செய்திகள் :

மகா. உள்ளாட்சித் தேர்தல்: 134 நகராட்சிகளை ஆளும் பாஜக கூட்டணி முன்னிலை; உத்தவுக்குப் பெரும் பின்னடைவு

post image

மகாராஷ்டிரா முழுவதும் உள்ள நகராட்சிகளுக்குக் கடந்த 2ம் தேதி தேர்தல் நடந்தன. சில நகராட்சிகளுக்குத் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டு நேற்று தேர்தல் நடத்தப்பட்டன. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 10 மணிக்கு எண்ணப்பட்டன.

இத்தேர்தலில் அனைத்து கட்சிகளுமே தனித்து போட்டியிட்டன. சில நகராட்சிகளில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவும், பா.ஜ.கவும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன.

வாக்குகள் எண்ணத்தொடங்கியதில் இருந்தே ஆளும் பா.ஜ.க கூட்டணி கட்சிகள் முன்னிலையில் இருந்தன.

மொத்தமுள்ள 288 நகராட்சிகளில் 134 நகராட்சிகளில் பா.ஜ.க முன்னிலையில் இருக்கிறது. ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா 50 நகராட்சித் தலைவர் பதவிகளைக் கைப்பற்றி இரண்டாவது இடத்திற்கு வந்துள்ளது.

அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 42 நகராட்சித் தலைவர் பதவியைக் கைப்பற்றி இருக்கிறது. எதிர்க்கட்சிக் கூட்டணியில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா மோசமான தோல்வியைச் சந்தித்து இருக்கிறது.

மகாராஷ்டிரா உள்ளாட்சித் தேர்தல்
மகாராஷ்டிரா உள்ளாட்சித் தேர்தல்

வெறும் 11 நகராட்சித் தலைவர் பதவிகளை மட்டும் பிடித்திருக்கிறது. சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 14 நகராட்சிகளிலும், காங்கிரஸ் 28 நகராட்சிகளிலும் முன்னிலையில் இருக்கின்றன.

சுயேச்சைகள் 27 நகராட்சித் தலைவர் பதவியைப் பிடித்துள்ளனர்.

மூன்று நகராட்சிகளில் தலைவர் பதவியை பா.ஜ.க வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஜல்காவ் மாவட்டத்தில் அமைச்சர் கிரீஷ் மகாஜன் மனைவி சாதனாமகாஜன் ஜாம்னேர் நகராட்சித் தலைவராகப் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

சிவசேனா அமைச்சர் குலாப்ராவின் சொந்த ஊரான தரன்காவ் நகராட்சியை எதிர்க்கட்சிக் கூட்டணி பிடித்துள்ளது. சாங்கிலி மாவட்டத்தில் உள்ள ஈஸ்வர்பூர் நகராட்சியில் சரத்பவார் கட்சியின் மாநிலத் தலைவர் ஜெயந்த் பாட்டீல் தனது செல்வாக்கைத் தக்கவைத்துக்கொண்டுள்ளார்.

இந்த நகராட்சியை சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கைப்பற்றி இருக்கிறது. கொங்கன் பகுதியில் சிவசேனா(ஷிண்டே) மூத்த தலைவர் தீபக் கேசர்கரின் சொந்த ஊரான வென்குர்லா நகராட்சியை பா.ஜ.க கைப்பற்றி இருக்கிறது.

உத்தவ் தாக்ரே
உத்தவ் தாக்ரே

பாராமதியில் துணை முதல்வர் அஜித்பவார் தனது செல்வாக்கைத் தக்கவைத்துக்கொண்டார். கொங்கன் பகுதியில் பா.ஜ.க அமைச்சர் நிதேஷ் ரானேயின் சொந்த ஊரான கன்காவ்லியில் பா.ஜ.க தோல்வியைச் சந்தித்து இருக்கிறது. இது நிதேஷ் ரானேவுக்குப் பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது.

அதே சமயம் அருகில் உள்ள மால்வான் நகராட்சியில் நிதேஷ் ரானேயின் சகோதரர் நிலேஷ் ரானே தான் சார்ந்து இருக்கும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவை வெற்றி பெற வைத்து இருக்கிறார்.

கர்நாடகா: "நானே முதல்வராகத் தொடர்வேன்" - சித்தராமையா விடாப்பிடி; டி.கே. சிவகுமாரின் பதில் என்ன?

மீண்டும் கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் இடையே மோதல் போக்கு தொடங்கியுள்ளது.சில மாதங்களுக்கு முன்பு, முதலமைச்சர் நாற்காலிக்காக இருவருக்கும் இடையே பிரச்னை இருந்தது. பி... மேலும் பார்க்க

பட்டமளிப்பு விழாவில் பெண்ணின் ஹிஜாப்பை இழுத்த நிதிஷ்; 'பணியில் சேரவில்லை' - மீண்டும்‌ சர்ச்சை

இந்த வாரத்தின் தொடக்கத்தில் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் ஆயுஷ் மருத்துவப் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டார்.அங்கே பட்டம் வாங்க வந்த முஸ்லிம் பெண் ஒருவரின் ஹிஜாப்பைப் பிடித்து இழுக்க முயன்றார். இ... மேலும் பார்க்க

நாமக்கல்: தவெக மாவட்டச் செயலாளர் செந்தில்நாதன் நீக்கம்; பொதுச்செயலாளர் ஆனந்த் அதிரடி; என்ன நடந்தது?

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்தவர் ஜே.ஜே.செந்தில்நாதன். தமிழக வெற்றிக் கழகத்தின் நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளராக இருந்து வந்தார். இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு 11 மணியளவில் கூட்ட... மேலும் பார்க்க

'அமெரிக்காவை விட்டு வெளியே செல்லாதீர்கள் H-1B விசாதாரர்களே' - ஆப்பிள், கூகுள் நிறுவனங்கள்

விசா விலை உயர்வு, சமூக வலைதள சோதனை என ஹெச்-1பி விசா வைத்திருப்பவர்களுக்குக் கடுமையான நெருக்கடிகளை தந்து வருகிறது ட்ரம்ப் அரசு.இந்தச் சூழலில், கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் ஒரு விஷயத்தைத் தெரிவித்... மேலும் பார்க்க

"கலைஞர் காலத்தில் கூட்டணியில் இருந்தபோதும் கட்டுப்படாமல் இயங்கியிருக்கிறேன்" - திருமாவளவன் பேச்சு

மதுரையில் எவிடென்ஸ் கதிர் எழுதிய நூல் வெளியீட்டு விழாவில கலந்துகொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் உரையாற்றும்போது, "வலதுசாரி அரசியல் ஆதிக்கம் செலுத்தி வருவது கவலை அளிக்கிறது. தே... மேலும் பார்க்க

"காங்கிரஸுக்கு காவடி எடுத்தாலும் விஜய் முதல்வராக முடியாது; பாஜக கூட்டணிக்கு வாங்க" - தமிழருவி மணியன்

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன், தமிழருவி மணியனின் காமராஜர் மக்கள் கட்சி இணையும் விழா ஈரோட்டில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில், தமிழருவி மணியன் பேசுகையில், "காங்கிரஸை விட்டு ஜி.கே.வாசன் வந்ததால... மேலும் பார்க்க