செய்திகள் :

`வெய்ட்டா கவனிக்கணும்' - அள்ளி இறைக்கத் திட்டமிடும் அதிமுக? - அதிரும் ஆற்காடு தொகுதி!

post image

ராணிப்பேட்டை மாவட்டத்தில், மொத்தம் 4 சட்டமன்றத் தொகுதிகள் இருக்கின்றன. இதில், மாவட்டத் தலைநகரை உள்ளடக்கிய ராணிப்பேட்டை சட்டமன்றத் தொகுதி சிட்டிங் எம்.எல்.ஏ-வாக தி.மு.க மாவட்டச் செயலாளரும், கைத்தறித்துறை அமைச்சருமான ஆர்.காந்தி இருக்கிறார்.

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின்போது, காந்தியை எதிர்த்து அ.தி.மு.க சார்பாக ராணிப்பேட்டை மேற்கு மாவட்டச் செயலாளரான எஸ்.எம்.சுகுமார் போட்டியிட்டார். அந்தத் தொகுதியில் கணிசமாக வாழும் இஸ்லாமியர்களின் வாக்குகள் போதுமான அளவு அ.தி.மு.க-வுக்குக் கைகொடுக்காததால், காந்தியிடம் சுமார் 16 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார் எஸ்.எம்.சுகுமார்.

எஸ்.எம்.சுகுமார்

இந்த நிலையில், வரும் தேர்தலிலும் போட்டியிடத் தயாரான அ.தி.மு.க மாவட்டச் செயலாளர் சுகுமாருக்கு ராணிப்பேட்டையை விட பக்கத்திலுள்ள ஆற்காடு தொகுதி மீதே பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. இதனால், ஆற்காடு தொகுதிக்கும் சேர்த்தே அ.தி.மு.க தலைமையில் விருப்ப மனு கட்டி வந்திருக்கிறார் சுகுமார். இதனிடையே, கடந்த முறைபோல அ.தி.மு.க கூட்டணியில் இணைந்திருக்கும் பா.ம.க-வும், மீண்டும் ஆற்காடு தொகுதியை எதிர்பார்த்து காத்திருக்கிறது.

பாட்டாளிகளின் எதிர்பார்ப்பை தகர்த்தெறியும் வகையில், அ.தி.மு.க மாவட்டச் செயலாளர் எஸ்.எம்.சுகுமார் ஆற்காடு தொகுதியில் பெரிய பட்ஜெட்டுடன் களமிறங்கி தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டாராம். பாட்டாளிகளின் குமுறல் சத்தத்தை காதில் வாங்கிக்கொள்ளாத எஸ்.எம்.சுகுமார் தரப்பினர் ஆற்காடு தொகுதி முழுவதும் வீடு, வீடாகச் சென்று ரேஷன் கார்டுக்கு வேட்டி, சட்டை, புடவை, ஜாக்கெட் துணி ஆகியவற்றை கொடுத்திருக்கிறார்களாம்.

தேர்தல்
தேர்தல்

அதுமட்டுமல்லாமல், தொகுதியைச் சார்ந்த அ.தி.மு.க-வின் கிளைச் செயலாளர், வட்டச் செயலாளர் போன்ற நிர்வாகிகளுக்கும் தலா ஒரு சிப்பம் அரிசி மூட்டையை கொடுத்துள்ளார்களாம். எல்லாவற்றையும்விட முக்கியமானதாக, தொகுதியிலுள்ள 318 பூத்களிலும் தலா 3 பூத்களுக்கு ஒரு பொறுப்பாளரை நியமித்து, வாக்காளர்களைக் கவனிக்கவும் பட்ஜெட் ஒதுக்கப்பட்டுவிட்டதாம்.

ஆற்காடு தொகுதியில் மொத்தமாக 2,43,565 வாக்காளர்கள் இருக்கின்றனர். அதைக் கணக்கிட்டு, வாக்காளர்களை `வெய்ட்டாக' கவனிக்க அ.தி.மு.க தரப்பு திட்டமிட்டிருக்கிறதாம்.

தேமுதிக-வுக்கு எவ்வளவு ஓட்டு? விஜய்யின் தாக்கம் என்ன? - நேர்காணலில் ஸ்டாலின் கேட்ட முக்கிய கேள்வி!

சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் முதல்வர் ஸ்டாலின் கடந்த மூன்று நாட்களாக நேர்காணல் நடத்தி வருகிறார். இந்நிலையில், கொங்கு மண்டலத்துக்கு நடந்த இன்றைய நேர்காணலில்... மேலும் பார்க்க

`பா.ஜ.க-வை டென்சனாக்கிய இருவர் அணி' - கடைசி நேரத்தில் `நோ' சொன்ன விஜய்!

“நாங்கள் எப்போதும் மதசார்பற்ற கொள்கை என்பதிலோ, மதசார்பற்ற சமூக நீதி என்ற நிலைப்பாட்டிலோ சமரசம் வைத்துக் கொள்ள மாட்டோம். நமது தலைமையில்தான் ஆட்சி என்பதில் உறுதியாக இருக்கிறோம்.” என்று இஃப்தார் நிகழ்ச்... மேலும் பார்க்க

'ரூ1.25 லட்சத்துக்கு குடும்பத்துக்கே விருப்ப மனு வாங்குனேன்!' - அறிவாலயத்தை வியக்க வைத்த உடன்பிறப்பு

அறிவாலயத்தில் வேட்பாளர் நேர்காணலை பரபரப்பாக நடத்திக் கொண்டிருக்கிறது திமுக. இன்று நடந்த நேர்காணலில் முதல்வர் ஸ்டாலினை பார்க்க வேண்டும் என்பதற்காக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் விருப்ப மனு கொடுத்து ... மேலும் பார்க்க

தூத்துக்குடி சிறுமி பாலியல் வழக்கு; 'ஆயுள் தண்டனை கைதிக்கு ஜாமீன் கிடைத்தது எப்படி?'- அண்ணாமலை

சமீபத்தில் தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளத்தில் 17 வயது சிறுமி இயற்கை உபாதை கழிக்கச் சென்ற இடத்தில், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, சடலமாக மீட்கப்பட்ட செய்தி, அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந... மேலும் பார்க்க

திமுகவுக்கு டஃப் கொடுக்கும் அதிமுக + அமமுக; தவெக தருமா ட்விஸ்ட்! - புதுக்கோட்டை சமஸ்தானம் யாருக்கு?

முந்துவது யார்?தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. தற்போதைய நிலவரப்படி, யார் களத்தில் முந்துகிறார்கள் என்பது குறித்து விவரிக்கும் பக்கம் தான் `முந்துவது யார்?'புதுக்கோட்டை மாவட்ட நிலவரத்தை பார்க்கலாம... மேலும் பார்க்க