செய்திகள் :

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் ஊதியம், இதர செலவுக்கு மாநில அரசின் நிதி ஒதுக்கீடு!

post image

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் ஊதியம், மாணவர்களின் செலவுக்கு மாநில அரசு தரப்பில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

தேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு ஏற்காததால், மாநில அரசுக்கு ஒதுக்கீடு செய்யப்பட வேண்டிய கல்வி நிதியை மத்திய அரசு ஒதுக்காமல் இருக்கிறது.

இதன்காரணமாக தமிழகத்தில் பணிபுரியும் அரசு ஒப்பந்த ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு இரண்டு மாதங்களாக சம்பள நிலுவையில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிக்க : பட்ஜெட்: பெண்கள் பெயரில் சொத்துகள் வாங்கினால் 1% பதிவுக் கட்டணம் குறைப்பு!

இந்த நிலையில், ஆசிரியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு தமிழக அரசின் நிதியில் இருந்து சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சட்டப்பேரவை அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது:

”புதிய கல்விக் கொள்கையை ஏற்காததால் மாநிலத்திற்கு வழங்கப்பட வேண்டிய ரூ.2,152 கோடி நிதியை மத்திய அரசு விடுவிக்காமல் ஏமாற்றியுள்ளது.

மத்திய அரசு தேவையான நிதியை வெளியிடவில்லை என்றாலும், அரசுப் பள்ளி மாணவர்களின் நலனுக்காகவும், ஆசிரியர்களின் சம்பளத்திற்காகவும், பிற செலவுகளுக்காகவும் மாநில அரசு தனது சொந்த நிதியை ஒதுக்கிடு செய்துள்ளது” எனத் தெரிவித்தார்.

மார்ச் 27, 28-ல் 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும்!

மார்ச் 27, 28 தேதிகளில் தமிழகத்தில் வெப்பநிலை 2 -3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்கும் என்றும் இதனால் ஒருசில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுதொட... மேலும் பார்க்க

பெட்ரோல் நிலையத்தில் தகராறு: ஊழியர் அடித்துக் கொலை!

பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பணியாற்றும் ஊழியருக்கும் லாரி ஓட்டுநர் - கிளீனர் ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஊழியர் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.சூலூர் அருகே கருமத்தம்பட்டி பகுதியில் இருந்து அன்ன... மேலும் பார்க்க

விழுப்புரத்தில் தங்கும் விடுதியில் தீ விபத்து!

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகிலுள்ள தங்கும் விடுதியில் திங்கள்கிழமை மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தரைத்தளம் மற்றும் மூன்று த... மேலும் பார்க்க

2026-ல் தமிழகத்தை ஆளப்போறோம்.. தவெகவின் போஸ்டரால் பரபரப்பு!

கோவை: தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் பொதுக்குழு கூட்டம் விரைவில் நடைபெறவிருக்கும் நிலையில் 2026-ல் தமிழகத்தை ஆளப்போறோம் என்ற வாசகத்துடன் கோவையில் ஒட்டப்பட்டு உள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.நடிக... மேலும் பார்க்க

கடவுள் சரியாகத்தான் இருக்கிறார்; சில மனிதர்கள்தான் சரியில்லை: நீதிபதிகள்

மதுரை: திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பான வழக்கில், கடவுள்கள் எல்லாம் சரியாகத்தான் இருக்கிறார்கள். சில மனிதர்கள்தான் சரியில்லை என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மேலும் பார்க்க

சென்னையில் வேல் யாத்திரை நடத்த அனுமதியில்லை: உச்சநீதிமன்றம்

திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் சென்னையில் வேல் யாத்திரை நடத்த அனுமதி கோரிய மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து இன்று உத்தரவிட்டது. திருப்பரங்குன்றம் மலை குறித்து இருவேறு மதங்களைச் ... மேலும் பார்க்க