செய்திகள் :

"ராகுல் காந்தி ஒரு முதிர்ச்சியற்ற அரசியல்வாதி" - பாஜக தலைவர் நிதின் நபின் விமர்சனம்

post image

ராகுல் காந்தி ஒரு முதிர்ச்சியற்ற அரசியல்வாதி என்று பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் விமர்சித்திருக்கிறார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய நிதின் நபினிடம் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் அரசியல் நகர்வு குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.

அதற்கு பதிலளித்த அவர், "மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் அரசின் ஒரு அங்கம் ஆவார்.

ராகுல் காந்தி
காங்கிரஸ் ராகுல் காந்தி

ஆனால், நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் ராகுல் காந்தியின் செயல்பாடுகள் மற்றும் மொழிநடையை உற்று நோக்குங்கள்.

ஒரு எதிர்க்கட்சித் தலைவர், அதுவும் ஒரு தேசியக் கட்சியைச் சேர்ந்தவர் இத்தகைய முறையிலா பேசுவார் ? எப்போதும் ஒரு அராஜக மனநிலையுடன் செயல்படுகிறார்.

நாட்டின் அமைதியைக் குலைக்க முயல்கிறார். ராகுல் ஒரு முதிர்ச்சியற்ற அரசியல்வாதி.

அவரது அரசியல் வளர்ச்சி ஏதோ ஒரு வகையில் முறையாக அமையவில்லை என்றே நான் நம்புகிறேன்.

 நிதின் நபின்
நிதின் நபின்

கார்கே தனது கட்சி பாரம்பர்யத்தின் வழிகாட்டியாக உருவெடுத்து வருகிறார்.

இதற்காக காங்கிரஸ் கட்சியை மக்கள் தண்டித்து வருகின்றனர். என்றாலும் அக்கட்சி இன்னும் பாடம் கற்கவில்லை" என்று கூறியிருக்கிறார்.

நேபாள அரசியல் மாற்றம்: `அமைச்சர்களின் வெளியேற்றமும் மக்களின் கொந்தளிப்பும்!' - Gen Z அரசியல்| அலசல்

Gen Z அரசியல்நேபாளத்தில் கடந்த மார்ச் 5-ம் தேதி நடைபெற்ற பொதுத் தேர்தலில், காத்மாண்டு முன்னாள் மேயரும் ராப் பாடகருமான பாலன் ஷா (பாலேந்திர ஷா) வெற்றிபெற்று மார்ச் 27 அன்று பிரதமராகப் பதவியேற்றார். இந்த... மேலும் பார்க்க

இந்தியா குறித்து ட்ரம்பின் சர்ச்சைக்குரிய பதிவு: "அறியாமை, பொருத்தமற்றது'' - இந்தியா கடும் கண்டனம்

இந்தியா மற்றும் சீனாவை "நரகக் குழி" (Hellholes) என்று அமெரிக்க வானொலி தொகுப்பாளர் மைக்கேல் சாவேஜ் வர்ணித்து, நான்கு பக்கங்கள் கொண்ட ஒரு நீண்ட கட்டுரையைத் தனது சமூக ஊடகத்தில் பதிவிட்டிருந்தார். இது இந்... மேலும் பார்க்க

Iran: "கமேனி வம்சத்தை அடியோடு அழிக்க அமெரிக்காவின் உத்தரவுக்காகக் காத்திருக்கிறோம்" - இஸ்ரேல்

அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது ஒன்றரை மாதமாக நடத்திய தாக்குதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் முன்னெடுத்து வரும் பேச்சுவார்த்தை காரணமாக அமெரிக்கா இந்தப் போர்நிறுத்தத்த... மேலும் பார்க்க

Final Announcement: தமிழகத்தில் வரலாறு காணாத வாக்குப்பதிவு; 85% பதிவாகி புதிய சாதனை!

தமிழ்நாட்டின் 234 தொகுதிகளுக்கு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், இதுவரை இல்லாத வகையில் மிக அதிகப்படியான வாக்குகள் பதிவாகி புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இரவு 8 மணி நிலவரப்படி, மாநிலம் முழுவதும் சராசரியாக... மேலும் பார்க்க