செய்திகள் :

இந்தியா அல்ல; `வங்கதேச மாணவர் தலைவர் கொலைக்குக் காரணம், இவர்கள்தான்!' - போலீஸ் தகவல்

post image

மாணவர் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடியின் கொலை வங்கதேசத்தை மீண்டும் கலவர பூமியாக்கியது.

இந்தக் கொலைக்குப் பின்னால் இந்தியா இருக்கிறது என்று வங்கதேசத்தில் உள்ள இந்துக்களை துன்புறுத்தி வந்தனர் போராட்டக்காரர்கள்.

இந்த நிலையில், ஷெரீப்பின் கொலைக்குப் பின்னால், 'யார் இருக்கிறார்கள்?' என்பது குறித்த தகவலை வங்கதேச போலீஸ் வெளியிட்டுள்ளது.

ஷேக் ஹசீனாவின் கட்சி அவாமி லீக். அந்தக் கட்சியின் மாணவர் அணி சத்ரா லீக்.

2024-ம் ஆண்டு, வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைந்த பின், இந்த இரண்டு கட்சிகளுமே தடை செய்யப்பட்டது.

வங்கதேசம் போராட்டம்
வங்கதேசம் போராட்டம்

இந்தக் கட்சிகளை குறித்து பொது மேடைகளிலும், சமூக வலைதளங்களிலும் தொடர்ந்து சாடிப் பேசு வந்திருக்கிறார் ஷெரீப்.

இதில் கோபமடைந்த அந்தக் கட்சிகளின் தலைமைகள், அவரைப் பழிவாங்க இந்தக் கொலையை செய்து முடித்திருக்கிறார்கள்.

'இந்தக் கொலை அரசியல் நோக்கிலானது' என்று டாக்கா பெருநகர காவல்துறையின் துப்பறியும் பிரிவின் கூடுதல் ஆணையர் எம்.டி. ஷஃபிகுல் இஸ்லாம் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கில் 17 பேர் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.

அதிமுக: இரட்டை இலை சின்னத்தைப் பயன்படுத்த தடைக்கோரி வழக்கு; இபிஎஸ்-க்கு எதிரான மனு தள்ளுபடி

அதிமுக-வில் உட்கட்சி விவகாரம் தொடர்பாக, நிலுவையில் உள்ள வழக்குகள் முடிவுக்கு வரும் வரை, அதிமுக-வுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக்கூடாது என்பதற்காகவும், எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராகத் தேர... மேலும் பார்க்க

எடப்பாடி - நயினார் சந்திப்பு : தொகுதி பங்கீடு, கூட்டணியில் தினகரன் குறித்து பேச்சுவார்த்தை?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தி்த்து பேசியிருக்கிறார். தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் பேரணி, பிரசாரம், பொத... மேலும் பார்க்க

கிரீன்லாந்து:``ஒவ்வொருவருக்கும் பணம் கொடுப்போம்" - அமெரிக்க அதிபர் 'சதி': கொந்தளிக்கும் உலக நாடுகள்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கிரீன்லாந்தை எப்படியாவது அமெரிக்காவுடன் இணைக்க வேண்டும் எனத் தீவிரமாக முயற்சித்து வருகிறார். டென்மார்க்கும் அமெரிக்காவும் பரஸ்பரம் நேட்டோ கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும... மேலும் பார்க்க

Greenland: ``எங்கள் எல்லையில் நுழைந்தால் சுடுவோம்" - அமெரிக்காவை எச்சரிக்கும் டென்மார்க்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், டென்மார்க்கின் கிரீன்லாந்தைக் கைப்பற்ற விரும்புவதாகத் தொடர்ந்து அச்சுறுத்தல் விடுத்து வருகிறார்.ஆர்க்டிக் பகுதியில் உள்ள இயற்கை வளங்கள் மற்றும் ராணுவ ரீதியான முக்கியத... மேலும் பார்க்க