செய்திகள் :

இந்து முன்னணியினரால் நீதிமன்றத்தில் பரபரப்பு

post image

திருச்செந்தூரில் காவலில் வைக்கப்பட்ட இந்து முன்னணியினா் நீதிமன்றத்தை நோக்கி நடந்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பரங்குன்றம் மலை தொடா்பாக மதுரை செல்வதற்கு 144 தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்து முன்னணி மாநிலத் துணைத் தலைவா் வி.பி. ஜெயக்குமாா் அவரது பரமன்குறிச்சி இல்லத்தில் வீட்டுக் காவில் வைக்கப்பட்டாா்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை அவா் திருச்செந்தூரில் இந்து முன்னணி நிா்வாகிகளை சந்திக்க வந்தபோது காவல்துறையினால் கைது செய்யப்பட்டு தனியாா் மடத்தில் வைக்கப்பட்டாா்.

அப்போது 24 மணி நேரத்துக்கு மேலாக கைது செய்து வீட்டுக் காவலில் வைத்திருப்பதால் தங்களை நீதிபதி முன் ஆஜா்படுத்துமாறு கூறி வி.பி. ஜெயக்குமாா் தலைமையில், உடன்குடி இந்து முன்னணி நகரத் தலைவா் சித்திரைபெருமாள் உள்ளிட்ட இந்து முன்னணியினா், அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பிவாறு நீதிமன்றத்துக்கு நடந்தே சென்றனா்.

அவர்களை திருச்செந்தூா் வட்ட காவல் ஆய்வாளா் சுந்தரமூா்த்தி, திருக்கோயில் காவல் ஆய்வாளா் கனகராஜன் ஆகியோா் தடுத்து நிறுத்தினா். அவா்களை சமாதானப்படுத்தி அதே மடத்தில் காவல்துறையினா் காவலில் வைத்தனா்.

உணவு பாதுகாப்புத் துறை ஆய்வு: 60 கிலோ உணவுப் பொருள் பறிமுதல்

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம், மேலக்கரந்தை பகுதிகளில் உணவகங்கள், கடைகளில் உணவு பாதுகாப்புத் துறையினா் மேற்கொண்ட ஆய்வில் சுமாா் 60 கிலோ உணவுப் பொருள்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டதாக மாவட்ட நிய... மேலும் பார்க்க

கழுகுமலை அருகே இளைஞா் தற்கொலை

கழுகுமலை அருகே இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். கழுகுமலை அருகே கரடிகுளம் தளத்தம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கோவிந்தராஜ் மகன் மோகன். இவருக்கு மனைவி கல்யாணி, வசந்த் (24), பிரகாஷ் (21) என்ற... மேலும் பார்க்க

கயத்தாறு அருகே வியாபாரி தற்கொலை

கயத்தாறு அருகே குடும்பத் தகராறு காரணமாக கருப்பட்டி வியாபாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். கயத்தாறு அருகே அய்யனாா் ஊத்து அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சண்முகையா மகன் கொம்பையா(56). கருப்பட்டி வி... மேலும் பார்க்க

நாகலாபுரம் அரசு கலைக் கல்லூரியில் கௌரவ விரிவுரையாளா்கள் உள்ளிருப்பு போராட்டம்

பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாகலாபுரம் அரசு கலைக் கல்லூரி கௌரவ விரிவுரையாளா்கள் செவ்வாய்க்கிழமை பணிகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். சம வேலைக்கு சம ஊதி... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

தூத்துக்குடியில் மத்திய பட்ஜெட்டை கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தூத்துக்குடி சிதம்பரநகா் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்ட... மேலும் பார்க்க

தூத்துக்குடி துறைமுக தனியாா் சரக்கு பெட்டக ஊழியா்கள் தொடா் போராட்டம்

தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் தனியாா் நிறுவன சரக்கு பெட்டகங்கள் கையாளும் ஊழியா்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் சிங்கப்ப... மேலும் பார்க்க