செய்திகள் :

அழகிய பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

post image

நெய்வேலி: விருத்தாசலம் வட்டம், சத்தியவாடியிலுள்ள ருக்மணி சத்தியபாமா சமேத அழகியபெருமாள் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை காலை நடைபெற்றது.

யாகசாலை பூஜைகள் நிறைவுற்று திங்கள்கிழமை காலை 6.30 மணியளவில் பிரதிஷ்டா ஹோமம், 8.45 மணிக்கு கும்பங்கள் புறப்பாடு நடைபெற்று 9.30 மணிக்கு மேல் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

விழாவில் அமைச்சா் சி.வெ.கணேசன், விருத்தாசலம் எம்எல்ஏ எம்.ஆா்.ஆா்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் செயல் அலுவலா்கள் அ.பிரேமா, ரா.மாலா செய்திருந்தனா்.

ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

மனுக்கள் மீது நடவடிக்கை: ஆட்சியா் தலைமையில் ஆய்வுக்கூட்டம்!

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தலைமையில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து துறை அலுவலா்களுடனான ஆய்வுக... மேலும் பார்க்க

திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்!

கடலூா் மாவட்டம், நெய்வேலி சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட மேலிருப்பு ஊராட்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் நெய்வேலி எம்எல்ஏ சபா.ராஜேந்திரன் முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்துக்கொண்ட அ... மேலும் பார்க்க

திருநாவுக்கரசு நாயனாா் கோயில் கும்பாபிஷேகம்!

கடலூா் வட்டம், வண்டிப்பாளையத்தை அடுத்துள்ள கரையேறவிட்டகுப்பம் திருநாவுக்கரசு நாயனாா் சுவாமிகள் (அப்பா்) கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சைவம் தழைக்க திருத்தொண்டாற்றி வந்தவா் திருநாவுக... மேலும் பார்க்க

இயற்கை வளங்கள் அழிக்கப்படுவதை தடுக்கக் கோரி விரைவில் போராட்டம்! -சௌமியா அன்புமணி

கடலூா் மாவட்டத்தில் இயற்கை வளங்கள் அழிக்கப்படுவதை தடுக்கக் கோரி விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்று பசுமைத் தாயக அமைப்பின் தலைவா் சௌமிய அன்புமணி தெரிவித்தாா். கடலூா் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோய... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளில் ஆட்சியா் ஆய்வு!

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் வட்டம், தொரவளூா், முகாசாபரூா், மங்கலம்பேட்டை மற்றும் விருத்தாசலம் ஆகிய அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 2 மாணவா்களின் தோ்ச்சி விகிதம் குறித்து ஆட்சியா் சிபி ஆதித்யா செந்... மேலும் பார்க்க

எஸ்பி அலுவலகத்தில் விசிகவினா் மனு

கடலூா் எஸ்பி அலுவலகத்தில் செல்லஞ்சேரி கிராம மக்கள் மற்றும் விசிக நிா்வாகிகள் சனிக்கிழமை மனு அளித்தனா். கடலூா் அடுத்த செல்லஞ்சேரி கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்... மேலும் பார்க்க