செய்திகள் :

'நாங்க குரைக்கிற நாய் கிடையாது' - மீண்டும் அண்ணாமலையை சீண்டிய தவெக அருண்ராஜ்

post image

தவெக கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ் கோவையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், “கூட்டணி குறித்து உரிய நேரத்தில் முடிவு செய்யப்படும். கூட்டணிக்காக ஒரு குழு அமைக்கப்படும். அண்ணாமலை தவெகவை தொடர்ந்து விமர்சிக்கிறார். எனக்கு அவரைப் பற்றித் தெரியாது. ஆனால் நாங்கள் யாரும் நாய் கிடையாது. முக்கியமாக குரைக்கிற நாய் இல்லை.

அருண்ராஜ்
அருண்ராஜ்

நாங்கள் ஆறறிவுள்ள மனிதர்கள். தந்தை பெரியார் கூறியபடி பகுத்தறிவுள்ள தொண்டர்கள். விஜய் தற்போது நடிகர் கிடையாது. அவர் முன்னாள் நடிகர். விஜய் நடிப்பை முற்றிலுமாக விட்டுவிட்டு அரசியலுக்கு மக்கள் சேவை செய்வதற்காக வந்துள்ளார்.

ஈரோடு மாநாட்டிற்கு வந்தவர்கள் நடிகரைப் பார்ப்பதற்காக வரவில்லை. தமிழ்நாட்டின் முதன்மை அரசியல் கட்சியாக இருக்கக்கூடிய தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரைதான் பார்க்க வந்தார்கள். விஜய் நடிப்பை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்துள்ளார். ஆனால் அரசியலில் தற்போதும் சிலர் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் யார் என்று நான் குறிப்பிட விரும்பவில்லை.

தவெக தலைவர் விஜய்

Political Vijay is more Powerful then Actor Vijay.” என்று ஆங்கிலத்தின் கூறினார். தொடர்ந்த பேசிய அவர், “அனைத்து தரப்பு மக்களிடமும் கருத்துகள் கேட்கப்பட்டு மக்களுக்கான தேர்தல் அறிக்கை தயாரிக்கப்படும். தமிழ்நாடு வளர்ச்சி, சமூக நீதி, தொழில் வளர்ச்சி, இயற்கை வளங்கள் பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்கள் அதில் இருக்கும்.

களத்தில் யார் இல்லை என்று மக்களிடமே கேட்டுக் கொள்ளுங்கள். தமிழ்நாட்டில் எந்த ஒரு கட்சிக்காவது பணம் கொடுக்காமல் வாகனங்கள் ஏற்பாடு செய்யாமல் இவ்வளவு கூட்டம் வருமா. அப்படியென்றால் மக்கள் ஆதரவு யாருக்கு உள்ளது, களத்தில் யார் இருக்கிறார்கள் என்று மக்களுக்கே தெரியும் வரைவு வாக்காளர் பட்டியலில் தங்களின் பெயர்கள் உள்ளதா என்பதை மக்கள் பார்த்துக்கொள்ள வேண்டும்.

தவெக தொண்டர்கள்
தவெக

எங்களைப் பொறுத்தவரை அனைவருக்கும் ஓட்டுரிமை இருக்க வேண்டும். உண்மையான வாக்காளர்கள் நீக்கப்படக்கூடாது. எங்கள் அரசியல் அறிவை யாரும் குறைவாக எடை போட வேண்டாம். உரிய நேரத்தில் உரிய முடிவுகள் எடுக்கப்படும்.” என்றார்.

"கக்கூஸ் கழுவத்தான் கண்ணகி நகர்ல தூக்கி போட்டீங்களா?" - கொந்தளிக்கும் மறுகுடியமர்வு மக்கள்

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் அடிப்படை வசதிகள் கூட இல்லையென்று சென்னையிலுள்ள கண்ணகி நகர், செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் ஆகிய குடியிருப்புப் பகுதி மக்களைத் திரட்டி சென்னை ... மேலும் பார்க்க

மகா. உள்ளாட்சித் தேர்தல்: 134 நகராட்சிகளை ஆளும் பாஜக கூட்டணி முன்னிலை; உத்தவுக்குப் பெரும் பின்னடைவு

மகாராஷ்டிரா முழுவதும் உள்ள நகராட்சிகளுக்குக் கடந்த 2ம் தேதி தேர்தல் நடந்தன. சில நகராட்சிகளுக்குத் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டு நேற்று தேர்தல் நடத்தப்பட்டன. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 10 மண... மேலும் பார்க்க

கர்நாடகா: "நானே முதல்வராகத் தொடர்வேன்" - சித்தராமையா விடாப்பிடி; டி.கே. சிவகுமாரின் பதில் என்ன?

மீண்டும் கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் இடையே மோதல் போக்கு தொடங்கியுள்ளது.சில மாதங்களுக்கு முன்பு, முதலமைச்சர் நாற்காலிக்காக இருவருக்கும் இடையே பிரச்னை இருந்தது. பி... மேலும் பார்க்க

பட்டமளிப்பு விழாவில் பெண்ணின் ஹிஜாப்பை இழுத்த நிதிஷ்; 'பணியில் சேரவில்லை' - மீண்டும்‌ சர்ச்சை

இந்த வாரத்தின் தொடக்கத்தில் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் ஆயுஷ் மருத்துவப் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டார்.அங்கே பட்டம் வாங்க வந்த முஸ்லிம் பெண் ஒருவரின் ஹிஜாப்பைப் பிடித்து இழுக்க முயன்றார். இ... மேலும் பார்க்க

நாமக்கல்: தவெக மாவட்டச் செயலாளர் செந்தில்நாதன் நீக்கம்; பொதுச்செயலாளர் ஆனந்த் அதிரடி; என்ன நடந்தது?

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்தவர் ஜே.ஜே.செந்தில்நாதன். தமிழக வெற்றிக் கழகத்தின் நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளராக இருந்து வந்தார். இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு 11 மணியளவில் கூட்ட... மேலும் பார்க்க

'அமெரிக்காவை விட்டு வெளியே செல்லாதீர்கள் H-1B விசாதாரர்களே' - ஆப்பிள், கூகுள் நிறுவனங்கள்

விசா விலை உயர்வு, சமூக வலைதள சோதனை என ஹெச்-1பி விசா வைத்திருப்பவர்களுக்குக் கடுமையான நெருக்கடிகளை தந்து வருகிறது ட்ரம்ப் அரசு.இந்தச் சூழலில், கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் ஒரு விஷயத்தைத் தெரிவித்... மேலும் பார்க்க