செய்திகள் :

CSK: இம்பேக்ட் பிளேயராக தோனி? - சிஎஸ்கேவின் 'ஃபினிஷர்' ரோலில் களமிறங்கும் 20 வயது இளம்வீரர் யார்?

post image

ஐபிஎல் 2026 திருவிழா மார்ச் 28-ல் தொடங்கவிருக்கிறது. இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) ரசிகர்கள் மத்தியில் ஒரு செய்தி காட்டுத்தீயாய் பரவி வருகிறது.

மார்ச் 30-ம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் சிஎஸ்கே களம் காண உள்ளது.

தோனி
தோனி

ஆனால், இம்முறை தோனி ஓர் 'இம்பேக்ட் பிளேயராக' (Impact Player) மட்டுமே ஆடுவார் என்றும், அவருக்கு பதிலாக ஃபினிஷர் ரோலில் இளம் வீரர் கார்த்திக் சர்மா களமிறக்கப்படுவார் என்றும் தகவல்கள் கசிந்துள்ளன.

யார் இந்த கார்த்திக் சர்மா?

ராஜஸ்தானைச் சேர்ந்த கார்த்திக் சர்மாவிற்கு 20 வயதே ஆகிறது. இவரை சிஎஸ்கே 14.20 கோடி ரூபாய்க்கு வாங்கியது.

அதிரடி பேட்டராக அறியப்பட்ட இவர், கடந்த ரஞ்சி சீசனில் உத்தரகாண்ட்டுக்கு எதிரான அறிமுகப் போட்டியிலேயே சதமடித்து அசத்தியிருந்தார்.

அதேமாதிரி, கடந்த விஜய் ஹசாரே தொடரிலும் 400+ ரன்களைச் சேர்த்து ராஜஸ்தான் அணிக்காக அதிக ரன்களை எடுத்த வீரராக வந்தார்.

கார்த்திக் சர்மா
கார்த்திக் சர்மா

19 வயதுக்குட்பட்ட ராஜஸ்தானின் இளையோர் அணிக்கு கேப்டனாகவும் செயல்பட்டு வருகிறார்.

ராஜஸ்தான் அணிக்காக 11 டி20 போட்டிகளில் விளையாடி இதுவரை 27 சிக்ஸர்கள் மற்றும் இரண்டு அரை சதங்கள் உட்பட 316 ரன்கள் அடித்து விளாசியிருக்கிறார்.

ஃபினிஷர் ரோலில் மிகச்சிறப்பாக தன்னை பொசிஷன் செய்து வருகிறார். தோனியும், முன்பைப் போல போட்டிகளை முடித்துக் கொடுக்கும் நிலையில் இல்லை.

கார்த்திக் சர்மா
கார்த்திக் சர்மா

அதனால் கார்த்திக்கை ஃபினிஷர் ரோலில் களம் இறக்கி முயற்சி செய்து பார்க்கலாம் என்று சிஎஸ்கே அணி திட்டமிட்டிருப்பதாக, தகவல் வெளியாகின்றன. நீண்டகால அடிப்படையில் கார்த்திக் சர்மா ஒரு நல்ல தேர்வாகவும் இருப்பார் என சிஎஸ்கே நிர்வாகம் கருதுவதாகவும் தெரிகிறது.

"RR அணியின் முகமாக இருந்தவர் சஞ்சு சாம்சன்; அவரை இழந்திருப்பது அணிக்கும்..!"- ஃபாப் டு பிளெஸ்ஸிஸ்

2026 ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல் திருவிழா வரும் மார்ச் 28 ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இன்னும் சில தினங்களே இருக்கும் நிலையில், வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை அணி தனது முதல் போட்டி... மேலும் பார்க்க

`ரூ.18,000 கோடிக்கு விலை போகிறதா RCB? போட்டிபோடும் இரண்டு நிறுவனங்கள்!

ஐபிஎல் வரலாற்றில் முதன் முறையாக,ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 2025-ல் சாம்பியன் பட்டம் வென்ற பிறகு, அணியின் மவுசு கூடியிருக்கிறது. தற்போது இந்த அணியின் மதிப்பு சுமார் ₹18,000 கோடி வரை உயர்ந்துள்ளது. ... மேலும் பார்க்க

Dhoni: "ரோஹித், கோலி, ஏன் என்னையும் உருவாக்கியவர் அவர்தான்.!"- தோனியை புகழந்த ரெய்னா

நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை பிறக்கக்கூடியவர் தான் தோனி என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா புகழ்ந்திருக்கிறார்.நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சுரேஷ் ரெய்னாவிடம் தோனி குறித்து கேள்வி கேட்கப... மேலும் பார்க்க

"பாக். வீரர் ஒப்பந்தம்; பற்றி எரியும் சர்ச்சை - காவ்யா மாறனை சீண்டிய லலித் மோடி! - பின்னனி என்ன?

பாகிஸ்தான் வீரரை ஏலத்தில் ஒப்பந்தம் செய்த சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. ஐபிஎல், பிபிஎல், சிபிஎல் போன்று டி20 லீக் போட்டிகளுக்கு மாற்றாக நூறு பந்துகளைக் கொண்ட 'தி ஹண்ட்ரட் ல... மேலும் பார்க்க

``கம்பீர் நினைத்தால், நானும், விராட், ரோஹித்தும் விலகுவது தப்பில்லை" - அஷ்வின் ஓப்பன் டாக்

கடந்த 2024 டிசம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் நடுவே, ரவிச்சந்திரன் அஷ்வின் அறிவித்த ஓய்வு முடிவு ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அனில் கும்ப்ளேவின் (619 வி... மேலும் பார்க்க

சர்வதேச போட்டிகளை விட IPL-ல் அதிக சம்பளம் வாங்கும் அம்பயர்கள்! - ஏன் தெரியுமா?

கிரிக்கெட்டில் வீரர்களின் பங்கு எவ்வளவு முக்கியமானதோ, அதேபோல ஆட்டத்தின் ஒவ்வொரு அசைவையும் கூர்மையாகக் கவனித்து, மைதானத்தின் அழுத்தங்களுக்கு நடுவே சரியான தீர்ப்புகளை வழங்கும் அம்பயர்களின் பங்கும் ஆட்டத... மேலும் பார்க்க