செய்திகள் :

``பொன்னென மின்னும், கண்களைப் பறிக்கும்'' - 175 ஆண்டுகளுக்குப் பின் மாயப்பூ; ஆய்வாளர்கள் சொல்வதென்ன?

post image

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் நீலகிரி மலைக்கு வருகை தந்திருந்த ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த தாவரவியலாளரான ராபர்ட் வைட் என்பவர், ஊட்டி அருகில் உள்ள நடுவட்டம் பகுதியில் ‘Campbellia aurantiaca’ என்ற ஒட்டுண்ணி தாவரம் ஒன்றை 1849ஆம் ஆண்டு கண்டறிந்து பதிவு செய்துள்ளார்.

பொன்னென மின்னி கண்களைப் பறிக்கும் அடர் மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறங்களில் பூத்துக் குலுங்கும் இந்த அரிய ஒட்டுண்ணி தாவரம் குறித்தும், வண்டுகளை ஈர்க்கும் தன்மை குறித்தும் தனது ஆய்வு குறிப்புகளில் எழுதி வெளியிட்டுள்ளார் ராபர்ட் வைட்.

அதன் பிறகு வேறு எங்கும் இந்த ஒட்டுண்ணி தாவரம் தென்பட்டதாக ஆய்வாளர்கள் பதிவு செய்யவில்லை.

Campbellia aurantiaca
Campbellia aurantiaca

மாயப்பூ என ஆய்வாளர்கள் தேடப்பட்டு வந்த இந்த ஒட்டுண்ணி தாவரத்தை கேரள மாநிலம் வயநாட்டில் அண்மையில் கண்டறிந்துள்ளனர் ஆய்வாளர் குழுவினர்.

எம்.எஸ். சாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை ஆய்வாளர்கள், ஆலப்புழா தாவரவியல் துறை ஆய்வாளர்கள் மற்றும் சில பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் அடங்கிய இந்த குழுவினர், வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட சூரல் மலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் மேற்கொண்ட ஆய்வில் இந்த அரிய தாவரத்தைக் கண்டறிந்துள்ளனர்.

175 ஆண்டுகள் கழித்து தென்பட்ட இந்த மாயப்பூ, சர்வதேச அளவில் தாவரவியல் ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

துருக்கியின் தானியக் களஞ்சியத்தை விழுங்கும் ராட்சத புதைகுழிகள்! - கோன்யா சமவெளியின் பகீர் பின்னணி?

துருக்கியின் மத்திய அனடோலியாவில் அமைந்துள்ள கோன்யா சமவெளி (Konya Plain) அந்நாட்டின் 'தானியக் களஞ்சியம்' என்று அழைக்கப்படுகிறது. இங்குதான் கோதுமை, சோளம் மற்றும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு (Sugar beet) போன... மேலும் பார்க்க

திண்டுக்கல்: அணைப்பட்டி வைகை ஆற்றில் ஆடைக் கழிவுகள்; தோல் நோய்கள் ஏற்படும் அபாயம் | Photo Album

வைகை ஆற்றில் கழிவுகள் வைகை ஆற்றில் கழிவுகள் வைகை ஆற்றில் கழிவுகள் வைகை ஆற்றில் கழிவுகள் வைகை ஆற்றில் கழிவுகள் வைகை ஆற்றில் கழிவுகள் வைகை ஆற்றில் கழிவுகள் வைகை ஆற்றில் கழிவுகள் வைகை ஆற்றில் கழிவுகள் வை... மேலும் பார்க்க

முதுமலை: `கூண்டுக்குள் சிக்கிய வயதான ஆண் புலி' - அடுத்தக்கட்ட நடவடிக்கையில் வனத்துறை தீவிரம்

வங்கப் புலிகளுக்கான வாழிடப் போதாமை பிரச்னைகள் அதிகரித்து வரும் நீலகிரியில் மனித - புலி எதிர்கொள்ளல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கூடலூர் அருகில் உள்ள தேவர்சோலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் மாதக்கணக... மேலும் பார்க்க

'பார்க்க விமானம்போல இருக்கும்; ஆனால், ஒரு காருக்குத்தான்' - இது ஊர்க்குருவிகளின் கதை!

மழை பெய்து முடித்த நாள்களில், வானம் வெறித்துவிட்டதா என அண்ணாந்துப் பார்க்கையில், உயரத்தில், சிறு புள்ளிகள்போல தெரிகிற பறவைக்கூட்டங்களைப் பார்த்திருக்கிறீர்களா..? கண்ணிமைக்கும் நேரத்தில் மறைந்துவிடுகிற... மேலும் பார்க்க

ஊட்டி: ஆராய்ச்சியாளனின் 200 ஆண்டுகளுக்கு முந்தைய டைரி குறிப்புகள்! - நிரூபணமாகும் வாய்ப்பு?

பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த உயிரியல் ஆராய்ச்சியாளரான பியர் சோனெராட் என்பவர் 200 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய துணைக்கண்டத்தில் தென்பட்ட பல அரிய உயிரினங்களை தனது டைரி குறிப்புகள் மூலம் பதிவு செய்தவர். புகழ்... மேலும் பார்க்க

உலகிலேயே மிகப்பெரிய கரப்பான் பூச்சி இதுதான்; இறக்கையின் அகலம் மட்டும் இவ்வளவா?

கரப்பான் பூச்சி என்றாலே பலருக்கு பயம் ஏற்படும். நம் வீடுகளில் சாதாரணமாகக் காணப்படும் கரப்பான் பூச்சிகள் சிறிய அளவில் இருப்பதே நமக்கு பயமாக இருக்கும். ஆனால் உள்ளங்கையையே மறைக்கும் அளவுக்கு ஒரு கரப்பான்... மேலும் பார்க்க