PBKS vs LSG: "வரும் போட்டிகளில் சிறந்த அணியாக வலிமையுடன் செயல்படுவோம்!"-கேப்டன் ரிஷப் பண்ட்
ஐபில் தொடரில் நேற்று ( ஏப்ரல் 19) நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் vs லக்னோ அணிகள் மோதின.
இதில் லக்னோ அணியை 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் தொடர்ந்து முதல் இடத்தில் அசைக்க முடியாத அணியாக அமந்துள்ளது பஞ்சாப் அணி. லக்னோ அணி அதே 8வது இடத்தில் நீடிக்கிறது.
போட்டிக்கு பிறகு தோல்வி குறித்து பேசிய கேப்டன் ரிஷப் பண்ட், "தோல்விக்கான காரணத்தை ஒரு குறிப்பிட்ட சூழலை மட்டும் சுட்டிக்காட்டி விவரிப்பது கடினமான ஒன்றாகும்.

பந்துவீச்சாளர்கள் ஓரளவிற்குச் சிறப்பான பங்களிப்பையே வழங்கினார்கள். இருந்தாலும் நாங்கள் இன்னும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய சில பலவீனமான இடங்கள் இருக்கவே செய்கின்றன.
அதே வேளையில், இப்போட்டியின் மூலம் நாங்கள் கற்றுக்கொண்ட நல்ல விஷயங்களும் உண்டு. பேட்டிங் குறித்து நாங்கள் ஆலோசித்த சில விஷயங்கள் களத்தில் நடப்பதை இன்று காண முடிந்தது.
இந்த சாதகமான விஷயங்களை எடுத்து சென்று, வரும் போட்டிகளில் ஒரு சிறந்த அணியாக இன்னும் வலிமையுடன் செயல்படுவோம்.
ஆயுஷ் பதோனியை எவ்வித அழுத்தமுமின்றித் சுதந்திரமாக விளையாடச் செய்ய வேண்டும் என்பதே எங்களது திட்டம் .
இது திடீரென எடுக்கப்பட்ட முடிவு இல்லை அவர் தொடக்க வீரராகக் களமிறங்க வேண்டும் என்பது முதலிலே திட்டமிடப்பட்டது. அதை நாங்கள் மறைமுகமாக வைத்திருந்தோம்.

எங்களின் அணியினரின் திறமை மீது எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது. அதே சமயம், தற்போதைய பஞ்சாப் அணியினரின் அபாரமான ஆட்டத்திற்கு நாம் உரிய அங்கீகாரத்தை வழங்க வேண்டும்.
அவர்கள் அத்தனை நேர்த்தியான கிரிக்கெட்டை இன்று விளையாடினார்கள்." என்று பேசியிருக்கிறார்.





















