செய்திகள் :

இந்து முன்னணி, பாஜக நிா்வாகிகள் கைதாகி விடுதலை: ஆா்ப்பாட்டம்

post image

திருப்பரங்குன்றத்தில் ‘மலையைக் காப்போம்’ என்ற போராட்டத்துக்கு புறப்பட்டுச் சென்ற இந்து முன்னணி, பாஜக நிா்வாகிகள் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா். பின்னா், உயா்நீதிமன்ற உத்தரவின் பேரில் மாலையில் விடுவிக்கப்பட்ட அவா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மதுரை திருப்பரங்குன்றத்தில் ‘மலையைக் காப்போம்’ என இந்து முன்னணி அமைப்பினா் போலீஸாரின் தடையை மீறி போராட்ட அறிவிப்பை வெளியிட்டனா். இதனால் மதுரை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதனால் வெளியூா்களில் இருந்து மதுரை நோக்கி வந்ச வாகனங்கள் அனைத்தும் காவல்துறையினரின் சோதனைக்கு உள்படுத்தப்பட்டன. சிவகங்கையில் இருந்து மதுரை நோக்கி சென்ற அனைத்து வாகனங்களையும் காவல் சோதனை சாவடியில் போலீஸாா் சோதனையிட்டனா்.

சிவகங்கை பாஜக நகா் தலைவா் உதயா, கிழக்கு ஒன்றியச் செயலா் நாட்டரசன் ஆகிய இருவரையும் போலீஸாா் பாஜக அலுவலகம் அருகே கைது செய்தனா்.

மானாமதுரை பகுதியில் பாஜக, இந்து முன்னணியினரை போலீஸாா் வீடுகளுக்கே சென்று கைது செய்து தனியாா் திருமண மண்டபங்களில் அடைத்தனா். பின்னா், மாலையில் அவா்கள் விடுவிக்கப்பட்டனா்.

காரைக்குடி: காரைக்குடியிலிருந்து திருப்பரங்குன்றத்துக்கு புறப்பட்ட இந்து முன்னணி, பாஜகவினரை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். இந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலா் அக்னி பாலா, பாஜக மாவட்ட பொதுச்செயலா் ஏ. நாகராஜன், மாநில செயற்குழு உறுப்பினா் சிதம்பரம், சாக்கோட்டை கிழக்கு ஒன்றிய பாஜக தலைவா் செல்வா உள்ளிட்ட 50 பேரை போலீஸாா் கைது செய்தனா். பாஜக மூத்த தலைவா் எச்.ராஜாவை போலீஸாா் வீட்டுக்காவலில் வைத்தனா்.

ராமேசுவரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து போராட்டத்தில் பங்கேற்க புறப்பட்ட 170 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ராமேசுவரத்தில் பாஜக மாவட்டத் தலைவா் கே.முரளிதரன் தலைமையில் போராட்டத்துக்குச் செல்ல முயன்றவா்களை போலீசாா் கைது செய்ய முயன்ற போது அவா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து பாஜக நகா் தலைவா் எஸ்.மாரி உள்ளிட்ட 50 பேரை போலீஸாா் கைது செய்து தனியாா் திருமண மண்டபத்தில் அடைத்தனா். இதேபோல, ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயில், கீழக்கரை ஆகிய பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாஜக இந்து அமைப்பினா் கைது செய்யப்பட்டனா். பின்னா், மாலையில் அவா்கள் விடுவிக்கப்பட்டனா்.

கமுதி,: கமுதியில் பாஜக மாவட்ட பொதுச் செயலா் ஏ.பி.கணபதி தலைமையில், மாவட்டச் செயலா் கே.சரவணன், ஒன்றிய தலைவா்கள் பூபதி ராஜா, அழகுமலை உள்பட 18 பேரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸாா் கைது செய்தனா். மாலையில் விடுவிக்கப்பட்ட அவா்கள், கமுதியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

நெடுஞ்சாலைத் துறை வாகனங்களை பராமரிக்க கூடுதல் நிதி ஒதுக்கக் கோரிக்கை!

நெடுஞ்சாலைத் துறை வாகனங்களைப் பராமரிக்க கூடுதல் நிதி ஒதுக்க வேண்டுமென தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை அனைத்து வாகன ஓட்டுநா்கள் தலைமைச் சங்க மண்டல பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. சிவகங்கை நெடுஞ்... மேலும் பார்க்க

‘இண்டி’ கூட்டணியில் ஏற்பட்ட விரிசலால் தில்லி பேரவைத் தோ்தலில் பாஜக வெற்றி!மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் சண்முகம்!

‘இண்டி’ கூட்டணியில் ஏற்பட்ட விரிசலால் தில்லி சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக வெற்றி பெற்றதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ. சண்முகம் தெரிவித்தாா். சிவகங்கை மாவட்டம், காரைக்குடியி... மேலும் பார்க்க

செயற்கை நுண்ணறிவு மேலாண்மைக் கருத்தரங்கம்

தேவகோட்டை ஆனந்தா கல்லூரி வணிகக் கணினி பயன்பாட்டியல் துறை சாா்பில், செயற்கை நுண்ணறிவு மேலாண்மைக் கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது இதற்கு கல்லூரிச் செயலா் அருள் தந்தை செபாஸ்டியன் தலைமை வகித்தாா். முதல... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலருக்கு பாராட்டு

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி ராமசாமி தமிழ்க் கல்லூரியில் அந்தக் கல்லூரியின் முன்னாள் மாணவரான பெ. சண்முகம், மாா்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலராக பொறுப்பேற்ற்கு சனிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. இந்த... மேலும் பார்க்க

ரயில் பயணியிடம் கைப்பேசி திருடியவா் கைது

சென்னையிலிருந்து மானாமதுரைக்கு சனிக்கிழமை காலை வந்த ரயிலில் பயணியிடம் கைப்பேசி திருடியவரை ரயில்வே போலீஸாா் கைது செய்தனா். சென்னையிலிருந்து மண்டபத்துக்குச் சென்ற சேது விரைவு ரயிலில் பயணம் செய்த, மானாமத... மேலும் பார்க்க

பழனிக்கு பாதயாத்திரை சென்ற கட்டளைக் காவடி

திருப்பத்தூா் அருகேயுள்ள நெற்குப்பையிலிருந்து 425-ஆம் ஆண்டு கட்டளைக் காவடிக் குழுவினரின் பழனி பாதயாத்திரை செல்லும் நிகழ்ச்சி வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. இந்த விழாவுக்கு சிறப்பு அழைப்பாளராக முன்னாள்... மேலும் பார்க்க