செய்திகள் :

'ஹவுஸ்புல்' காக்ரோச் போராட்டம்; தி.நகரில் திரளும் மாணவர்கள்! - பாஜக அலுவலகத்துக்கு பலத்த பாதுகாப்பு!

post image

டெல்லியின் காக்ரோச் ஜனதா பார்ட்டியின் போராட்டம் தீவிரமடைந்திருக்கும் நிலையிலும், சென்னையிலும் காக்ரோச்களின் போராட்டம் வேகமெடுக்க தொடங்கியிருக்கிறது.

Cockroach Protest
Cockroach Protest

டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த ஜூலை 20 ஆம் தேதி போராடிய மாணவர்களை காவலர்கள் தடியடி நடத்தி கலைத்திருந்தனர். இதற்கு கண்டனம் தெரிவித்து மாணவர்களுக்கு ஆதரவாக கம்யூனிஸ்ட் கட்சிகளின் மாணவர் அமைப்புகள் மற்றும் காக்ரோச் பார்ட்டியினர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பாலன் இல்லத்தில் போராட்டத்தை தொடங்கினர்.

பகல் வேளைகளில் குறைவான மாணவர்களே போராடினாலும் மாலையிலிருந்து பாலன் இல்லம் நோக்கி நூற்றுக்கணக்கான மாணவர்கள் வரத் தொடங்குகின்றனர். இன்று (ஜூலை 22) இரவு மட்டும் கிட்டத்தட்ட 1000 மாணவர்களும் இளைஞர்களும் பாலன் இல்லத்தில் கூடியிருந்தனர். நடனம், பாடல், நாடகம், மீம்ஸ் என விதவிதமான கலைகளின் வழி நீட்டுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.

House Full Board
House full Board

இன்ஸ்டா இன்ப்ளூயன்சர்களும் போராட்டத்துக்கு வந்து ரீல்ஸ்களை வெளியிட தொடங்கியிருப்பதால், சமூகவலைதளங்களிலும் போராட்டம் வேகமாக பரவி வருகிறது. அதிகப்படியான இளைஞர்கள் கூடியதால் பாலன் இல்லத்தின் ஒரு பக்கத்தில் ஹவுஸ்புல் போர்டே மாட்டி வைத்திருக்கின்றனர். நாளுக்கு நாள் இளைஞர்களின் வருகை அதிகரிப்பதால் காவல்துறையினர் அதிகளவில் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர். உளவுத்துறையினரும் ஸ்பாட்டில் அதிக எண்ணிக்கையில் கூடி போராட்டத்தின் போக்கை நோட் போட்டுக் கொண்டிருக்கின்றனர்.

பாலன் இல்லம் அருகேயே பாஜக அலுவலகமும் இருப்பதால் முன்னெச்சரிக்கையாக அந்த அலுவலகத்துக்கும் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.

த.வெ.க-வில் இணைந்தார் மூத்த வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன்!

சென்னை உயர் நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் ந.ராஜா செந்தூர் பாண்டியன், தமிழக வெற்றிக் கழகத்தில் (த.வெ.க.) இணைந்துள்ளார். தமிழக மின்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் முன்னிலையில் அவர் கட்ச... மேலும் பார்க்க

மாணவர்கள் போராட்டம்: `ஆணி லத்தி... கற்கள் நிரம்பிய லாரி' - டெல்லி நீதிமன்றத்தில் பரபரத்த வாதம்!

காக்ரோச் ஜனதா கட்சி முன்னெடுத்த போராட்டம் தற்போது மாணவர்கள் போராட்டமாக மாறியிருக்கிறது. மத்தியக் கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும், நீர் தேர்வால் தற்கொலை செய்துகொண்டவர்களுக்கு... மேலும் பார்க்க

``முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயர் மாற்றம்" - அரசாணை வெளியிட்ட தமிழ்நாடு அரசு!

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக இருந்தபோது கொண்டு வந்த முதலமைச்சர் காலை உணவு திட்டத்தின் பெயரை 'பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம்' என தவெக அரசு பெயர் மாற்றம் செய்துள்ளது. இது தொடர்... மேலும் பார்க்க

`பல ஆண்டுகளாக நீட் தேர்வுக்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கிறேன்; ஆனால்...' - அண்ணாமலை கருத்து!

நீர் தேர்வு வினாத் தாள் கசிவு, அரசுத் தேர்வு குளறுபடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து டெல்லியில் மாணவர்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். போராட்டத்தைக் கலைக்க பா.ஜ.க அரசு மாணவர்கள்... மேலும் பார்க்க