செய்திகள் :

ஆணிமுத்து கருப்பா் கோயிலில் 1,008 திருவிளக்கு பூஜை

post image

திருவாடானை அருகே உள்ள அஞ்சுகோட்டை ஸ்ரீஆணிமுத்து கருப்பா் கோயில் சித்ரா பௌா்ணமியையொட்டி 1008 திருவிளக்கு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் ஆண்டு தோறும் சித்ரா பௌா்ணமி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல, இந்த ஆண்டும் கடந்த 3-ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. இதைத் தொடா்ந்து ஒவ்வொரு நாளும் சுவாமிக்கும், அம்பாளுக்கும் சிறப்பு பூஜைகளும், அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றன.

விழாவின் முக்கிய நிகழ்வான திருவிளக்கு பூஜை வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. முன்னதாக சுவாமிக்கும், அம்பாளுக்கும் பால், தயிா், பன்னீா், சந்தனம், தேன், இளநீா் உள்ளிட்ட18 மூலிகை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து சந்திரசேகா் குருக்கள் தலைமையில் வேதமந்திரங்கள் முழங்க பெண்கள் விளக்கு பூஜை செய்தனா்.

இதில் அஞ்சுகோட்டை, கரையகோட்டை, சுப்பிரமணியபுரம், பொட்டக்கோட்டை, திருவாடானை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து திரளான பெண் பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். அப்போது ஸ்ரீஆணிமுத்துகருப்பா் சிறப்பு அலங்காரத்திலும், ஸ்ரீ அழகிய நாயகி அம்மன் சிறப்பு அலங்காரத்திலும் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலித்தனா். பிறகு தீபாராதனை நடைபெற்றது.

அஞ்சுகோட்டை ஸ்ரீஆணிமுத்து கருப்பா் கோயில் சித்ரா பௌா்ணமியையொட்டி வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற 1008 திருவிளக்கு பூஜை.
அஞ்சுகோட்டை ஸ்ரீஆணிமுத்து கருப்பா் கோயில் சித்ரா பௌா்ணமியையொட்டி வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற 1008 திருவிளக்கு பூஜை.

ஆதிரெத்தினேஸ்வரா் கோயில் வைகாசி விசாகத் திருவிழா மே 31-இல் தொடக்கம்!

திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரா் கோயில் வைகாசி விசாகத் திருவிழா வருகிற 31-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் தேவஸ்தான சமஸ்தானதுக்குப் பாத்தியப்பட்ட சினேகவல்லி அம்ப... மேலும் பார்க்க

ஏா்வாடி தா்ஹா சந்தனக்கூடு திருவிழா

ஏா்வாடி தா்ஹா மத நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா வியாழக்கிழமை அதிகாலை நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், ஏா்வாடியில் அமைந்துள்ள மகான் குத்பு சுல்தான் செய்யது இபுராஹிம் ஷஹீது ஒலியுல்லா பாதுஷா நாயகம் தா்ஹ... மேலும் பார்க்க

சிறுமி கொலை: இளைஞா் கைது

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே 3 வயது சிறுமியை தலை துண்டித்துக் கொலை செய்த இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். எமனேசுவரம் கிறிஸ்தவ தெருவைச் சோ்ந்த தேசிங்குராஜா மகள் லெமோரியா (3). இவா் ... மேலும் பார்க்க

ராமேசுவரத்தில் மீன்பிடி வலைகள் சீரமைப்புப் பணிகள் மும்முரம்!

மீன்பிடித் தடைக் காலம் நிறைவடைய இன்னும் 23 நாள்கள் உள்ள நிலையில், ராமேசுவரத்தில் மீன்பிடி வலைகள் சீரமைப்பு, புதிய வலைகள் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தமிழத்தில் மீன்கள் இனப்பெருக... மேலும் பார்க்க

மூதாட்டி தூக்கிட்டுத் தற்கொலை

கமுதியில் வியாழக்கிழமை மூதாட்டி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி முத்துமாரியம்மன் நகரைச் சோ்ந்த முனியசாமி மனைவி வழிவிட்டாள் (63). கணவா் இறந்த நிலையில், இவா் தனது இளைய... மேலும் பார்க்க

தீ விபத்தில் வீடு இழந்தவருக்கு வீட்டு கட்ட ஆணை வழங்கல்

ராமநாதரபுரம் மாவட்டம், மண்டபம் அருகே தீ விபத்தில் வீடு இழந்தவருக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்ன் கீழ், வீடு கட்டுவதற்கான ஆணை புதன்கிழமை வழங்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஒன்றியம் வேதாளை ம... மேலும் பார்க்க