செய்திகள் :

"விசிக தோற்றதற்கு திமுக சொன்ன காரணம்; வேட்பாளர்களைத் தேர்வு செய்ய சுதந்திரம் வேண்டும்" - திருமா

post image

திமுக கூட்டணி 'வலிமை'யான கூட்டணி என்று சொல்லிக்கொண்டாலும், விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட சில கட்சிகளில் தொகுதி பங்கீட்டில் இன்னமுமே இழுப்பறி நீடித்து வருகிறது.

இந்த நிலையில், வேட்பாளர் நேர்காணலுக்கான வீடியோவை வெளியிட்டுள்ளார் திருமாவளவன். அதில் தொகுதி பங்கீடு குறித்து அவர் பேசியிருப்பதாவது...

"மக்கள் நலக்கூட்டணியில் இருந்தபோது 25 தொகுதிகள் கிடைத்தது. அப்போது என்னால் சுதந்திரமாக முடிவெடுக்க முடிந்தது.

திருமாவளவன்
திருமாவளவன்

10-க்கும் குறைவான தொகுதிகளில் போட்டியிடும் போது, நீண்ட காலமாக காத்திருப்பவர்களையும் கருத்தில் கொள்ள வேண்டியதாக இருக்கிறது.

மேலும், அந்தந்த தொகுதிகளைச் சேர்ந்த வேட்பாளர்களைத் தேர்வு செய்ய வேண்டும் என்பதும் கருத்தாக உள்ளது. அதை நாம் ஒவ்வொரு தேர்தல்களிலும் எதிர்கொள்கிறோம்.

ஏன் தோற்றோம்? -திமுக பதில்

'அரக்கோணத்தில் ஏன் தோற்றோம்?' என்று கேட்டபோது, திமுக, 'நீங்கள் வெளியில் இருந்து ஆளை இறக்குகிறீர்கள். அந்த ஊரை சேர்ந்தவரை வேட்பாளராக நிறுத்தவில்லை' என்று கூறியது. வானூர் தோல்விக்கும் இது தான் கூறப்பட்டது.

ஆனால், வேடிக்கை என்னவென்றால், நாம் போட்டியிட்ட 6 தொகுதிகளிலுமே தமிழ்நாட்டில் உள்ள வெவ்வேறு பகுதி ஆள்களைத் தான் போட்டியிட வைத்தோம்.

வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பதில் கட்சி தலைமைக்கு நெருக்கடி, அழுத்தம் இல்லாமல் சுதந்திரத்தோடு முடிவு எடுக்கும் வாய்ப்பை இயக்கத் தோழர்கள் நமக்கு வழங்க வேண்டும்.

தொகுதி பங்கீட்டை போராடி பெற வேண்டியதாக இருக்கிறது. தேர்தலில் வேட்பாளர்கள் செலவு செய்ய வேண்டிய நிதியை என்னுடைய தோழமைகளிடம் பேசி பெறுகிறேன். நெருக்கடிக்கு நடுவே வேட்பாளரை தேர்ந்தெடுக்கிறேன். இப்படி அனைத்தையும் நானே செய்கிறேன்.

25 ஆண்டுகளைக் கடந்தும், இந்தக் களம் இன்னும் நமக்கு புதிதாகவே இருக்கிறது.

தேர்தல்
தேர்தல்

வளர்ச்சிக்கு தடை

நாம் எந்தவிதத்திலும் வலிமை பெற்றுவிடக் கூடாது என்று நினைப்பவர்களின் எண்ணிக்கை தான் இங்கே அதிகம்... அரசியல் சக்தியாக பரிணமித்துவிடக்கூடாது என்று எண்ணக்கூடியவர்கள் தான் இங்கே பெரும்பான்மை.

இவர்கள் வளர வேண்டும் என்று ஊக்குவிக்க பெரிதாக யாரும் இல்லை என்பது தான் யதார்த்தம்.

இருந்தாலும், 25 ஆண்டுகளாக தாக்குப்பிடித்து நிற்கிறோம். தவிர்க்க முடியாத சக்தியாகவும் உருமாறி உள்ளோம்.

ஊடகங்கள் திருமாவளவனை 'கேம் சேஞ்சர்' என்று சொல்கின்றன... திருமாவளவன் நினைத்தால் தமிழ்நாடு அரசியலின் திசை வழிப்போக்கை ஒரு சில நிமிடங்களில் மாற்றிவிட முடியும் என்று சமூக வலைதளங்களில் பேசுகின்றனர்.

ஆனாலும் கூட, அப்படிப்பட்ட ஒரு அரசியலை நமக்கு செய்ய விருப்பமில்லை. இங்கு புதிய மரபு மற்றும் நாகரிகமான அரசியல் செய்து வருகிறோம்.

திருமாவளவன்
திருமாவளவன்

இந்த அணுகுமுறைகள் எல்லாம் சரி வராது என்று பலர் நினைக்கலாம். அனைவரும் அறிந்த பல வாய்ப்புகள் வந்தும் நாம் முன்னிறுத்தக்கூடிய அரசியலை பாதுகாக்க... விசிக வலிமையை தக்க வைக்கவும் இன்று நாம் மத சார்பற்ற கூட்டணியில் இணைந்து நிற்கிறோம்.

தொகுதி பங்கீட்டில் பெருந்தன்மையாக நடந்துகொள்கிறோம். தற்காலிகமாக வெற்றிகரமான அணுகுமுறை என்று தோன்றினாலும், காலத்திற்கும் போற்றக்கூடிய வெற்றிகரமான யுத்தி.

அதனால், எத்தனை தொகுதிகளைப் பெற்றாலும் நம்முடைய எதிர்காலத்தோட வெற்றி. இன்று நம்பகத்தன்மை இழந்து பெறும் வெற்றி ஆகும்.

இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் வரும். அதற்காக இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை நமது யுக்தியை மாற்றி, 'இது தான் வெற்றிகரமான யுக்தி' என்று நினைத்துக்கொண்டிருக்க முடியாது.

எனவே, மிகக் குறைவான எண்ணிக்கையைப் பெற்றால் கூட, நமது அரசியல் நிலைப்பாட்டை மேலும் வலிமையாக்குவதாக இருக்கும்". என்றிருக்கிறார்.

”கூட்டணிக்காக விஜய் வீட்டு வாசலைத் தட்டிக் கொண்டிருக்கிறார் பழனிசாமி” - ஓ.பன்னீர்செல்வம் தாக்கு

விருதுநகர் மாவட்டம், ஶ்ரீவில்லிபுத்தூரில் தி.மு.க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்நடைபெற்றது. அமைச்சர்கள் சாத்தூர் ராமசந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் தலைமை வகித்தனர். இதில், முன்னாள் முதல்வர்ஓ.பன்னீர்செ... மேலும் பார்க்க

"அவர் இங்கு வந்திருக்கிறார் என்பதை அறிந்து உடனே வந்தேன்" - சிபிஎம் அலுவலகத்தில் வைகோ; பின்னணி என்ன?

திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இடையே தொகுதிப் பங்கீட்டில் இழுப்பறி நீடித்து வருகிறது. இந்தச் சமயத்தில் இன்று காலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ... மேலும் பார்க்க

58 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த ஜோதிடரை, கடவுளுடன் ஒப்பிட்ட பெண்கள் கமிஷன் தலைவி! பகீர் பின்னணி

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் அசோக் கராட் என்பவர் தன்னிடம் ஜோதிடம் கேட்க வரும் பெண்களின் குறைகளை நிவர்த்தி செய்வதாகவும், மிரட்டியும் பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்டார். தன்னை ஓய்வு பெற்ற ... மேலும் பார்க்க

`இனி அமெரிக்கா அதை செய்யாது, இலக்கை நெருங்கி விட்டோம்' - ஈரான் போரிலிருந்து வெளியேறுகிறதா அமெரிக்கா?

அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து ஈரானில் நடத்தி வரும் போர் மூன்றாவது வாரத்திற்கு வந்திருக்கிறது. இத்தாக்குதலை மேலும் தீவிரப்படுத்த அமெரிக்கா 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடற்படை வீரர்களை கப்பல்களில் அனுப... மேலும் பார்க்க