செய்திகள் :

விருதுநகர்: வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஸ்ரீவில்லிபுத்தூர் ராஜகோபுரம்; சோதனை ஓட்டம் வெற்றி!

post image

196 அடி உயரம் உடைய ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கோபுரத்திற்கு ஈடு இணை மண்ணுலகத்தில் ஏதுமில்லை என்றும், விண்ணுலகத்தில் உள்ள மேருமலைக்கு ஒப்பானது என்றும் கம்பர் பாடியுள்ளார்.

இத்தகைய பெருமையும் சிறப்பையும் உடைய ஆண்டாள் கோயில் கோபுரம் ஜொலிக்கும் வகையில், சுமார் 2 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் காண்பவர் கண்களைக் கவரும் வகையில் பல வண்ண விளக்குகள் அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஸ்ரீவில்லிபுத்தூர் ராஜகோபுரம்
வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஸ்ரீவில்லிபுத்தூர் ராஜகோபுரம்

பல வண்ணங்களில் ஜொலித்த கோபுரம்:

இந்நிலையில், ராஜகோபுரத்தில் வண்ண விளக்குகளை மிளிர வைத்து சோதனை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோபுரம் பல வண்ண நிறங்களில் ஜொலித்தது. இரவு நேரத்தில் பல வண்ணங்களில் ஜொலித்த ஸ்ரீவில்லிபுத்தூர் ராஜகோபுரம் காண்போரின் கண்களுக்கு விருந்தாக அமைந்தது.

சிவப்பு, பச்சை, நீலம், மஞ்சள் எனப் பல்வேறு வண்ணங்களில் மாறி, மாறி ஒளிர்ந்த கோபுரம், வானளாவிய அழகுடன் காட்சியளித்தது.

ஸ்ரீவில்லிபுத்தூர் ராஜகோபுரம்
ஸ்ரீவில்லிபுத்தூர் ராஜகோபுரம்

சிறப்பு அம்சங்கள்:

இனி இரவு நேரங்களில் இந்தக் கோபுரம் வண்ண விளக்குகளுடன் ஒளிர்வதால், ஸ்ரீவில்லிபுத்தூர் நகரம் மேலும் சுற்றுலாத் தலமாக பிரபலமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்துள்ளதால், விரைவில் இந்த வசதி முழுமையாகச் செயல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நினைத்த காரியங்கள் வெற்றி பெற வரமளிப்பாள் காரப்பாக்கம் கங்கை அம்மன் திருவிளக்கு பூஜை; அனுமதி இலவசம்!

2025 டிசம்பர் 19-ம் தேதி வெள்ளிக்கிழமை சென்னை ஓ.எம்.ஆர் காரப்பாக்கம் கங்கை அம்மன் கோயிலில் மாலை 6 மணி அளவில் சக்தி விகடன் வழங்கும் விளக்கு பூஜை நடைபெற இருக்கிறது. இதில் நீங்களும் கலந்து கொள்ளலாம். அது... மேலும் பார்க்க

மகாருத்ர ஹோமம்: 2026 உங்களுக்கு அதிர்ஷ்ட ஆண்டாக அமையும்! ஆயுள் ஆரோக்கியம் ஐஸ்வர்யம் பெருகும் அதிசயம்

மகாருத்ர ஹோமம்: 2026 உங்களுக்கு அதிர்ஷ்ட ஆண்டாக அமையும்! ஆயுள் ஆரோக்கியம் ஐஸ்வர்யம் பெருகும் அதிசயம்! 2026 ஜனவரி 2-ம் தேதி மார்கழி ஆருத்ரா அபிஷேக நன்னாளில் கோவை ஆர்.எஸ்.புரம் ஸ்ரீஅண்டவாணர் திருக்கோயில... மேலும் பார்க்க

திருப்பூர்: மதநல்லிணக்கத்தைப் போற்றும் `தர்கா - கார்த்திகை தீப' வழிபாடு!

திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான பிரச்னை எழுந்துள்ள நிலையில், மதநல்லிணக்கத்தைப் போற்றும் வகையில், திருப்பூர் அருகே உள்ள ஒரு தர்காவில் கார்த்திகை தீபம் ஏற்றி வழிபாடு நடைபெற்று வ... மேலும் பார்க்க

திருவண்ணாமலை: அதிகாலை ஏற்றிய பரணி தீபம்; மாலை மலை உச்சியில் மகாதீபம்!

திருக்கார்த்திகை தீபம் என்றாலே திருவண்ணாமலைதான் நம் நினைவுக்கு வரும். நினைத்தாலே முக்தி தரும் இந்த அற்புதமான தலத்தில் ஏற்றப்படும் பரணி தீபம் மற்றும் மகாதீபம் ஆகியவற்றைக் காண லட்சக்கணக்கில் பக்தர்கள் த... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஆண்டாள் கோயிலில் கைசிக ஏகாதசி சிறப்பு வைபவம்; தமிழக, கேரள பக்தர்கள் தரிசனம்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் 108 வைணவ திவ்ய தேசங்களில் மிகவும் சிறப்புப் பெற்ற திருத்தலமாகும். இது பழமையானதும், ஆழ்வார்களுள் பெரியாழ்வார் மற்றும் ஆண்டாள் அவதரித்த திருத்தலமும் ஆகும். தமிழக அ... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம்: `மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றலாம்' - உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் தரப்பில் நீண்டகாலமாக வலியுறுத்தி வந்த நிலையில், அது குறித்தான வழக்கில் 'மலை உச்சியில் க... மேலும் பார்க்க