செய்திகள் :

இந்தியா - பாகிஸ்தான் போர் மூளும்! ஓராண்டுக்கு முன்பே கணித்திருந்தாரா ஜோதிடர்?

post image

இந்தியா - பாகிஸ்தான் இடையே கடுமையான போர் ஏற்படும் என்று கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலேயே பிரபல ஜோதிடர் ஒருவர் கணித்திருப்பதாக வெளியாகும் சமூகவலைதளப் பதிவுகள் திடீரென கவனம் பெற்றிருக்கின்றன.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் எனக் கருதப்படும் சில சரமாரியாக தாக்குதல் நடத்தியதில் 26 பேர் பலியானதை தொடக்கப் புள்ளியாக வைத்து தொடங்கியது இந்தியா - பாகிஸ்தான் போர்.

இந்தப் போர் குறித்து பிரபல ஜோதிடரான பிரசாந்த் கினி என்பவர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் முன்கணிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனை பலர் மறந்திருக்கலாம் அல்லது கடந்து சென்றிருக்கலாம்.. ஏன்? பலர் கிண்டல்கூட அடித்திருக்கலாம். ஆனால், இப்போது அவர் கணித்த அனைத்துக் கணிப்புகளும் நடந்து கொண்டிருக்கின்றன.

அவர் 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆம் தேதி வெளியிட்டிருந்தப் பதிவில், “இந்தப் போர் கிட்டத்தட்ட ஏப்ரல் மாதத்தில் தொடங்கும். இந்தப் போரில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக அமெரிக்கா, துருக்கி, சீனா ஆகிய நாடுகள் இருக்கும். இது முன்பு நடைபெற்ற கார்கில் போரைப் போன்றே மிகத் தீவிரமாக இருக்கும்.

துருக்கி தங்களது ட்ரோன்களையும், சீனா தங்களது ஜே20 விமானங்களையும் பயன்படுத்தி தாக்குதல் நடத்துவது பற்றி சோதனை செய்வார்கள். இந்தியாவுக்கு ரஷியா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் ஆதரவாக இருந்தாலும் அது பயனளிக்காது” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதுமட்டுமின்றி, இன்னொரு தகவலையும் வெளியிட்டு அவரைப் பின்தொடர்வோரை பதற்றமடைய வைத்திருக்கிறார்.

அதாவது, அதே ஆகஸ்ட்டில் வெளியிட்ட மற்றொரு பதிவில், 2025 ஏப்ரல், மே மனித இனத்துக்கு மிகவும் மோசமான மாதங்களாக இருக்கும். ரஷியா - உக்ரைன் போர், ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகள் அட்டூழியம், அணு அயுத தாக்குதல் அதிகரிக்கும், புதிய நோய்த்தொற்று உருவாக்கும், உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் ஆகியவற்றையும் கணித்திருக்கிறார்.

ஜோதிடரின் பழைய எக்ஸ் பதிவு..

ஜோதிடர் பிரசாத் கினி இது போன்ற வருங்கால நிகழ்வுகளைக் கணிப்பது இது முதல்முறை கிடையாது. இதற்கு முன்னதாக வங்கதேச பிரதமரான ஷேக் ஹசீனா, 2024 ஆம் ஆண்டு எச்சரிக்கையாக இருக்க வேண்டும், அவரை படுகொலை செய்யும் முயற்சிகள் நிகழலாம் என்று குறிப்பிட்டிருந்தார். அதேபோலவே வங்கதேசத்தில் கலவரம் ஏற்பட்டு ஷேக் ஹசீனா நாட்டைவிட்டை தப்பியோடினார். இதுபோன்று பலவற்றைக் கணித்திருக்கிறார் இந்த ஜோதிடர்.

முடிவுதான் என்ன?

இரு நாடுகளுக்கு இடையே போர் தொடங்கியது தனது பழைய பதிவுகளை ரீட்வீட் செய்துவிட்டு மீண்டும் ஆக்டிவேட் ஆன இந்த ஜோதிடர், இந்தப் போரில் யார் வெற்றிபெறுவார் என கேட்கப்பட்ட கேள்விக்கு அமெரிக்கா வெற்றிபெறும் எனத் தெரிவித்திருக்கிறார்.

அவர் கணித்தது போலவே பாகிஸ்தானில் பயங்கரவாதம் தலைதூக்கி இருக்கிறது. சீனா தயாரிப்பு விமானங்களும், துருக்கி ட்ரோன்களும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக இந்தியா மீது தாக்குதல் நடத்தின. மேலும், தற்போது இந்தப் போர் 29 நாள்கள் நடக்கும் என கணித்திருக்கிறார். அவர் கணித்ததுபோல் போர் நிறுத்தப்படுமா? அல்லது போர் தொடர்ந்து நடைபெறுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

இதையும் படிக்க: ஆபரேஷன் பன்யான் மர்சூஸ் என தாக்குதலுக்கு பெயரிட்ட பாகிஸ்தான்! அர்த்தம் தெரியுமா?

நீதி ஆயோக் ‘தகுதியற்ற அமைப்பு’: காங்கிரஸ்

நீதி ஆயோக் என்பது தகுதியற்ற அமைப்பாகும் என்று காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் சனிக்கிழமை சாடினாா். இதுதொடா்பாக அவா் ‘எக்ஸ்’ தளத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவு: வளா்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்க... மேலும் பார்க்க

உலகின் 4-ஆவது பெரிய பொருளாதார நாடு இந்தியா: நீதி ஆயோக் சிஇஓ

ஜப்பானை பின்னுக்குத் தள்ளி, உலகில் 4-ஆவது பெரிய பொருளாதார மதிப்பு கொண்ட நாடாக இந்தியா உயா்ந்துள்ளது என்று நீதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) வி.ஆா்.சுப்பிரமணியம் தெரிவித்தாா். புது தில்லியில் நீதி ... மேலும் பார்க்க

இணைய மோசடி குற்றவாளி அங்கத் சிங் சந்தோக் நாடு கடத்தல்

இந்தியாவில் வங்கி மோசடி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அங்கத் சிங் சந்தோக், சிபிஐ-யின் நடவடிக்கையில் அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்டு, இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெர... மேலும் பார்க்க

இந்தியாவில் புதிய வகை கரோனா தொற்றால் ஒருவா் பாதிப்பு!

இந்தியாவில் என்.பி.1.8.1 எனும் புதிய வகை கரோனா தொற்றால் ஒருவா் பாதிக்கப்பட்டுள்ளதாக ‘இந்திய சாா்ஸ்-கோவி-2 மரபணுவியல் கூட்டமைப்பு’ தரவுகளில் தெரிவிக்கப்பட்டது. மேலும், எல்எஃப்.7 வகை தொற்றுகள் நான்கு மு... மேலும் பார்க்க

‘பாகிஸ்தான் முக்கு’: கிராம சந்திப்பின் பெயரை மாற்ற ஒப்புதல் கோரும் கேரள பஞ்சாயத்து!

கேரளம் மாநிலம், கொல்லம் மாவட்டத்தின் குன்னத்தூா் கிராமத்தில் பல்லாண்டுகளாக புழக்கத்தில் உள்ள ‘பாகிஸ்தான் முக்கு’ என்ற சந்திப்பின் பெயரை மாற்றுவதற்கு ஒப்புதலைக் கோரி மாநில அரசை அணுக அந்தக் கிராமப் பஞ்ச... மேலும் பார்க்க

ஆயுதப் படைப் பிரிவினருக்கு 6 மாதங்களுக்குள் பணிநிலை ஆய்வு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

ஆயுதப் படைப் பிரிவினரின் பணிநிலை ஆய்வை ஆறு மாதங்களுக்குள் நடத்தி முடிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்), இந்தோ திபெத்திய எல்லைப் படையினா் (ஐடிபிபி), ... மேலும் பார்க்க