நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஏசி-யை இயக்குகிறீர்களா? - இது உங்களுக்கான பாதுகாப்பு வ...
"மஞ்சள் ஜெர்ஸியில் தோனி விளையாடுவது இதுவே கடைசியாக இருக்கலாம்.!"- ராபின் உத்தப்பா சொல்வதென்ன?
எதிர்வரும் தொடரில் மஞ்சள் ஜெர்ஸியில் தோனி விளையாடுவதே அவரின் கடைசி ஐபிஎல் தொடராக இருக்கலாம் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா தெரிவித்திருக்கிறார்.
2026 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் மார்ச் 28 ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இதில் சிஎஸ்கே அணி மார்ச் 30 ஆம் தேதி ராஜஸ்தான் அணியை எதிர்த்து களமிறங்குகிறது.

இந்நிலையில் சிஎஸ்கே குறித்து பேட்டி ஒன்றில் பேசிய ராபின் உத்தப்பா, " கேப்டன் பொறுப்பை சஞ்சு சாம்சனிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொடுக்காது என்று நான் நினைக்கிறன்.
தோனியின் நிழலில் இருந்து விலகி ருதுராஜ் ஒரு முழுமையான கேப்டனாக உருவெடுக்க இன்னும் சில ஆண்டுகள் அவருக்கு கால அவகாசம் வழங்கப்பட வேண்டும்.
கடந்த 2024 சீசன் முதல் தான் அவர் அணியை வழி நடத்தி வருகிறார். அவர் குறித்து யார் என்ன சொன்னாலும் பிரச்னை இல்லை என்று தனது பாணியில் அவர் அணியை வழிநடத்த வேண்டும்.
அதன் பிறகு அவரின் கேப்டன்ஷிப் சரியில்லை என்ற எண்ணம் வந்தால் சஞ்சு சாம்சன் இருக்கிறார். அவரிடம் கேப்டன் பொறுப்பை ஒப்படைக்கலாம்.

எதிர்வரும் தொடரில் மஞ்சள் ஜெர்ஸியில் தோனி விளையாடுவதே அவரின் கடைசி ஐபிஎல் தொடராக இருக்கலாம்.
ஓய்வை நோக்கி பயணிப்பதால் தோனி இந்தமுறை பின்வரிசையிலேயே களமிறங்குவார்" என்று ராபின் உத்தப்பா கூறியிருக்கிறார்.




















