செய்திகள் :

``மனிதர்களையே அடித்துக் கொல்லும்போது, விலங்குகள் மீது எப்படி கருணை வரும்?" - நடிகை நிவேதா பெத்துராஜ்

post image

தெருநாய்களை பாதுகாக்க கோரி 'விலங்குகளுக்கான சொர்க்கம்' என்ற அரசு சாரா அமைப்பு சார்பில், புதுப்பேட்டை, லாங்ஸ் கார்டன் சாலையில் நேற்று அமைதி பேரணி நடந்தது. இந்த பேரணியில் நடிகை நிவேதா பெத்துராஜ் கலந்துகொண்டார்.

தெரு நாய்களுக்கு ஆதரவான பதாகைகளை ஏந்தியும், தெருநாய்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகளுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பியும் பேரணி நடத்தப்பட்டது.

nivetha pethuraj
nivetha pethuraj

அப்போது செய்தியாளர்களை சந்தித்த நடிகை நிவேதா பெத்துராஜ், ``ஒரு ஊரில் நாய் கடிக்கிறது என்றால் அதை எல்லோருக்கும் பரப்பி, ஒரு பயத்தை உருவாக்கும் செயல். நாய் கடிப்பதால் ரேபிஸ் நோய் வருகிறது, எனவே, நான் நாய்கடியை சரியானது என நான் சொல்லவில்லை.

ஆனால், இதை வைத்து பயத்தைப் பரப்புவதற்குப் பதிலாக என்ன தீர்வு கொடுக்கலாம் என்பதுதான் முக்கியம். சிறுவயதிலிருந்தே இது தொடர்பான புரிதலை குழந்தைகளுக்கு ஏற்படுத்த வேண்டும். ஒருவர் தவறாக நடந்துகொள்கிறார் என்பதால் எல்லோரையும் நான் அப்படியே பார்ப்பதில்லையே. அதேதானே நாய்களுக்கும் நாம் பொருத்திப்பார்க்க வேண்டும்.

ஊடகங்கள் நாய் கடி செய்தியைப் போடும்போதே அதற்கான தீர்வுகளையும் சேர்த்துப் போடுங்கள். நாய் கடியால் பாதிக்கப்பட்டவர்களை நாம் பாதுகாக்க வேண்டும் என்பதில் மாற்றுகருத்தில்லை. அதே நேரம், ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களையும், ரேபிஸ் நோய்க்கான தடுப்பூசி போடுபவர்களையும் ரேபிஸ் பாதித்தவர்களாக கணக்கெடுக்கக் கூடாது.

தமிழ்நாட்டில் 4.5 லட்சம் நாய்கள் இருக்கின்றன. இந்த நாய்களை அடைக்க வேண்டுமென்றால் குறைந்தபட்சம் 2500 முகாம்கள் தேவைப்படும். எனவே, இதற்கு அரசு எடுக்கும் முன்னெடுப்புக்கு பதிலாக, நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தலாம். அதற்கான என்.ஜி.ஓ-களை நியமிக்கலாம்.

நாய்கள்
நாய்கள்

மக்களையும், நாய்களையும் பாதுகாக்கதானே நாம் அவர்களுக்கு வாக்களித்து தேர்வு செய்கிறோம். இதை செய்வது அவர்களின் பொறுப்பு. அரசு மட்டும் இதில் முழுமையாக ஈடுபட வேண்டும் என்பதல்ல. குழந்தைகளே நாய்களை அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

மனிதர்களே மனிதர்களை அடித்துக்கொல்லும்போது, விலங்குகள் மீது எப்படி கருணை வரும்? எனவே, குழந்தைகளுக்கு நாம் இதையெல்லாம் கற்றுக்கொடுக்க வேண்டும். மனிதர்கள் மட்டும்தான் இந்த உலகில் வாழவேண்டுமென்றால் நாம்மால் வாழ முடியாது. கொஞ்சம் அனுசரித்து வாழப் பழகனால் எல்லோருக்கும் நல்லது எனக் கருதுகிறேன்" எனக் குறிப்பிட்டார்.

``AI என் பதவியைக் கூட பறித்துவிடும்" - AI குறித்து வெளிப்படையாக பேசிய சுந்தர் பிச்சை

செயற்கை நுண்ணறிவு எதிர்காலத்தில் CEO (தலைமை நிர்வாக அதிகாரி) பதவியைக் கூட எடுத்துக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது என கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் பிபி... மேலும் பார்க்க

``20 வயதில் குழந்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்" - ஶ்ரீதர் வேம்பு பேச்சும், கிளம்பிய விவாதங்களும்!

இந்தியாவில் வேலையில்லாத் திண்டாட்டம் ஒவ்வொரு மாநிலத்திலும் பெரும் சிக்கலுக்குரியதாக மாறி வரும் நிலையில், ஜோஹோ நிறுவனர் ஶ்ரீதர் வேம்பு தன் எக்ஸ் பக்கத்தில் 20 வயதில் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்... மேலும் பார்க்க

Sachin Tendulkar: ``பாபாவின் ஆசீர்வாதத்தால் மட்டுமே சாத்தியமானது" - புட்டபர்த்தியில் சச்சின் உரை

ஆந்திரப் பிரதேசத்தின் புட்டபர்த்தியில் நேற்று சாய் பாபாவின் பிறந்தநாள் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பிரதமர் மோடி, நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன், சச்சின் டெண்டுல்கர், மத்திய அமைச்சர்கள் ... மேலும் பார்க்க

Veeraswamy: லண்டனில் 100 ஆண்டுகளாக இயங்கும் வீராசாமி உணவகம் - அகற்றக்கோரும் நிறுவனம் - காரணம் என்ன?

லண்டனில் உள்ள மிகப் பழமையான உணவகங்களில் ஒன்று வீராசாமி உணவகம். ஏப்ரல் 1926 முதல் கிட்டத்தட்ட 100 ஆண்டுகளாக மிச்செலின்-ஸ்டார் உணவகமாக செயல்பட்டு வருகிறது. இந்த உணவகம் கிரவுன் எஸ்டேட் (Crown Estate) எனு... மேலும் பார்க்க

"THAR கார் வைத்திருப்பவர்கள் பித்துப்பிடித்தவர்கள்"- ஹரியானா DGP-யின் கருத்து வைரல்

ஹரியானா மாநில காவல்துறை தலைமை இயக்குநர் ஓம் பிரகாஷ் சிங், மகிந்திராவின் தார் (THAR) காரை வைத்திருப்பவர்கள் எல்லாம் பித்துப்பிடித்தவர்கள் வெறிபிடித்தவர்களாக (Crazy) இருப்பார்கள் எனக் கூறியுள்ளது சலசலப்... மேலும் பார்க்க

175 மில்லியன் டாலர்களுக்கு அதிபதி; இருந்தும் ஊபர் ஓட்டுவது ஏன்? - நெகிழ வைக்கும் காரணம்!

பிஜி நாட்டில் தொழில்முனைவோர் ஒருவர் ஊபர் ஓட்டுநருடன் நடத்திய உரையாடல் வைரலாகியிருக்கிறது. நவ் ஷா என்ற தொழில்முனைவோர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் வீடியோவில், ஊபர் வாகனத்தை ஓட்டும் வயதான ஓட்டுநர், ஆண்டு... மேலும் பார்க்க