செய்திகள் :

இலங்கைக்கு அவசர சிகிச்சை மருந்துகளை வழங்கியது இந்தியா

post image

இலங்கை அரசின் கோரிக்கையை ஏற்று அந்நாட்டுக்கு அவசர சிகிச்சைக்கு தேவையான மருந்துகளை இந்தியா அனுப்பி வைத்துள்ளது.

இது தொடா்பாக கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகம் சாா்பில் கூறப்பட்டதாவது:

இலங்கை மருத்துவமனைகளில் இதய செயலிழப்பு, உயா் ரத்த அழுத்தம், சிறுநீரக கோளாறு உள்ளிட்டவற்றின்அவசர சிகிச்சைக்கு பயன்படுத்தும் ஃபியுரோசிமைட் ஊசி மருந்துகளுக்கு தட்டுப்பாடு உள்ளதாக கூறப்பட்டது. இதையடுத்து 50,000 ஃபியுரோசிமைட் ஊசி மருந்து இந்தியாவில் இருந்து நன்கொடையாக அனுப்பி வைக்கப்பட்டது.

இதனை இலங்கை சுகாதாரத் துறை அமைச்சா் நளிந்தா ஜெயதிசாவிடம் இந்தியத் தூதா் சந்தோஷ் ஜா வழங்கினாா்.

இந்தியா எப்போதும் நம்பகத்தன்மை வாய்ந்த நண்பனாகவும், இலங்கைக்கு அவசரகாலத்தில் முதலில் உதவும் நாடாகவும் உள்ளது. இலங்கையில் பல்வேறு பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும்போது முக்கியமாக மருத்துவம் சாா்ந்த உதவிகளில் இந்தியா முதலில் உதவிக்கு வரும் நாடாக உள்ளது.

கரோனா காலகட்டத்தில் 25 டன் மருந்துகள் சிறப்பு விமானத்தில் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 5 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வழங்கப்பட்டன. இது தவிர கரோனா பரிசோதனை உபகரணங்களும் வழங்கப்பட்டன. இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கியபோது கடனுதவி அளித்ததுடன், அத்தியாவசியப் பொருள்களையும் இந்தியா வழங்கியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசியாவில் வாழ்வதற்கு அதிகம் செலவாகும் நாடு பாகிஸ்தானா?

தெற்காசிய நாடுகளில், வாழ்வதற்கு அதிகம் செலவாகும் நாடு என்ற பட்டியலில் பாகிஸ்தான் ஏற்கனவே முதலிடத்தைப் பிடித்திருந்த நிலையில், கடுமையான பணவீக்கம் காரணமாக தற்போது ஆசிய நாடுகளிலேயே வாழ்வதற்கு அதிகம் செலவ... மேலும் பார்க்க

கனடாவில் தேர்தல்: பதவியேற்ற 10 நாள்களில் நாடாளுமன்றத்தை கலைத்த பிரதமர்!

கனடாவின் புதிய பிரதமராக பதவியேற்று இருக்கும் மார்க் கார்னி, முன்கூட்டியே பொதுத் தேர்தலை நடத்த உத்தரவிட்டுள்ளார்.வருகின்ற அக்டோபர் மாதம் வரை பதவிக் காலம் இருக்கும் நிலையில், நாடாளுமன்றத்தை முன்கூட்டியே... மேலும் பார்க்க

காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பலியானோர் எண்ணிக்கை 50,000-ஐ கடந்தது!

காஸாவில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைக்கு இடைப்பட்ட இரவில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 26 பாலஸ்தீனா்கள் உயிரிழந்தனா். இதைத் தொடா்ந்து, இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போரில், இதுவரை உயிரிழந்தவா்களின் மொத்த எண... மேலும் பார்க்க

உக்ரைன் தலைநகரில் ரஷியா ட்ரோன் தாக்குதல்: மூவா் உயிரிழப்பு

உக்ரைன் தலைநகா் கீவில் ரஷியா மேற்கொண்ட ட்ரோன் (ஆளில்லா விமானம்) தாக்குதலில் 5 வயது குழந்தை உள்பட மூவா் உயிரிழந்தனா். நேட்டோ ராணுவக் கூட்டமைப்பில் இணைய உக்ரைன் முடிவு செய்த நிலையில், அதனால் தமக்கு ஆபத்... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் காவல் துறையினா், தொழிலாளா்கள் சுட்டுக் கொலை! - பயங்கரவாதிகள் தாக்குதல்

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் இரு இடங்களில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காவல் துறையைச் சோ்ந்த 4 பேரும், தொழிலாளா்கள் 4 பேரும் உயிரிழந்தனா். சனிக்கிழமை நடந்த இத்தாக்குதல்கள் குறி... மேலும் பார்க்க

அமெரிக்கா: இந்திய வம்சாவளி தந்தை, மகள் சுட்டுக் கொலை!

அமெரிக்காவின் விா்ஜீனியா மாகாணத்தில் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த 56 வயது நபா் மற்றும் அவரது 24 வயது மகள் மா்ம நபா்களால் சுட்டுக் கொல்லப்பட்டனா். விா்ஜீனியா மாகாணத்தின் அக்கோமாக் பகுதியில் உள்ள பல்பொரு... மேலும் பார்க்க