செய்திகள் :

அறிஞர் அண்ணா டு விஜயகாந்த் - தலைவர்கள் தேர்தலில் முதன் முதலில் வெற்றி பெற்ற தொகுதி எது தெரியுமா?

post image

தமிழக அரசியலில் கோலோச்சிய முக்கிய தலைவர்கள் எந்த தொகுதியில் முதன் முதலில் வெற்றிபெற்று சட்டமன்றத்திற்குள் நுழைந்தார்கள் என்று தெரியுமா?

திமுக-வை உருவாக்கிய பேரறிஞர் அண்ணா, 1957-ஆம் ஆண்டு காஞ்சிபுரம் தொகுதியில் போட்டியிட்டு முதன்முதலில் சட்டமன்றத்திற்குச் சென்றார்.

கலைஞர்
கலைஞர்

அவரைத் தொடர்ந்து தமிழகத்தின் நீண்டகால முதல்வராக இருந்த கலைஞர் மு. கருணாநிதி அதே வருடத்தில் குளித்தலை தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்குள் நுழைந்தார்.

தொடர்ந்து தமிழக அரசியல் களத்தில் 13 தேர்தல்களில் போட்டியிட்டு ஒருமுறை கூடத் தோல்வியைச் சந்திக்காத ஒரே தலைவர் என்ற வரலாற்றுச் சாதனையையும் கலைஞர் படைத்திருக்கிறார்.

மறுபுறம், தமிழக மக்களின் புரட்சித் தலைவராக உருவெடுத்த எம்.ஜி.ஆர், 1967-ஆம் ஆண்டு திமுக சார்பில் பரங்கிமலை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்றத்திற்குள் சென்றார்.

அவரைத் தொடர்ந்து அதிமுக-வின் தலைமையேற்ற ஜெயலலிதா, 1989-ஆம் ஆண்டு போடிநாயக்கனூர் தொகுதியில் வெற்றி பெற்று தனது முதல் சட்டமன்றப் பயணத்தைத் தொடங்கினார்.

ஜெயலலிதா
ஜெயலலிதா

அந்த சமயத்தில் ஜெ அணி, ஜானகி அணி என்று பிரிந்திருந்ததால் சேவல் சின்னத்தில் தான் ஜெயலலிதா போட்டியிட்டிருந்தார். தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின், 1984-ஆம் ஆண்டு முதன்முதலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு வென்று சட்டமன்றத்திற்குள் நுழைந்தார்.

அதேபோல அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியும் 1989-ஆம் ஆண்டு அதிமுக பிளவுபட்டிருந்த காலகட்டத்தில், ஜெயலலிதா தலைமையிலான அணியின் சார்பில் தனது சொந்த ஊரான எடப்பாடி தொகுதியில் முதன்முதலில் போட்டியிட்டு சட்டமன்றத்திற்குச் சென்றார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

தவிர 2005 ஆம் ஆண்டு கட்சியைத் தொடங்கிய மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், 2006 ஆம் ஆண்டு கடலூர் மாவட்டத்திலுள்ள விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்றத்திற்குச் சென்றார்.

"பெண் தெய்வமான காளியும் கருப்பு உடைதான் அணிந்துள்ளார்.!"- மோடியின் விமர்சனத்திற்கு கனிமொழி பதிலடி

மகளிர் இடஒதுக்கீடு மசோதா மற்றும் தொகுதி மறுவரையறை மசோதா மீதான விவாதம் மக்களவையில் இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது. விவாதங்களுக்கு பிறகு இன்று (ஏப்ரல்.17) மாலை வாக்கெடுப்பு நடைபெறும். அவையில் மூன்றி... மேலும் பார்க்க

அவிநாசி: தேர்தலில் தொடர்ந்து புறக்கணிக்கும் மக்கள், மகளிர் வாக்குகளை கவரும் முயற்சியில் எல்.முருகன்

எல்.முருகனுக்கும் தி.மு.க- வின் இளம் வேட்பாளரான‌ 26 வயதான மருத்துவ பெண்மணி கோகிலாமணிக்கும் நேரடி போட்டி நிலவி வருகிறது. வெற்றியை அடைய இருவரும் தீவிரமாகக் களமாடி வருகின்றனர். எல். முருகன் மத்திய இணை அம... மேலும் பார்க்க

தொகுதி மறுவரையறை: ``முதல்வரே... படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்" - நடிகை குஷ்பு காட்டம்

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் நடந்துவரும் நிலையில், மகளிர் இட ஒதுக்கீடு மசோதா குறித்தும், தொகுதி மறு சீரமைப்பு குறித்தும் விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நடிகையும், பா.ஜ.க நிர்வாகியுமான குஷ்ப... மேலும் பார்க்க

தொகுதி மறுவரையறை: ``இறுதியில் ஓர் அரசியல் மதிப்பிழப்பு நடவடிக்கையாகவே முடியும்" - எம்.பி சசி தரூர்

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தின் இரண்டாம் நாளான இன்று மகளிர் இட ஒதுக்கீடு மசோதா, தொகுதி மறுவரையறை மசோதா, யூனியன் பிரதேசங்களின் தொகுதி மறுவரையறை மசோதான் என மூன்று மசோதாக்கள் விவாதிக்கப்பட்டு வருகிறது. ... மேலும் பார்க்க

மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தென் மாநிலங்களுக்கு தண்டனையா? - நாடாளுமன்றத்தில் கனிமொழி பேச்சு

மகளிர் இடஒதுக்கீடு மசோதா மற்றும் தொகுதி மறுவரையறை மசோதா மீதான விவாதம் மக்களவையில் இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது. விவாதங்களுக்கு பிறகு இன்று (ஏப்ரல்.17) மாலை வாக்கெடுப்பு நடைபெறும். அவையில் மூன்றி... மேலும் பார்க்க