செய்திகள் :

"இது எங்கள் குடும்பப் பிரச்னை, ஒரு தாய் மக்களின் பிரச்னை" - இபிஎஸ் குறித்து டிடிவி தினகரன்

post image

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக்கூட்டம் நேற்று (ஜன.23) மதுராந்தகத்தில் நடைபெற்றது.

அதிமுக, பாஜகவுடன் அமமுக, பாமக, தமாகா, புதிய நீதிக்கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், இந்திய ஜனநாயகக் கட்சி, புரட்சி பாரதம் ஆகிய கட்சிகளும் இணைந்துகொண்டன.

இதில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார்.

NDA கூட்டணி
NDA கூட்டணி

பொதுக்கூட்டத்திற்குப் பிறகு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கின்றனர்.

இந்தச் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய டிடிவி தினகரன், "இது எங்கள் குடும்பப் பிரச்னை, ஒரு தாய் மக்களின் பிரச்னை. அம்மாவின்(ஜெயலலிதா) பிள்ளைகள் நாங்கள்.

எங்களுக்குள் மனஸ்தாபம் இருந்தது உண்மை. அமித்ஷா 2021-லேயே எங்களோடு கூட்டணியில் இணைந்துகொள்ளுங்கள் என்று கேட்டுக்கொண்டார். ஆனால் அப்போது நடக்கவில்லை.

2026-ல் மீண்டும் கூட்டணியில் இணைய அமித்ஷா என்னிடம் பேசும்போது பழனிசாமியும், நானும் ஒன்று சேர வேண்டும் என்று கேட்டார்.

இரண்டு பேரும் ஒப்புதல் அளித்துதான் கூட்டணி உருவாகியிருக்கிறது.

டிடிவி தினகரன்
டிடிவி தினகரன்

தற்போது எடப்பாடி பழனிசாமியும், நானும் அண்ணன் தம்பிகளாக ஒன்றிணைந்து விட்டோம். நாங்கள் எல்லாவற்றையும் மறந்துவிட்டோம்.

இரண்டு பேரும் ஒன்றாகப் பிரசாரத்திற்குச் செல்வோம். திமுக ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வராமல் விடமாட்டோம். அம்மாவின் ஆட்சியைக் கொண்டு வருவோம்" என்று பேசியிருக்கிறார்.

நின்றுபோன திமுக - அதிமுக இணைப்பு; `நேரு மகளே!' - அழைத்த கருணாநிதி | அரசியல் ஆடுபுலி 02

1980 தேர்தல்அரசியல் ஆடுபுலி 02நண்பர்களாக இருந்த கலைஞர் கருணாநிதியும், எம்ஜிஆரும் அரசியலில் எதிரும் புதிருமாக மாறியதால், இன்று வரை அதிமுக – திமுக என்ற அரசியலே தமிழகத்தில் நிலைத்திருக்கிறது.திரைத்துறையி... மேலும் பார்க்க

தொகுதி பங்கீடு குறித்த ஆலோசனையில் கமலின் ம.நீ.ம! - நிர்வாகக்குழு, செயற்குழு கூட்டத்தில் முடிவு?

தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற இருக்கிறது. அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. இன்னும் அங்கீகாரம் பெறாத சில கட்சிகள், மாநிலம் முழுவதும் பொதுச் சின்னம் க... மேலும் பார்க்க

"சபரிமலையில் தங்கம் கொள்ளையடித்தவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள்" - பிரதமர் மோடி கேரண்டி

பிரதமர் நரேந்திர மோடி நேற்று கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அம்ருத் பாரத் ரயில் சேவையைத் தொடங்கிவைத்தார். பின்னர் திருவனந்தபுரம் புத்தரிகண்ட மைதானத்தில் நடைபெற்ற பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டா... மேலும் பார்க்க