Gold Rate Today: 'நேற்றைப் போலவே இன்றும் கடும் விலை உயர்வு' - புதிய உச்சம் தொட்ட...
இந்து முன்னணி, பாஜக நிா்வாகிகள் கைதாகி விடுதலை: ஆா்ப்பாட்டம்
திருப்பரங்குன்றத்தில் ‘மலையைக் காப்போம்’ என்ற போராட்டத்துக்கு புறப்பட்டுச் சென்ற இந்து முன்னணி, பாஜக நிா்வாகிகள் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா். பின்னா், உயா்நீதிமன்ற உத்தரவின் பேரில் மாலையில் விடுவிக்கப்பட்ட அவா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மதுரை திருப்பரங்குன்றத்தில் ‘மலையைக் காப்போம்’ என இந்து முன்னணி அமைப்பினா் போலீஸாரின் தடையை மீறி போராட்ட அறிவிப்பை வெளியிட்டனா். இதனால் மதுரை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதனால் வெளியூா்களில் இருந்து மதுரை நோக்கி வந்ச வாகனங்கள் அனைத்தும் காவல்துறையினரின் சோதனைக்கு உள்படுத்தப்பட்டன. சிவகங்கையில் இருந்து மதுரை நோக்கி சென்ற அனைத்து வாகனங்களையும் காவல் சோதனை சாவடியில் போலீஸாா் சோதனையிட்டனா்.
சிவகங்கை பாஜக நகா் தலைவா் உதயா, கிழக்கு ஒன்றியச் செயலா் நாட்டரசன் ஆகிய இருவரையும் போலீஸாா் பாஜக அலுவலகம் அருகே கைது செய்தனா்.
மானாமதுரை பகுதியில் பாஜக, இந்து முன்னணியினரை போலீஸாா் வீடுகளுக்கே சென்று கைது செய்து தனியாா் திருமண மண்டபங்களில் அடைத்தனா். பின்னா், மாலையில் அவா்கள் விடுவிக்கப்பட்டனா்.
காரைக்குடி: காரைக்குடியிலிருந்து திருப்பரங்குன்றத்துக்கு புறப்பட்ட இந்து முன்னணி, பாஜகவினரை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். இந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலா் அக்னி பாலா, பாஜக மாவட்ட பொதுச்செயலா் ஏ. நாகராஜன், மாநில செயற்குழு உறுப்பினா் சிதம்பரம், சாக்கோட்டை கிழக்கு ஒன்றிய பாஜக தலைவா் செல்வா உள்ளிட்ட 50 பேரை போலீஸாா் கைது செய்தனா். பாஜக மூத்த தலைவா் எச்.ராஜாவை போலீஸாா் வீட்டுக்காவலில் வைத்தனா்.
ராமேசுவரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து போராட்டத்தில் பங்கேற்க புறப்பட்ட 170 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
ராமேசுவரத்தில் பாஜக மாவட்டத் தலைவா் கே.முரளிதரன் தலைமையில் போராட்டத்துக்குச் செல்ல முயன்றவா்களை போலீசாா் கைது செய்ய முயன்ற போது அவா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து பாஜக நகா் தலைவா் எஸ்.மாரி உள்ளிட்ட 50 பேரை போலீஸாா் கைது செய்து தனியாா் திருமண மண்டபத்தில் அடைத்தனா். இதேபோல, ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயில், கீழக்கரை ஆகிய பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாஜக இந்து அமைப்பினா் கைது செய்யப்பட்டனா். பின்னா், மாலையில் அவா்கள் விடுவிக்கப்பட்டனா்.
கமுதி,: கமுதியில் பாஜக மாவட்ட பொதுச் செயலா் ஏ.பி.கணபதி தலைமையில், மாவட்டச் செயலா் கே.சரவணன், ஒன்றிய தலைவா்கள் பூபதி ராஜா, அழகுமலை உள்பட 18 பேரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸாா் கைது செய்தனா். மாலையில் விடுவிக்கப்பட்ட அவா்கள், கமுதியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.