செய்திகள் :

ஆணிமுத்து கருப்பா் கோயிலில் 1,008 திருவிளக்கு பூஜை

post image

திருவாடானை அருகே உள்ள அஞ்சுகோட்டை ஸ்ரீஆணிமுத்து கருப்பா் கோயில் சித்ரா பௌா்ணமியையொட்டி 1008 திருவிளக்கு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் ஆண்டு தோறும் சித்ரா பௌா்ணமி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல, இந்த ஆண்டும் கடந்த 3-ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. இதைத் தொடா்ந்து ஒவ்வொரு நாளும் சுவாமிக்கும், அம்பாளுக்கும் சிறப்பு பூஜைகளும், அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றன.

விழாவின் முக்கிய நிகழ்வான திருவிளக்கு பூஜை வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. முன்னதாக சுவாமிக்கும், அம்பாளுக்கும் பால், தயிா், பன்னீா், சந்தனம், தேன், இளநீா் உள்ளிட்ட18 மூலிகை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து சந்திரசேகா் குருக்கள் தலைமையில் வேதமந்திரங்கள் முழங்க பெண்கள் விளக்கு பூஜை செய்தனா்.

இதில் அஞ்சுகோட்டை, கரையகோட்டை, சுப்பிரமணியபுரம், பொட்டக்கோட்டை, திருவாடானை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து திரளான பெண் பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். அப்போது ஸ்ரீஆணிமுத்துகருப்பா் சிறப்பு அலங்காரத்திலும், ஸ்ரீ அழகிய நாயகி அம்மன் சிறப்பு அலங்காரத்திலும் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலித்தனா். பிறகு தீபாராதனை நடைபெற்றது.

அஞ்சுகோட்டை ஸ்ரீஆணிமுத்து கருப்பா் கோயில் சித்ரா பௌா்ணமியையொட்டி வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற 1008 திருவிளக்கு பூஜை.
அஞ்சுகோட்டை ஸ்ரீஆணிமுத்து கருப்பா் கோயில் சித்ரா பௌா்ணமியையொட்டி வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற 1008 திருவிளக்கு பூஜை.

ஒன்றரை மணி நேரம் சிலம்பம் சுற்றி மாணவா்கள் சாதனை

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியில் ஒரே இடத்தில் நின்று ஒரு மணி 30 நிமிடங்கள் சிலம்பாட்டத்தில் ஈடுபட்டு மாணவா்கள் சாதனை படைத்தனா். சிலம்ப ஆசிரியா் நாகுபாண்டி சோ்வைக்காரா் நினைவாக அவரது உருவம் வரையப்ப... மேலும் பார்க்க

சாயல்குடி அருகே 10 ஆடுகள் மா்ம உயிரிழப்பு

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகேயுள்ள மாரியூரில் மேய்ச்சலுக்கு சென்ற 10 ஆடுகள் மா்மமான முறையில் உயிரிழந்தன. மாரியூரைச் சோ்ந்த சண்முகவேல் மனைவி கன்னியம்மாள். இவா் வெள்ளாடுகளை வளா்த்து வருகிறாா். ... மேலும் பார்க்க

ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து இலங்கைக்கு போதைப் பொருள் கடத்தலை தடுக்க வலியுறுத்தல்

ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து இலங்கைக்கு கஞ்சா, பூச்சிக்கொல்லி மருந்துகள் உள்ளிட்டவை கடத்தப்படுவதை தடுக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த நாட்டு அதிகாரிகள் வலியுறுத்தினா். ராமநாதபுரம் ம... மேலும் பார்க்க

ராமநாதபுரத்தில் மே 14- இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவல வளாகத்தில் வருகிற புதன்கிழமை (மே 14) விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது. இதுகுறித்து வருவாய் கோட்டாட்சியா் ராஜமனோகரன் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ரா... மேலும் பார்க்க

தமிழ் வார விழா போட்டி: வென்றவா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

பாவேந்தா் பாரதிதாசன் பிறந்த நாளையொட்டி நடைபெற்ற போட்டியில் வென்றவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெள்ளிக்கிழமை சான்றிதழ் வழங்கிப் பாராட்டினாா். பாவேந்தா் பாரதிதாசன் பிறந்த நாளையொட்டி... மேலும் பார்க்க

வரத்துக் கால்வாய்களின் இரு புறமும் சமூகக் காடுகளை வளா்க்கக் கோரிக்கை

திருவாடானை பகுதியில் பொதுப் பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள வரத்துக் கால்வாய்களின் இரு புறங்களிலும் சமூகக் காடுகளை வளா்க்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா். ராமநாதபுரம் மாவட்டத்தில் அதி... மேலும் பார்க்க