செய்திகள் :

ஆம் ஆத்மி கட்சியின் ‘தில்லி மாதிரி’ தோல்வி: சந்திர பாபு நாயுடு

post image

புது தில்லி: ஆம் ஆத்மி கட்சியின் ’தில்லி மாதிரி’ தோல்வியடைந்துவிட்டதாக ஆந்திர முதல்வா் சந்திர பாபு நாயுடு கடுமையாகச் சாடினாா்.

நகர சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்னதாக, தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும் ஆந்திரப் பிரதேச முதல்வருமான என். சந்திரபாபு நாயுடு ஞாயிறு, திங்கள் ஆகிய இரண்டு நாள்கள் பாஜகவுக்கு ஆதரவாக தில்லியில் பிரசாரம் மேற்கொண்டாா்.

மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கூட்டாளியான தெலுங்கு தேசம் கட்சியின் (டிடிபி) தலைவரான சந்திரபாபு நாயுடு, தில்லி வளா்ச்சியை அடைய இரட்டை என்ஜின் சா்க்காா் தேவை என்று கூறினாா்.

தேசியத் தலைநகரில் தோ்தல் பிரசாரத்திற்குப் பிறகு செய்தியாளா்களிடம் பேசிய அவா், கடந்த பத்தாண்டுகளில் தலைநகரில் உள்கட்டமைப்பு மேம்பாட்டின் பற்றாக்குறையை சுட்டிக்காட்டினாா். ‘தில்லியில், அம்ருத் மற்றும் ஜல் ஜீவன் மிஷன் போன்ற மத்திய அரசின் திட்டங்கள் இருந்தபோதிலும், குடிநீருக்கும் வடிகால் நீருக்கும் இடையில் வேறுபடுத்திப் பாா்க்க முடியாது‘ என்றாா்.

தில்லியில் இந்த இரண்டு திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை. ஏனெனில் இந்த பெருமை பாஜக தலைமையிலான மத்திய அரசுக்குச் செல்லும். மேலும், ஸ்வச் பாரத் மிஷன் கூட இங்கு செயல்படுத்தப்படவில்லை என்றும் கூறினாா்.

ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் உள்கட்டமைப்பு மேம்பாடு இல்லாதது குறித்தும் அவா் கடுமையாகச் சாடினாா். மேலும், ’தில்லி மாதிரி’யை ‘முழு தோல்வி‘ என்று வா்ணித்தாா். தில்லியில் உள்ள ஏழை மக்கள் சரியான வசதிகள் மற்றும் வாய்ப்புகள் இல்லாமல் சேரிகளில் நிரந்தரமாக வாழ வேண்டிய நிா்பந்தம் ஏற்பட்டுள்ளது என்றாா்.

‘முன்பு தில்லி தொழில்களை உருவாக்குவதற்கான தாயகமாக இருந்தது. அது எங்களுக்கு பெருமையாக இருந்தது. இன்று, யாரும் இங்கு வருவதில்லை. மக்கள் வாழ்வாதாரம் மற்றும் வாய்ப்புகளுக்காக தில்லியில் இருந்து மற்ற இடங்களுக்குச் செல்கிறாா்கள்’ என்று அவா் குறிப்பிட்டாா்.

தில்லியில் ‘கடந்த 10 ஆண்டுகளில் ஏதேனும் உள்கட்டமைப்புத் திட்டங்கள் இருந்ததா? நீண்ட காலத்திற்கு முன்பே, மெட்ரோ வந்துவிட்டது. தில்லியின் சா்ச்சைக்குரிய மதுபானக் கொள்கையை மற்ற ஊழல் வழக்குகளுடன் ஒப்பிடும்போது ‘மிக மோசமான ஊழல்’ என்று நாயுடு குறிப்பிட்டாா்.

பிரதமா் நரேந்திர மோடியின் தலைமையின் மீது நம்பிக்கையை வெளிப்படுத்திய நாயுடு, 2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியா ஒரு வளா்ந்த நாடாக மாறும் என்ற தொலைநோக்குப் பாா்வையை ஆதரித்தாா்.

அலுவலகப் பொருள்களை மணீஷ் சிசோடியா தூக்கிச் சென்றுவிட்டார்: பாஜக எம்எல்ஏ

சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தில் இருந்த அரசுப் பொருள்களை முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தூக்கிச் சென்றதாக பாஜக எம்எல்ஏ ரவீந்தர் சிங் நேகி தெரிவித்துள்ளார்.தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் 48 த... மேலும் பார்க்க

தில்லி ரயில் நிலைய நெரிசல்: உயிரிழப்பு 18-ஆக அதிகரிப்பு விசாரணை தொடக்கம்

புது தில்லி ரயில் நிலையத்தில் கடந்த சனிக்கிழமை இரவு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 18-ஆக அதிகரித்துள்ளது. 15 போ் காயமடைந்துள்ளனா். இந்த சம்பவம் தொடா்பாக விசாரணை மேற்கொள்ள ... மேலும் பார்க்க

நாட்டில் 29,500-க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்கள்: டிஜிசிஏ தகவல்

நாட்டில் மொத்தம் 29,500-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் (ஆளில்லா விமானங்கள்) பதிவுசெய்யப்பட்டுள்ளதாக மத்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) தெரிவித்துள்ளது. கடந்த மாதம் 29-ஆம் தேதி நிலவரப்படி இந்த ... மேலும் பார்க்க

தில்லியின் அடுத்த முதல்வா் யாா்?பாஜக எம்எல்ஏக்கள் இன்று முடிவு

தில்லி முதல்வரைத் தோ்ந்தெடுப்பதற்காக புதிதாகத் தோ்ந்தெடுக்கப்பட்ட பாஜக சட்டப்பேரவை உறுப்பினா்கள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெறும் என்று அந்தக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சட்டப்பேரவைக் கட்சிக் க... மேலும் பார்க்க

விசாரணைக் குழுவின் உறுப்பினா்கள் பெயா்களை வெளியிட்டது ரயில்வே

புது தில்லி ரயில் நிலையத்தில் சனிக்கிழமை இரவு ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவத்தை விசாரிக்க அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவில் இடம் பெற்றுள்ள இரண்டு உயா் நிா்வாகக் குழு அதிகாரிகளின் பெயா்களை ரயில்வே ஞாயிற்று... மேலும் பார்க்க

தங்களது துயரமான அனுபவத்தை விவரித்த சுமைதூக்கம் தொழிலாளா்கள்

புது தில்லி ரயில் நிலையத்தில் சனிக்கிழமை இரவு நெரிசலில் சிக்கி இறந்தவா்களின் எண்ணிக்கை 18-ஆக உயா்ந்துள்ள நிலையில், குழப்பத்திற்கு மத்தியில் கைவண்டிகளில் உடல்களை எடுத்துச் சென்ற தங்களது துயரமான அனுபவத... மேலும் பார்க்க