செய்திகள் :

வாழ்வில் பிரளயமே வந்தாலும் கவலையில்லை; அபிஷேகத் தேனை உறிஞ்சும் இந்த விநாயகர் சந்நிதிக்கு வாருங்கள்

post image

கும்பகோணத்துக்கு வடமேற்கில் சுமார் 10 கி.மீ. தொலைவில், மண்ணியாற்றங்கரையில் அமைந்துள்ளது திருப்புறம்பியம். வரலாற்றுச் சிறப்பு மிக்கது இந்தத் தலம். இங்கு நடந்த போரில் முதலாம் ஆதித்த சோழன் வெற்றி பெற்று சோழ சாம்ராஜ்யத்தை நிறுவினான்.

இங்கே சோழர்கள் திருப்பணி செய்த ஆலயம் ஒன்று உண்டு. மிகவும் பழமையும் பெருமையும் வாய்ந்த இந்த ஆலயத்தில் இறைவன் சாட்சிநாதராக அருள்பாலிக்கிறார். மேலும் இந்த ஆலயத்தில் அருளும் விநாயகப்பெருமான் பல்வேறு சிறப்புகளை உடையவர். வாருங்கள் அவர் குறித்த அற்புதத் தகவல்களைக் காண்போம்.

பிரளயம் காத்த விநாயகர்
பிரளயம் காத்த விநாயகர்

திருப்புறம்பியம் கோயிலில் முகப்பு மண்டபத்தில் சந்நிதி கொண்டிருக்கும் இந்த விநாயகருக்கு 'பிரளயம் காத்த விநாயகர்' என்பது திருநாமம். இவரை தேனபிஷேகப் பிள்ளையார் என்றும் சிறப்பிக்கிறார்கள் பக்தர்கள்.

காரணம், விநாயகர் சதுர்த்தியின்போது விடிய விடிய இந்தப் பிள்ளையாருக்கு தேனபிஷேகம் நடைபெறும். தேனினும் இனிய பிரணவ ஸ்வரூபனுக்கு, லிட்டர் லிட்டராக, தேனை ஊற்றி அபிஷேகம் செய்வார்கள். ஆனால் எவ்வளவு ஊற்றினாலும்அதில் ஒரு துளிக்கூடக் கீழே வழியாது. விநாயகப் பெருமான் எல்லாவற்றையும் குடித்துவிட்டுப் பிரகாசமாக வீற்றிருப்பார். தேன் எல்லாம் விநாயகர் திருமேனிக்குள் உறிஞ்சப்பட்டு விடும்.

யார் இந்த விநாயகர்... இவர் இங்கே எழுந்தருளியது எப்படி என்பது குறித்து தலபுராணம் சுவாரஸ்யமான புராண சம்பவம் ஒன்றைச் சொல்கிறது.

ஒரு பிரளயத்தின்போது, சிவபெருமானின் ஆணைப்படி ஸ்ரீவிநாயகப் பெருமான் அந்தப் பிரளயத்தை அடக்கிக் காத்தாராம். அதற்கு நன்றிக்கடனாக கடல் பொருட்களால் அதாவது சிப்பி, கிளிஞ்சல், கடல் நுரை போன்ற பொருள்களை வைத்து, தேவேந்திரன் விநாயகர் திருமேனியைப் பிடித்துவைத்து வழிபட்டதாக ஐதீகம்.

ஸ்ரீசாட்சிநாதர்
ஸ்ரீசாட்சிநாதர்

இவரை வழிபட்டால், பிரளயம் போன்று வரும் துன்பங்களையும் சடுதியில் போக்கி நம்மைக் காப்பாற்றுவார். இவரருளால் தேன் போன்று இனிமையான வாழ்வைப் பெறலாம் என்பது ஐதிகம்.

பொதுவாக பிரளய காலத்தில் ஈசனுக்குள்ளே சகலமும் ஒடுங்கும். பிரளயத்தில் இருந்து சகலத்தையும் ஈசன் காத்தருள்வார் என்பார்கள். பிரளயம் காத்த விநாயகரான இவர் ஈசனின் திருப்பணியை இங்கே செய்கிறார் என்கிறார்கள்.

பிரளயம் உண்டானபோது ஏழு கடல் நீரையும் இத்தலத்திலுள்ள கிணற்றில் அடங்கிவிடும்படி விநாயகர் செய்தார். அதனால் தேவர்கள் இந்தக் கணபதியைப் பிரதிஷ்டை செய்து பிரளயம் காத்த விநாயகர் எனப் போற்றினார்.

புறம்- வெளி; பயம்- நீர்; பிரளய வெள்ளம் ஊரில் புகாமல் நின்றமையால் புறம்பயம் (புறம்பியம் என்று மருவிவிட்டது). அதாவது பிரளயத்துக்குப் புறம்பாய் இருந்ததால் இந்த ஊருக்குத் திருப்புறம்பியம் என்று பெயர் ஆனது.

மேலும் இத்தலத்தில் ஈசன் நிகழ்த்திய திருவிளையாடல் முக்கியமானது. பெண் ஒருத்திக்காக இந்தத் தலத்தில் உள்ள லிங்கம், வன்னி மரம், கிணறு, மடைப் பள்ளி அனைத்தும் மதுரைக்குச் சென்று சாட்சி சொன்னதாக திருவிளையாடற்புராணம் கூறுகிறது. எனவே, இறைவன் பெயர் ஸ்ரீசாட்சிநாதர் எனும் சாட்சீச்வரர். அம்பிகை திருநாமம் கரும்படு சொல்லி என்பதாகும்.

கரும்பன்னசொல்லி அம்மை
கரும்பன்னசொல்லி அம்மை

தட்சிணாமூர்த்தியின் 24 முக்கிய தலங்களுள் இதுவும் ஒன்று. கோயிலுக்கு விறகு வெட்டித் தந்த ஏழைக்கு குருவாக தட்சிணாமூர்த்தியே அருள்பாலித்த தலமிது. சனகாதி முனிவர்களுக்கு தட்சிணாமூர்த்தி அக்னி உபதேசம் வழங்கிய தலமும் இது.

இங்கு சாட்சிநாதேஸ்வரர், சட்டநாதர் அருளோடு குருவின் அருளும் நிறைந்து இருப்பதால் இங்கு வந்து வேண்டினால் வழக்குகள் சாதகமாகும். மோதல்கள் சுமுகமாகும். உறவுச் சிக்கல்கள் நீங்கும். சொத்து சம்பந்தமான பிரச்னைகள் உடனடியாகத் தீர்வு பெறும். வாங்குவது விற்பது தொடர்பான இழுபறியும் நீங்கும்.

வெளியே சொல்லமுடியாத அளவுக்கு வாழ்க்கை கசக்கிறதா... இந்த கணேசரின் சந்நிதிக்குச் சென்று வாருங்கள்!

திருப்போரூர் முருகப்பெருமான் கோயில் கொண்டிருக்கும் தலம் என்பது அனைவரும் அறிந்த தகவல். முருகன் சூரபதுமனோடு வான் வெளியில் இந்தத் தலத்தில் யுத்தம் செய்தார் என்பதாக ஐதிகம். எனவே இங்கே சென்றாலே வாழ்வில் பக... மேலும் பார்க்க

திருவாரூர் மாவட்டம், ஆலங்குடி கலங்காமல் காத்த விநாயகர்: தீராத பிரச்னைகளும் தீர்க்கும் கணபதி சந்நிதி!

விநாயகர் தலங்கள் ஒவ்வொன்றும் தனிச்சிறப்பு பெற்றவை. ஆலயம் எதுவாக இருந்தாலும் அங்கே கணபதி குடியிருப்பார் என்பதை நாம் அறிவோம். ஆனால் சில தலங்களில் அந்த கணபதிக்குத் தனிச்சிறப்பு இருக்கும். அவரைத் தவறாமல் ... மேலும் பார்க்க

திருக்கடவூர் கள்ளவாரண பிள்ளையார்: ஆயுள் விருத்தி அருளும் கணபதி சந்நிதி! விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்!

திருக்கடவூர் என்றதும் நமக்கு நினைவுக்கு வருவது அன்னை அபிராமியும் அப்பன் அமிர்தகடேஸ்வரரும்தான். அதே தலத்தில் அருளும் விநாயகப்பெருமான் மிகவும் முக்கியமானவர். அவரைத்தான் முதலில் வணங்க வேண்டும். மேலும் அவ... மேலும் பார்க்க

கோவை, புலியகுளம் ஸ்ரீ முந்தி விநாயகர்: நாகதோஷம் தீரும்... விரைவில் வேண்டுதல் நிறைவேறும்!

விநாயகரை வழிபட்டால் வினைகள் தீரும். எளிமையாக மனம் உருகி அழைத்தாலே ஓடிவந்து காத்திடுபவர் விநாயகர். அதனால்தான் ஊரெங்கும் தெருவுக்குத் தெரு விநாயகர் கோயிலை பிரதிஷ்டை செய்து மக்கள் வழிபட்டு வருகிறார்கள். ... மேலும் பார்க்க

திருச்சி பீமநகர் வேணுகோபால சுவாமி திருக்கோயில்: பிரச்னைகள் தீர்க்கும் ரோகிணி நட்சத்திர வழிபாடு!

திருச்சியில் ஸ்ரீரங்கம், திருவானைக்காவல், மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோயில் என்று பல்வேறு ஆலயங்கள் அமைந்திருக்கின்றன. இவை தவிர்த்தும் அபல நூறு பழைமையான சிறப்புடைய ஆலயங்கள் பல உண்டு. அவற்றில் ஒன்று ... மேலும் பார்க்க

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஸ்ரீஉக்தவேதீஸ்வரர்: திருமண வரம் தரும் தலத்தில் சுயம்வரபார்வதி ஹோமம்!

மயிலாடுதுறை கும்பகோணம் பகுதிகளைச் சுற்றிலும் புண்ணியத் தலங்கள்தான். பார்க்கும் இடங்கள் எல்லாம் ஆலயங்கள்தான். இதில் சிறப்பு என்னவென்றால் ஒவ்வோர் ஆலயமும் ஒரு சிறப்பினையும் புராண வரலாற்றையும் உடையது. அப்... மேலும் பார்க்க