செய்திகள் :

ஃபேஸ்புக்கில் பிரதமர் மோடி மீதான விமர்சனங்கள்; மெட்டா இந்தியா தலைவர் மீது வழக்கு பதிவு!

post image

ஐதராபாத்தில் மெட்டாவின் இந்திய தலைவர் அருண் ஶ்ரீனிவாஸ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஏன்?

சில நாள்களுக்கு முன்பு, டெல்லி ஜந்தர் மந்தரில் வினாத்தாள் கசிவிற்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டம் அனைவரும் அறிந்ததே.

இந்தப் போராட்டத்தின் போது, பலரும் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமில் இந்திய பிரதமர் மோடியை விமர்சித்து, கேலி, கிண்டல் செய்து வீடியோக்கள் பதிவு செய்திருந்தனர்.

அடுத்து என்ன?

இந்த வழக்குப் பதிவையடுத்து, மெட்டா பிளாட்ஃபார்ம்ஸ் (META.O) நிறுவனத்திற்கு ஐதராபாத் போலீஸார் நோட்டீஸ் அனுப்ப உள்ளனர்.

பேஸ்புக்
பேஸ்புக்

ஏன் அருண் ஶ்ரீனிவாஸ் மீது வழக்குப் பதிவு?

இந்த ஆண்டு இந்திய அரசு இணையதள உள்ளடக்க விதிகளை மிகவும் கடுமையாக்கி உள்ளது.

அதன் படி, பயனர்கள் பதிவிடும் கருத்துகளுக்கு, அந்தச் சமூக வலைதளங்களும் பொறுப்பேற்க வேண்டும்.

அதன் அடிப்படையில், பயனர்களின் கருத்துகளுக்கு அந்தத் தளங்களின் உயர் அதிகாரிகளின் பொறுப்புகளும் அதிகரிக்கிறது.

இதனால்தான், அருண் ஶ்ரீனிவாஸ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

சர்வதேச நிறுவனத்தின் மூத்த அதிகாரி மீது தனிப்பட்ட முறையில் வழக்குப் பதிவு செய்வது மிக மிக அரிதானது.

பின்னணி - இதுவாக இருக்குமோ?

சமீபத்தில் மோடி பதிவிட்ட வீடியோ ஒன்றை ஃபேஸ்புக் தற்காலிகமாக நீக்கியது. இதற்கு இந்தியத் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மெட்டா அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பியது.

ஆனால், 'அது தற்செயலாக நடந்த முடக்கம்' என்று மெட்டா நிறுவனம் விளக்கியது.

ஒருவேளை, இந்தச் சம்பவத்தினால்கூட, மெட்டா நிறுவனத்தின் இந்திய தலைவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கலாமோ என்றுகூட சந்தேகிக்கப்படுகிறது.

``நான் சங்கியா, காங்கிரஸா? இல்லை, நான் இவள்" - சோனம் வாங்சுக்கின் மனைவி பதில்

நீட் வினாத்தாள் கசிவிற்குப் பொறுப்பேற்று, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று இந்திய செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக் 26 நாள்கள் உண்ணாவிரதப் போராட்டம் இருந்தார். அவர் உடல்நி... மேலும் பார்க்க

விஜய்க்கு நோ சொன்ன சிவக்குமார்; தமிழ்நாட்டிலேயே கிளம்பிய எதிர்ப்பு - என்ன செய்யப் போகிறது தவெக அரசு?

காவிரி நீர், மேகதாது விவகாரம் உள்ளிட்டவை குறித்து பேச்சுவார்த்தை நடத்த தமிழ்நாடு முதல்வர் விஜய், வரும் ஆகஸ்ட் 3-ம் தேதி கர்நாடகா சென்று ந்த மாநில முதலமைச்சர் டி.கே.சிவக்குமாரைச் சந்தித்துப் பேசவிருப்ப... மேலும் பார்க்க

டாஸ்மாக் : `நிபந்தனைகளை மீறினால், உடனடி ரத்து' - செந்தில் பாலாஜிக்கு நிபந்தனைகளுடன் முன்ஜாமீன்!

டாஸ்மாக் மதுபானக் கொள்முதல் மற்றும் பார்கள் ஒதுக்கீடு முறைகேடு வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனைகளுடன் கூடிய முன்ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அவ... மேலும் பார்க்க

தமிழ் கடவுள் டு அஜித்குமார்; புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பிறந்தநாள் வாழ்த்து `அதிரிபுதிரி' பேனர்கள்

முதல்வர் ரங்கசாமி பிறந்தநாள் பேனர்கள்முதல்வர் ரங்கசாமி பிறந்தநாள் பேனர்கள்முதல்வர் ரங்கசாமி பிறந்தநாள் பேனர்கள்முதல்வர் ரங்கசாமி பிறந்தநாள் பேனர்கள்முதல்வர் ரங்கசாமி பிறந்தநாள் பேனர்கள்முதல்வர் ரங்கசா... மேலும் பார்க்க

சேலம்: குடிநீர் முதல் மருத்துவம் வரை; அடிப்படை வசதிகளை எதிர்நோக்கும் ஜருகுமலை மேலூர் - கீழூர் மக்கள்

சேலத்திலிருந்து சில கிலோமீட்டர்கள்... ஆனால் வளர்ச்சியிலிருந்து பல ஆண்டுகள் பின்தங்கிய மலைக் கிராமங்கள்! சேலம் மாவட்டம், ஜருகுமலையில் அமைந்துள்ள மேலூர், கீழூர் ஆகிய மலைக் கிராமங்களில் சுமார் 400 குடும்... மேலும் பார்க்க