செய்திகள் :

அவிநாசி: தேர்தலில் தொடர்ந்து புறக்கணிக்கும் மக்கள், மகளிர் வாக்குகளை கவரும் முயற்சியில் எல்.முருகன்

post image

எல்.முருகனுக்கும் தி.மு.க- வின் இளம் வேட்பாளரான‌ 26 வயதான மருத்துவ பெண்மணி கோகிலாமணிக்கும் நேரடி போட்டி நிலவி வருகிறது. வெற்றியை அடைய இருவரும் தீவிரமாகக் களமாடி வருகின்றனர்.

எல். முருகன்
எல். முருகன்

மத்திய இணை அமைச்சர், திருப்பூர் மாவட்டம் அவிநாசி (தனி) தொகுதியில் அ.தி.மு.க கூட்டணி சார்பில் பா.ஜ‌.க வேட்பாளராக களமிறங்கியிருக்கும் எல்.முருகன் பா.ஜ.க - வின் முன்னாள் மாநில தலைவர் என மத்திய அரசு மற்றும் பா.ஜ.க- வின் முக்கிய பதவிகளை வகித்தாலும் எல். முருகனுக்கு தேர்தல் அரசியல் வெற்றியாக அமைந்ததில்லை.

கடந்த 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தாராபுரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். இதனைத் தொடர்ந்து நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு தி.மு.க வேட்பாளர் ஆ. ராசாவிடம் தோல்வியைத் தழுவினார். சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில் தொடர்ந்து மக்களால் தொடர்ந்து புறக்கணிப்படுவதால் ஓட்டு அரசியல் பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை என தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் தான், அவிநாசி தொகுதியை விரும்பித் தேர்வு செய்திருக்கிறார். இந்த தேர்தலில் வெற்றிபெற்றாக வேண்டும் என தீவிரமாகக் களமிறங்கியிருக்கும் எல். முருகன், தொகுதியில் உள்ள மகளிர் வாக்குகளை கவர பல்வேறு முறைகளை மேற்கொண்டு வருகிறார் என்கின்றனர் கட்சி நிர்வாகிகள்.

எல். முருகன்

பின்னணி குறித்து நம்மிடம் பகிர்ந்த பா.ஜ.க மகளிர் அணி நிர்வாகி ஒருவர், " வாக்காளர்களுக்கு வெறுமனே நோட்டீஸ் கொடுத்தால் மட்டுமே வெற்றி பெற முடியாது. இதற்காகவே 'வீடு வீடாக மகளிரணி ' என்கிற பெயரில் பா.ஜ.க மகளிர் அணியில் புது குழு உருவாக்கப்பட்டு தீவிர பிரசாரம் செய்து வருகிறோம். மகளிர் அணி சார்பில் தொடர்ந்து ஆலோசனை கூட்டம் நடத்தி வெற்றி வியூகங்களை க வருகிறோம்.

`முத்ரா கடன் திட்டம்', `ஜல்‌ ஜீவன்' போன்ற பிரதமர் மோடி அவர்களின் திட்டங்களை பெண்கள் மத்தியில் கொண்டு சேர்த்து வருகிறோம். மேலும், பா.ஜ.க - வின் சாதனைகள் மற்றும் வருங்கால திட்டங்கள் குறித்தும் இல்லத்தரசிகளிடம் எடுத்துரைத்து வருகிறோம். மகளிர் மத்தியில் இது பெரிய மாற்றத்தை ஏற்படுத்த இருக்கிறது" என்றார். எல்.முருகனின் வியூகம் கைகொடுக்குமா என்பது தேர்தல் முடிவுகளில் தான் தெரியும்.

தமிழகம் சந்தித்த தொங்கு சட்டசபைகள், விஜயகாந்த் வழியில் 'மைனாரிட்டி' ஆட்சிக்கு பாதை போடுகிறாரா விஜய்?

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் நான்கே நாட்கள்தான் இருப்பதால் அனல் பறக்கும் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன அரசியல் கட்சிகள்.தமிழகத்தை அடுத்த ஐந்து ஆண்டுகள் ஆளப் போவது எந்தக் கட்சி? யார் முதல்... மேலும் பார்க்க

”ராகுல்காந்தி சொன்ன அந்த ஒற்றை வார்த்தை”- நெகிழ்ந்த பட்டுக்கோட்டை காங்கிரஸ் நிர்வாகி

காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக துறையூர் உள்ளிட்ட தொகுதிகளில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு ராகுல்காந்தி பிரசாரம் செய்தார். இதற்காக பல மாவட்டங்களைச் சேர்ந்த ... மேலும் பார்க்க

'10 வருஷமா உங்க மனைவிக்கு கிடைக்காத சீட், உங்களுக்கு எப்படி.?'- சுந்தர் சியை சாடிய பிரகாஷ் ராஜ்

மதுரை மத்திய தொகுதி திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை ஆதரித்து நடிகர் பிரகாஷ்ராஜ் பரப்புரை மேற்கொண்டிருக்கிறார். அந்தப் பரப்புரையில் சுந்தர் சி குறித்து பேசிய பிரகாஷ் ர... மேலும் பார்க்க

வேஷ்டி - சட்டையில் பிரதமர் கோவையில் பிரசாரம் | Photo Album

தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரசாரம் பொதுக்கூட்டம் தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரசாரம் பொதுக்கூட்டம் தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரசாரம் பொதுக்கூட்டம் தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல்... மேலும் பார்க்க

"மற்ற நாடுகளை அச்சுறுத்த அவருக்கு எந்த உரிமையும் இல்லை" - ட்ரம்பை சாடிய பிரேசில் அதிபர் லூலா

மற்ற நாடுகளை அச்சுறுத்த அமெரிக்க அதிபருக்கு எந்த உரிமையும் இல்லை என பிரேசில் அதிபர் லூலா ட்ரம்பை சாடியிருக்கிறார். வர்த்தகம் மற்றும் பருவநிலை மாற்றம் போன்ற உலகளாவிய விவகாரங்களில் பிரேசில் அதிபர் லூலாவ... மேலும் பார்க்க

எடப்பாடி: "குறுக்கு வழியில் வெற்றியடைய முயன்றவர்களுக்கு" - சுயேச்சைக்கு விஜய் ஆதரவு

சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் த.வெ.க வேட்பாளராக அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் செய்த அருண் குமாரின் வேட்புமனு தள்ளுபடியானது. பின்னணி குறித்து பல்வேறு சர்ச்சை தகவல்கள் வெளியாகி வருகின்றன. எடப்ப... மேலும் பார்க்க