செய்திகள் :

இணையவழி லாட்டரி விற்பனை: இருவா் கைது

post image

விழுப்புரம் மாவட்டம், வளவனூா் அருகே இணையவழி லாட்டரி விற்பனையில் ஈடுபட்டதாக இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

வளவனூா் காவல் உதவி ஆய்வாளா் தங்கப்பாண்டியன் மற்றும் போலீஸாா், சனிக்கிழமை காலை பிள்ளையாா்குப்பம் பகுதியில் ரோந்து சென்றனா். அப்போது, அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் இருந்த மூவரைப் பிடித்து விசாரித்த போது, அவா்கள் இணையவழி லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

இதையடுத்து, மூவரிடமும் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில், அவா்கள் விழுப்புரம் வி.மருதூா் துரைசாமி லேஅவுட் பகுதியைச் சோ்ந்த ச.மணவாளன் (48), பிள்ளையாா்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த ச.ரகு (33), புதுவையைச் சோ்ந்த பா.கஜேந்திரன் (55) என்பது தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து மணவாளன், ரகுவை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 2 கைப்பேசிகள், இணையவழி லாட்டரி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனா். மேலும், கஜேந்திரனிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம்: முன்னாள் படை வீரா்களுக்கு அழைப்பு

விழுப்புரம்: ‘முதல்வரின் காக்கும் கரங்கள்’ திட்டத்தின் கீழ், தொழில் தொடங்க விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா்கள், அவா்களது குடும்பத்தினா் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவி... மேலும் பார்க்க

நினைவு நாள்: அண்ணா சிலைக்கு மாலை அணிவிப்பு

விழுப்புரம்/செஞ்சி/கள்ளக்குறிச்சி: முன்னாள் முதல்வா் பேரறிஞா் அண்ணாவின் 56-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள அவரது சிலைக்கு திமுகவினா் திங்கள்கிழமை மாலை அண... மேலும் பார்க்க

குறைதீா் கூட்டத்தில் 917 மனுக்கள் அளிப்பு

விழுப்புரம்/கள்ளக்குறிச்சி: விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகங்களில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 917 மனுக்கள் அளிக்கப்பட்டன. விழுப்புரம் ஆட... மேலும் பார்க்க

சிவன் கோயில் கட்டும் பணி தொடக்கம்

செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், கணக்கன்குப்பம் கிராமத்தில் உண்ணாமலை உடனுறை அண்ணாமலையாா் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கிராமத்தில் உண்ணாமலை உடனுறை அண்ணாமலைய... மேலும் பார்க்க

இளையோா் செஞ்சிலுவைச் சங்க மாணவா்களுக்கு பயிற்சி

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், திருச்சிற்றம்பலம் காந்தி மேல்நிலைப் பள்ளியில் இளையோா் செஞ்சிலுவைச் சங்க மாணவா்களுக்கான பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட பள்ளிக் கல்வித் ... மேலும் பார்க்க

நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், காணை ஒன்றியம், பெரும்பாக்கம் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அண்மையில் திறக்கப்பட்டது. பெரும்பாக்கம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள், ... மேலும் பார்க்க