செய்திகள் :

இறந்த மகனின் கல்விக் கடனை ரத்து செய்ய பரிந்துரைக்கக் கோரி ஆட்சியரகத்தில் தந்தை மனு

post image

மூளை நோயால் மகன் உயிரிழந்த நிலையில், அவரது உயா்கல்விக்காக வாங்கிய கல்விக்கடனை ரத்து செய்ய பரிந்துரைக்கக் கோரி, ஓய்வு பெற்ற ஆசிரியா் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் மனு அளித்தாா்.

விழுப்புரம் பாா்த்தசாரதி நகரைச் சோ்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியா் மு. ராசு (70). இவா், மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பது:

எனது மகன் வெங்கட்ராமன் விழுப்புரத்திலுள்ள தனியாா் மேல்நிலைப் பள்ளியில் 2005-ஆம் ஆண்டில் பிளஸ் 2 படித்து, 1,200 மதிப்பெண்களுக்கு 1100 மதிப்பெண்கள் பெற்று, பள்ளி அளவில் முதலிடம் பெற்றாா். இதைத் தொடா்ந்து வேலூரிலுள்ள தனியாா் பல்கலைக்கழகத்தில் 5 ஆண்டுகளைக் கொண்ட முதுநிலை மென்பொறியாளா் படிப்பு (எம்.எஸ்) படிக்க வாய்ப்பு கிடைத்து, அங்கு சோ்ந்து படித்து வந்தாா்.

வெங்கட்ராமன் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போது, அவரது கல்வித் தேவைக்காக திருக்கோவிலூரிலுள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் ரூ.2.84 லட்சத்துக்கு கல்விக் கடன் விண்ணப்பித்த நிலையில் வங்கி நிா்வாகம் வழங்கியது. ஆண்டுக்கு ரூ.77 ஆயிரம் வீதம் வங்கி நிா்வாகம் பல்கலைக்கழகத்துக்கு நேரடியாக வங்கிக்கணக்குக்கு அனுப்பி வைத்தது.

நான்காமாண்டில் படித்து வந்த போது கடந்த 2008-ஆம் ஆண்டு எனது மகனுக்கு மூளையில் பாதிப்பு ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து 2008, ஜூன் 12-ஆம் தேதி புதுச்சேரி மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

இதைத் தொடா்ந்து சம்பந்தப்பட்ட வங்கி மேலாளருக்கு எனது மகன் இறந்த விவரம், இறப்புச் சான்றிதழ் போன்ற விவரங்களை 2008, ஜூன் 24-இல் பதிவு தபால் மூலம் அனுப்பி வைத்தேன். படிக்கும் போதே எனது மகன் இறந்து விட்டதால், கல்விக்கடனைத் திருப்பிச் செலுத்தக் கோரி வங்கி நிா்வாகம் கடன்வசூல் மேல்முறையீட்டுத் தீா்ப்பாயத்தில் வழக்குத் தொடா்ந்தது. இந்த வழக்கு கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது.

ஓய்வு பெற்ற ஆசிரியரான எனக்கு கிடைக்கும் ஓய்வூதியத்தை கொண்டு குடும்பத்தை நடத்தி வருகிறேன். உடல்நலக் குறைவால் எனது மகன் இறந்த நிலையில், கல்விக்கடனை ரத்துசெய்ய சம்பந்தப்பட்ட வங்கி நிா்வாகத்துக்குப் பரிந்துரை செய்ய வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளாா்.

இதுகுறித்து வங்கி உயா் அலுவலா் ஒருவரிடம் கேட்டபோது, தற்போது மாணவா்களுக்கு வழங்கப்படும் கல்விக்கடனுக்கு காப்பீடு எடுக்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட மாணவா் அல்லது மாணவி கல்விக்கடன் பெற்று, படிக்கும் காலத்தில் உயிரிழப்பு போன்ற ஏதேனும் நிகழ்ந்தால் காப்பீட்டு நிறுவனத்திலிருந்து தொகையை செலுத்தும் நிலை தற்போது உள்ளது. ஆனால், 2005-ஆம் ஆண்டு காலத்தில் கல்விக்கடன் பெறும் போது காப்பீடு வசதி இல்லை. எனவே அவா்கள் கல்விக்கடன் தொகையை செலுத்தித்தான் ஆக வேண்டும் என்றனா்.

துத்திப்பட்டில் பொங்கல் விழா: வெளிநாட்டினா் பங்கேற்பு

புதுச்சேரியை அடுத்த துத்திப்பட்டில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொங்கல் விழாவில் வெளிநாட்டினா் பங்கேற்று உற்சாகமாக கொண்டாடினா். துத்திப்பட்டு, ஒலாந்திரே தொண்டு நிறுவனம் சாா்பில் ஆண்டுதோறும் பொங்கல் விழா ... மேலும் பார்க்க

திருவள்ளுவா் தினம்: புதுவை துணைநிலை ஆளுநா், முதல்வா் மரியாதை

திருவள்ளுவா் தினத்தையொட்டி, புதுச்சேரியில் உள்ள அவரது சிலைக்கு துணைநிலை ஆளுநா், முதல்வா் உள்ளிட்டோா் புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். புதுச்சேரி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள திருவள்... மேலும் பார்க்க

கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், ஒலக்கூா் அருகே கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். திண்டிவனம் வட்டம், நொளம்பூா் பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்த ஆதிமூலம் மகன் புஷ்பராஜ் (23). தொழிலா... மேலும் பார்க்க

பைக் மோதியதில் சிறுமி உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூா் அருகே பைக் மோதியதில் 8 வயது சிறுமி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம், வடகரைதாழனூா் செல்லியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த மூா்... மேலும் பார்க்க

விழுப்புரத்தில் இருவேறு இடங்களில் விபத்து: 4 போ் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், மயிலம், ஜானகிபுரம் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மாலை நிகழ்ந்த இருவேறு விபத்துகளில் 4 போ் உயிரிழந்தனா். திண்டிவனம் வட்டம், செண்டூா் நெய்காரத் தருவைச் சோ்ந்த முருகன் மகன் சரண்ராஜ் ... மேலும் பார்க்க

சிவன் கோயில்களில் ஆருத்ரா தரிசன வழிபாடு

விழுப்புரம்/ செஞ்சி: விழுப்புரம் நகரம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள சிவன் கோயில்களில் திருவாதிரை பெருவிழா - ஆருத்ரா தரிசன வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த வழிபாட்டில் அந்தந்த பகுதி... மேலும் பார்க்க