'வந்துருச்சு...வந்துருச்சு மாற்றம் வந்துருச்சு!' - லோனேஷ் லனகராஜின் கூற்றை உண்மை...
MI vs CSK: 'இந்த வெற்றியை நான் அவருக்கே அர்ப்பணிக்கின்றேன்' - கேப்டன் ருதுராஜ் உருக்கம்
ஐபில் தொடரில் நேற்று (ஏப்ரல்23) சென்னை vs மும்பை அணிகளுக்கு இடையிலனா போட்டி ரசிகர்களுக்கு மத்தியில் பெரும் எதிர்பார்ப்புடன் நடந்து முடிந்துள்ளது. இந்த போட்டியில் மும்பை அணியை 103 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, புள்ளி பட்டியலில் 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது சென்னை அணி. இந்த அபார வெற்றிக்கு பின்னர் பேசிய சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், ``முகேஷ் சவுத்ரிக்கு இது கொஞ்சம் கடினமான சூழல்தான். இந்த வெற்றியை நான் அவருக்கே அர்ப்பணிக்கிறேன். இந்த பெருமை அனைத்தும் அவரையே சாரும்.
அனைவரும் சிறப்பாக விளையாடி அவருக்காக இந்த வெற்றியைப் பெற்றுத்தர நினைத்தோம். வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. டாஸ் வென்றதும் முதலில் பேட்டிங் செய்ய வேண்டும் என்பதுதான் எனது உள்ளுணர்வாக இருந்தது. நானும் சஞ்சுவும் பேசிக்கொண்டபோது, பந்து பேட்டிற்கு அவ்வளவு சுலபமாக வரவில்லை என்று நினைத்தோம். அணியில் எல்லோருமே நன்றாகப் பங்களித்தனர். பேட்டிங்கில் வந்த 20 ரன்கள் கூட வெற்றிக்கு உதவியது.
சஞ்சு ஒரு அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி எங்களை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். நாங்கள் நன்றாக விளையாடி வருகிறோம். இப்போதுதான் அனைத்தும் சரியாக அமையத் தொடங்கியிருக்கிறது. எல்லாத் துறைகளிலும் குறைகளைச் சரிசெய்யப் பார்க்கிறோம். முகேஷ், குயிண்டன் டி காக்கை அவுட் செய்தது ஆட்டத்தின் போக்கையே மாற்றியது. அது ஒரு நல்ல தொடக்கத்தைக் கொடுத்தது. அகீல் ஹொசைன் மற்றும் நூர் அகமது போன்றவர்கள் அணியில் இருப்பது ஒரு வரம். அனைவரும் இப்போது செட்டில் ஆகிவிட்டனர். எல்லோரும் நிதானமாகவும் அமைதியாகவும் இருக்கிறார்கள். நாங்கள் ஒவ்வொரு போட்டியையும் பூஜ்ஜியத்தில் இருந்தே தொடங்குகிறோம். ஆடுகளத்தின் தன்மையைப் பொறுத்துச் செயல்படுகிறோம்." என்றார்.
















