செய்திகள் :

“இப்போதே எம்.எல்.ஏ-வாக ஏற்றுக்கொண்டு மனு கொடுக்கிறார்கள் மக்கள்”- தி.மு.க அரூர் வேட்பாளர் அ.சண்முகம்

post image

தர்மபுரி மாவட்டத்தின் அரூர் தொகுதியில் தி.மு.க வேட்பாளராகக் களமிறங்கி இருப்பவர் அ.சண்முகம். 15 ஆண்டுகள் உள்ளாட்சிப் பொறுப்பு வகித்தவர் என்பதும், பகுதி மக்கள் எளிதில் அணுகும் நபராக இருப்பதும் அவரது தனிச்சிறப்பு.

வெற்றியை நோக்கி தீவிரமான பிரசார பயணத்தில் இருந்தவரை சந்தித்தபோது, “உதயசூரியனின் வெற்றி வாய்ப்பு மிகப் பிரகாசமாக இருக்குங்க. தி.மு.க அரசின் நலத்திட்டங்கள் மக்களுக்குப் பலன் கொடுத்திருப்பது, அவர்கள் முகத்தில் பிரதிபலிக்கும் மகிழ்ச்சியில் நன்கு தெரிகிறது” என்று முகம் மலர்ந்தார். தொடர்ந்து பேசியதில்..

எப்படி எதிர்கொள்கிறார்கள் தொகுதி மக்கள்?

“பஞ்சாயத்து தலைவராகவும், மாவட்ட கவுன்சிலராகவும் 15 வருடங்கள் பொதுப்பணி செய்திருக்கிறேன். கூப்பிட்ட குரலுக்கு ஓடிச் சென்று, பல வகைகளிலும் என்னாலான உதவிகளைச் செய்து கொடுத்திருக்கிறேன். அவப்பெயரோ, குற்றச்சாட்டோ எதுவுமில்லை. மக்களோடு ஒருவனாக இருக்கும் என்னைப் பேரன்புடன் வரவேற்று, உதயசூரியனுக்கு வாக்களிப்பதை உறுதி செய்கிறார்கள்.”

எதிரணி வேட்பாளர்கள் குறித்து என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

“ஏற்கெனவே எம்.எல்.ஏ-வாக தேர்வாகி 7 ஆண்டு காலம் தொகுதிக்கு எதையுமே செய்யாத நபருக்கே அ.தி.மு.க-வில் சீட் கொடுத்திருக்கிறார்கள். அவங்க கட்சிக்குள்ளேயே பலத்த அதிருப்தி இருக்கு. அதனாலும்தான் சொல்கிறேன், எனக்கு வெற்றி வாய்ப்பு அமோகமா இருக்கு.”

மக்களுடன்
மக்களுடன்

தொகுதி மக்களுக்கு உங்க தேர்தல் வாக்குறுதிகளில் முக்கியமானவை என்ன?

“ஈச்சம்பாடி அணைக்கட்டைச் சீரமைத்து, உபரிநீரை குழாய்கள் மூலம் 66 ஏரிகளுக்கு எடுத்துச் செல்வதன் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரத்துக்கு உத்தரவாதம் கிடைக்கச் செய்வேன். நிலத்தடி நீர் தட்டுப்பாடும் இதனால் தீரும். குடிநீர்ப் பிரச்னையும் தீரும். வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்காக தொழிற்பேட்டைகள் கொண்டு வர பாடுபடுவேன்.” என்றவர், முத்தாய்ப்பாகச் சொன்னது “பிரசாரத்துக்கு செல்லும் வழியில், இப்போதே என்னை எம்.எல்.ஏ-வாக ஏற்றுக்கொண்டிருக்கும் மக்கள் சில கோரிக்கை மனுக்களையும் கொடுக்கிறார்கள். இதைவிட வேறென்ன உத்தரவாதம் வேண்டும்ஞ் அரூரில் உதயசூரியன் மலர!”

தமிழகத்தில் பறக்கும் படை வேட்டையில் சிக்கியது இத்தனை கோடிகளா? - அர்ச்சனா பட்நாயக் வெளியிட்ட தகவல்

தமிழ்நாட்டில் இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட பரிசுப்பொருட்கள் மற்றும் பணம் குறித்த விவரங்களை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருக்கிறார். தமிழக சட்டமன்... மேலும் பார்க்க

மணிப்பூர்: தீப்பந்தத்துடன் வீதிக்கு வந்த பெண்கள்; உடைந்த நம்பிக்கையும் ஓயாத கலவரமும்;என்ன நடக்கிறது?

மணிப்பூர் மாநிலத்தில் 2023 மே மாதம் மெய்தி - குக்கி என இரு சமூகத்தினரிடையே தொடங்கிய கலவரம் இன்றுவரை நீடித்து வருகிறது. இந்தக் கலவரத்தில் இதுவரை 260-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், ஆயிரக்கணக்கானோர... மேலும் பார்க்க

"எங்களது ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளேன்" - ட்ரம்ப் பதிவு; நம்பிக்கையில் பாகிஸ்தான்; மௌனத்தில் ஈரான்

நேற்று பாகிஸ்தான் தலைநகரான இஸ்லாமாபாத்தில் நடக்கவிருந்த அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை திட்டமிட்டது போல நடக்கவில்லை. அமெரிக்கா தரப்பில் இருந்து அமெரிக்காவின் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், சிறப்பு தூதர் ... மேலும் பார்க்க

மேற்கு வங்கம் : பிரசார களத்துக்கு வந்த 'மீன்கள்' ; மேற்கு வங்கத்தை அசைக்கும் உணவு யுத்தம்!

கொல்கத்தாவின் பாரக்பூர் தொகுதியின் பா.ஜ.க வேட்பாளரான கௌஸ்தவ் பக்சி, பாரம்பரிய உடை அணிந்து கையில் ஒரு மீனுடன் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்து வருகிறார். அவருக்குப் பின்னால் மேளதாளங்கள் முழங்க ஆதரவ... மேலும் பார்க்க

`எங்களுக்குத் தேவை நீதியே தவிர வெறுப்பு அல்ல' - பஹல்காம் தாக்குதல் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் மாவட்டத்தில் உள்ள பைசரானில், சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட கோரமான பயங்கரவாதத் தாக்குதல் நடந்து இன்றுடன் (ஏப்ரல் 22) ஓராண்டு நிறைவடைகிறது. 26 ஆண்களின் உயிரைப் பறித்த இந்... மேலும் பார்க்க

தமிழ்நாட்டில் தொடங்கியது `அமைதி நேரம்’ - ஓய்ந்தது 2026 சட்டமன்றத் தேர்தல் பிரசாரம்!

தமிழ்நாட்டின் சட்டப்பேரவைத் தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தமிழ்நாட்டின் தேர்தலில் இம்முறை தி.மு.க, அ.தி.மு.க, த.வெ.க, நா.த.க எனப் பலமான நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. மொத்தம் 5.73 கோடி ... மேலும் பார்க்க