஆட்சியைப் பிடிக்கும்'' - நயினார் நாகேந்திரன்

'தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்' என்கிற தலைப்பில் தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழ்நாடு முழுவதும் மக்களை சந்தித்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக விருதுநகரில் அவர் மக்களை சந்தித்தார்... மேலும் பார்க்க

``தேச-தெய்வீக பக்தன் எடப்பாடி பாஜக-வுடன் கூட்டணி வைத்ததில் என்ன தவறு?'' - ராஜேந்திர பாலாஜி

`விஜய பிரபாகரன் தோல்விக்கு காரணம்'விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் நடந்த சிவகாசி வடக்கு ஒன்றிய அ.தி.மு.க வாக்குச் சாவடி நிலை முகவர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலா... மேலும் பார்க்க