செய்திகள் :

`ரூ.18,000 கோடிக்கு விலை போகிறதா RCB? போட்டிபோடும் இரண்டு நிறுவனங்கள்!

post image

ஐபிஎல் வரலாற்றில் முதன் முறையாக,ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 2025-ல் சாம்பியன் பட்டம் வென்ற பிறகு, அணியின் மவுசு கூடியிருக்கிறது.

தற்போது இந்த அணியின் மதிப்பு சுமார் ₹18,000 கோடி வரை உயர்ந்துள்ளது. இந்த மெகா டீமை வாங்குவதற்கு உலகத் தரம் வாய்ந்த இரண்டு பெரிய நிறுவனங்கள் இடையே கடும் போட்டி நிலவி வருகின்றன என தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது.

2008 ஆம் ஆண்டு இந்த அணியை விஜய் மல்லையா தொடங்கினார், ஆனால் 2016 ஆம் ஆண்டு நிதி சிக்கலின் காரணமாக அணியை United Spirits Limited நிறுவனம் கைப்பற்றி நடத்தி வந்தது.

RCB
RCB

தற்போது இந்த நிறுவனமும் அணியை விற்பனை செய்ய உள்ள நிலையில், ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த தனியார் பங்கு முதலீட்டு நிறுவனமான EQT, இந்தியாவின் விப்ரோ நிறுவனத் தலைவர் அசிம் பிரேம்ஜியின் பிரேம்ஜி இன்வெஸ்ட் நிறுவனத்துடன் இணைந்து சுமார் ₹18,000 கோடிக்கு மேல் வாங்க முயற்சி செய்து வருவதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

இதனை தொடர்ந்து மணிப்பால் மருத்துவமனை குழுமத்தின் தலைவர் டாக்டர் ரஞ்சன் பாய் தலைமையில், அமெரிக்காவின் KKR மற்றும் சிங்கப்பூரின் டெமாசெக் நிறுவனங்கள் இணைந்து இந்த அணியைக் கைப்பற்ற தீவிரமாக முயன்று வருவதாகவும் கூறப்படுகிறது.

RCB
RCB

மார்ச் 31-க்குள் யார்? RCB அணியை வாங்கப்போகிறார்கள் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. நடப்பு சாம்பியனாக களமிறங்கும் RCB அணிக்கு, புதிய உரிமையாளர் யார் என்பது விரைவில் தெரிந்துவிடும்.!

Dhoni: "ரோஹித், கோலி, ஏன் என்னையும் உருவாக்கியவர் அவர்தான்.!"- தோனியை புகழந்த ரெய்னா

நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை பிறக்கக்கூடியவர் தான் தோனி என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா புகழ்ந்திருக்கிறார்.நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சுரேஷ் ரெய்னாவிடம் தோனி குறித்து கேள்வி கேட்கப... மேலும் பார்க்க

"பாக். வீரர் ஒப்பந்தம்; பற்றி எரியும் சர்ச்சை - காவ்யா மாறனை சீண்டிய லலித் மோடி! - பின்னனி என்ன?

பாகிஸ்தான் வீரரை ஏலத்தில் ஒப்பந்தம் செய்த சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. ஐபிஎல், பிபிஎல், சிபிஎல் போன்று டி20 லீக் போட்டிகளுக்கு மாற்றாக நூறு பந்துகளைக் கொண்ட 'தி ஹண்ட்ரட் ல... மேலும் பார்க்க

``கம்பீர் நினைத்தால், நானும், விராட், ரோஹித்தும் விலகுவது தப்பில்லை" - அஷ்வின் ஓப்பன் டாக்

கடந்த 2024 டிசம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் நடுவே, ரவிச்சந்திரன் அஷ்வின் அறிவித்த ஓய்வு முடிவு ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அனில் கும்ப்ளேவின் (619 வி... மேலும் பார்க்க

சர்வதேச போட்டிகளை விட IPL-ல் அதிக சம்பளம் வாங்கும் அம்பயர்கள்! - ஏன் தெரியுமா?

கிரிக்கெட்டில் வீரர்களின் பங்கு எவ்வளவு முக்கியமானதோ, அதேபோல ஆட்டத்தின் ஒவ்வொரு அசைவையும் கூர்மையாகக் கவனித்து, மைதானத்தின் அழுத்தங்களுக்கு நடுவே சரியான தீர்ப்புகளை வழங்கும் அம்பயர்களின் பங்கும் ஆட்டத... மேலும் பார்க்க

CSK: `தோனி சொன்ன அட்வைஸ்; நான் அடுத்த ஜடேஜாவா?' - ரூ.14.2 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட பிரசாந்த் வீர்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சமீபத்தில் நடைபெற்ற 2026 ஐபிஎல் ஏலத்தில் 20 வயதுடைய இளம் வீரர் பிரசாந்த் வீரை சுமார் 14.2 கோடி ரூபாய்க்கு வாங்கியது. இவ்வளவு பெரிய தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட பிரசாந்த் வ... மேலும் பார்க்க

IPL 2026: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து வெளியேறியது ஏன்? - மனம் திறந்த சஞ்சு சாம்சன்

2026 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் இன்னும் சில தினங்களில் தொடங்க இருக்கிறது. சிஎஸ்கே அணி மார்ச் 30 ஆம் தேதி ராஜஸ்தான் அணியை எதிர்த்து களமிறங்குகிறது. குறிப்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் கேப்டனாக இருந்த சஞ்சு ... மேலும் பார்க்க