செய்திகள் :

திருச்செந்தூர்: ”எங்க தாத்தாவுக்கு ஓட்டு போடுங்கள்” - பேரன்களைக் களமிறக்கிய அனிதா ராதாகிருஷ்ணன்

post image

திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதியில், தொடர்ந்து ஏழாவது முறையாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் களமிறங்கியுள்ளார். தொகுதியில் சில இடங்களில் அவர் மீது மக்களுக்கு அதிருப்தி நிலவி வருகிறது.

அவர் பிரசாரத்திற்குச் சென்ற இடங்களில் பெண்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அனிதா ராதாகிருஷ்ணன்
அனிதா ராதாகிருஷ்ணன்

கடற்கரை கிராமங்கள், இஸ்லாமிய சமூக மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளிலும் இதுவரை தி.மு.க-விற்குச் சாதகமாக கிடைத்து வந்த வாககுகள், தற்போது த.வெ.க பக்கம் திரும்பும் நிலை நிலவுகிறது.

இதனால், தொகுதிக்குள் வாக்காளர்களை சென்டிமென்ட் மூலம் கவர தனது பேரன்களைப் பிரசாரத்தில் களமிறமிறக்கியுள்ளார் அனிதா ராதாகிருஷ்ணன். மீனவ மக்கள் அதிகம் வசிக்கும் மணப்பாடு கிராமப்பகுதியில், திறந்த வாகனத்தில் பிரசாரம் மேற்கொண்டார் அனிதா ராதாகிருஷ்ணன்.

அவருடன் இரண்டு பேரன்களான அத்யந்த் கிருஷ்ணா, ஆதவ் கிருஷ்ணா ஆகிய இருவரையும் அழைத்துச் சென்றிருந்தார். அவர்கள், “எங்கள் தாத்தாவிற்கு ஓட்டு போடுங்கள்; அவர் உங்களுக்கு நல்லதே செய்வார்; அவர் கொடுத்த வாக்கினை மீற மாட்டார்” எனப் பேசினர். அனிதா ராதாகிருஷ்ணனுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். மூவரில் யாருமே அரசியலுக்கு வரவில்லை.

அனிதா ராதாகிருஷ்ணன் பிரசாரம்
அனிதா ராதாகிருஷ்ணன் பிரசாரம்

இதனால், தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டாமலும் இருந்தார். தொகுதிக்குள் நிலவும் அதிருப்தியைச் சரி செய்யவும், வரும் காலங்களில் தனது அரசியல் வாரிசுகள் தயாராக உள்ளனர் என்பதைத் தெரிவிக்கும் வகையிலும், பேரன்களை பிரசாரத்தில் ஈடுபடுத்தியுள்ளார் அண்ணாச்சி என்கின்றனர் அவரின் ஆதரவாளர்கள்.

ஈரான் 'ஏஜென்ட்' ஆக மாறிய அமெரிக்கப் பெண்: கோடிக்கணக்கில் ஆயுத பேரம் - சிக்கியது எப்படி?

ஈரான் அரசுக்காக ரகசியமாகச் செயல்பட்டு, பல கோடி ரூபாய் மதிப்பிலான ஆயுதங்களை கடத்த உதவியதாக ஈரானைப் பூர்வீகமாகக் கொண்ட ஷமிம் மாஃபி அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார். ‘ஹை-ஃபிளையிங்’ (High-Flying) பிச... மேலும் பார்க்க

தி.நகர் தொகுதிக்குத் திருப்பம் தரும் 6 அம்ச திட்டம்! பட்டியலிடும் ராஜா அன்பழகன்

"நம் மாநில நலன், சமூகநீதி, மொழி உரிமை ஆகியவற்றில் சுதந்திரமற்ற தன்மையை உண்டாக்கி மதச்சார்பின்மை கொள்கையைச் சீர்குலைய செய்யும் நோக்கில் ஒன்றிய பி.ஜே.பி அரசு செயல்படுகிறது. அதன் பிடியிலிருந்து நமது நாட்... மேலும் பார்க்க

ஆவடி தொகுதி: “ஒரு லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்’’ - அமைச்சர் சா.மு.நாசர் உறுதி

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், “ஆவடி தொகுதியின் தி.மு.க வேட்பாளரும் அமைச்சர் சா.மு.நாசரை ஒரு லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வையுங்கள்” என்று கூறியுள்ளார். இதையடுத்து ஆவடி தொகுதி வேட்பாளரு... மேலும் பார்க்க

TOUSKA: எச்சரிக்கையை புறக்கணித்த ஈரான்; விளைவு, கப்பலை சிறைபிடித்த அமெரிக்கா - சம்பவத்தின் பின்னணி?

அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தை நடக்கும் என்று எதிர்பார்த்து கொண்டிருந்த நிலையில், தற்போது ஈரானின் கப்பல் ஒன்றை அமெரிக்கா பிடித்து வைத்துள்ளது. ட்ரம்ப் பதிவு இது குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது... மேலும் பார்க்க

"எல்லாருக்கும் சமமான சந்தை வேண்டும்; இல்லையென்றால், மிகப்பெரிய இழப்பைச் சந்தியுங்கள்" - ஈரான்

ஈரான் போர் எதற்கு தொடங்கியது என்று மறந்து, இப்போது 'ஹார்முஸ் ஜலசந்தி'யை மையமாக வைத்து தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்தப் போர் தொடங்கியதில் இருந்து மூடப்பட்டிருந்த ஹார்முஸ் ஜலசந்தி, இப்போது திறப்பு... ம... மேலும் பார்க்க

"மக்களுக்கு என்மீதிருக்கும் நம்பிக்கைதான் எனக்கான வெற்றி"- குன்னம் தொகுதியைத் தக்கவைக்கும் சிவசங்கர்

தமிழ்நாட்டில் தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. பெரம்பலூர் மாவட்டம், குன்னம் சட்டமன்றத் தொகுதியில் வாக்கு சேகரிப்புப் பணிகள் வேகமாக நடைபெற்றுவருகின்றன. தி.மு.க-வின் வேட்பாளராக அங்கு களமாட... மேலும் பார்க்க