செய்திகள் :

``நான் சங்கியா, காங்கிரஸா? இல்லை, நான் இவள்" - சோனம் வாங்சுக்கின் மனைவி பதில்

post image

நீட் வினாத்தாள் கசிவிற்குப் பொறுப்பேற்று, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று இந்திய செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக் 26 நாள்கள் உண்ணாவிரதப் போராட்டம் இருந்தார்.

அவர் உடல்நிலை மோசமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், மத்திய அமைச்சர்கள் ஜே.பி.நட்டா, ஜித்தேந்திர சிங் பேசிய பின், உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டார் சோனம் வாங்சுக்.

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு சமூக வலைதளங்களில் சோனம் வாங்சுக்கையும், அவரது மனைவியையும் 'சங்கி' என்று கூறி விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

சோனம் வாங்சுக் மனைவி கீதாஞ்சலி
சோனம் வாங்சுக் மனைவி கீதாஞ்சலி
இதற்குப் பதிலளிப்பதுபோல, சோனம் வாங்சுக்கின் மனைவி கீதாஞ்சலி ஆங்மோ தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்...

"நான் பா.ஜ.க-வும் இல்லை, காங்கிரஸும் இல்லை. சங்கியும் இல்லை, கம்யூனிஸ்ட்டும் இல்லை. இடதுசாரியும் இல்லை, வலதுசாரியும் இல்லை.

சமதர்மவாதியும் இல்லை, முதலாளித்துவவாதியும் இல்லை. தாராளவாதியும் இல்லை, பழமைவாதியும் இல்லை.

தலித்தும் இல்லை, பிராமணரும் இல்லை. சமணரும் இல்லை, பௌத்தரும் இல்லை, இந்துவும் இல்லை. பஞ்சாபியும் இல்லை, ஒடியாவும் இல்லை, லடாக்கியும் இல்லை.

நான் 'இவள்'

நான் இவர்கள் அனைவருக்கும், அதற்கு மேலும்கூட. அனைத்துக் கோட்பாடுகளுக்கும் ("isms") அப்பாற்பட்டவள். எதிலிருந்தும் சிறந்ததை எடுத்துக்கொண்டு, தேவையில்லாததை விட்டுவிடுபவள்.

மனிதனால் உருவாக்கப்பட்ட குறுகிய எல்லைகளுக்குள் நம்மை நாமே அடைத்துக்கொள்ளும்போது, நமது எல்லையற்ற ஆற்றலை நாமே குறைத்துக்கொள்கிறோம்.

நமது உண்மையான அடையாளம் அரசியல், சமூகம், மதம் அல்லது எந்தவொரு கோட்பாட்டையும் சார்ந்ததல்ல. அது வெறும் உணர்வு நிலையின் வடிவம் மட்டுமே" என்று பதிவிட்டுள்ளார்.

காவிரி விவகாரம்: ``மாநில உரிமைகளை அடகு வைத்துவிட்டு இன்னும் மௌனம்" - கனிமொழி

காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவது தொடர்பான பிரச்னை சமீபத்தில் தமிழ்நாடு, கர்நாடகாவிற்கு இடையே எழுந்து வருகிறது. இந்தத் திட்டத்திற்கு தமிழ்நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது. தமிழ்நாடு... மேலும் பார்க்க

ஃபேஸ்புக்கில் பிரதமர் மோடி மீதான விமர்சனங்கள்; மெட்டா இந்தியா தலைவர் மீது வழக்கு பதிவு!

ஐதராபாத்தில் மெட்டாவின் இந்திய தலைவர் அருண் ஶ்ரீனிவாஸ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏன்? சில நாள்களுக்கு முன்பு, டெல்லி ஜந்தர் மந்தரில் வினாத்தாள் கசிவிற்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டம... மேலும் பார்க்க

விஜய்க்கு நோ சொன்ன சிவக்குமார்; தமிழ்நாட்டிலேயே கிளம்பிய எதிர்ப்பு - என்ன செய்யப் போகிறது தவெக அரசு?

காவிரி நீர், மேகதாது விவகாரம் உள்ளிட்டவை குறித்து பேச்சுவார்த்தை நடத்த தமிழ்நாடு முதல்வர் விஜய், வரும் ஆகஸ்ட் 3-ம் தேதி கர்நாடகா சென்று ந்த மாநில முதலமைச்சர் டி.கே.சிவக்குமாரைச் சந்தித்துப் பேசவிருப்ப... மேலும் பார்க்க

டாஸ்மாக் : `நிபந்தனைகளை மீறினால், உடனடி ரத்து' - செந்தில் பாலாஜிக்கு நிபந்தனைகளுடன் முன்ஜாமீன்!

டாஸ்மாக் மதுபானக் கொள்முதல் மற்றும் பார்கள் ஒதுக்கீடு முறைகேடு வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனைகளுடன் கூடிய முன்ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அவ... மேலும் பார்க்க

தமிழ் கடவுள் டு அஜித்குமார்; புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பிறந்தநாள் வாழ்த்து `அதிரிபுதிரி' பேனர்கள்

முதல்வர் ரங்கசாமி பிறந்தநாள் பேனர்கள்முதல்வர் ரங்கசாமி பிறந்தநாள் பேனர்கள்முதல்வர் ரங்கசாமி பிறந்தநாள் பேனர்கள்முதல்வர் ரங்கசாமி பிறந்தநாள் பேனர்கள்முதல்வர் ரங்கசாமி பிறந்தநாள் பேனர்கள்முதல்வர் ரங்கசா... மேலும் பார்க்க