ஜந்தர் மந்தர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து: சுப்ரீம் கோ...
`மேகேதாட்டுவில் அணை கட்டக் கூடாது!’ - புதுச்சேரி சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேறிய தீர்மானம்
மேகேதாட்டுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவர் நாஜிம், தி.மு.க எம்.எல்.ஏக்கள் செந்தில்குமார், கார்த்திகேயன், த.வெ.க ஆதரவு எம்.எல்.ஏ நேரு, ல.ஜ.க எம்.எல்.ஏ ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் உள்ளிட்டவர்கள் புதுச்சேரி சட்டப்பேரவையில் தனிநபர் தீர்மானம் கொண்டு வந்தனர்.
அதை அரசுத் தீர்மானமாக ஏற்றுக்கொண்டு முன்மொழிந்து பேசிய முதல்வர் ரங்கசாமி, ``புதுச்சேரி மாநில மக்களின் நலனுக்கு எதிராகவும், உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்ட காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்புக்கு மாற்றாகவும் மேகேதாட்டுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது. மேலும், அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் நடவடிக்கைகளுக்கு இந்த சட்டப்பேரவை தனது கண்டனத்தையும், எதிர்ப்பையும் பதிவு செய்கிறது.

மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு எடுத்துள்ள நடவடிக்கை, புதுச்சேரி மாநில மக்களின் நலனுக்கு எதிரானது. புதுச்சேரி உள்ளிட்ட காவிரி பாசன மாநிலங்களின் முன் அனுமதி பெறாமல் மேகேதாட்டுவில் அணை கட்டுவது ஏற்றுக் கொள்ள முடியாது.
அதனால் இந்த விவகாரத்தில் கர்நாடக அரசு மேலும் நடவடிக்கை எதுவும் எடுக்காமல் இருக்க, மத்திய அரசு உடனடி தடை விதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், காரைக்கால் பகுதி விவசாயிகள் நலனைப் பாதுகாக்கவும், காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி புதுச்சேரிக்கு வழங்கப்பட்ட நீராதார உரிமைகளைப் பாதுகாக்கவும், அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஆதரவு அளிப்பதென்று இந்த சட்டப்பேரவை ஒரு மனதாக தெரிவித்துக் கொள்கிறது" என்றார்.















