செய்திகள் :

"தவெக-விற்குச் செல்ல செங்கோட்டையனை நான் தூண்டிவிட்டேனா?" - டிடிவி தினகரன் சொல்வது என்ன?

post image

அமமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ள மதுரை வந்த அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

டிடிவி தினகரன்
டிடிவி தினகரன்

அப்போது, "அரசியல் ரீதியாக எது நடந்தாலும் என்னையும், அமமுக-வையும் தொடர்புபடுத்தி பேசுகிறார்கள். நான் தூண்டிவிட்டுதான் தவெகவிற்கு செங்கோட்டையன் சென்றதாகச் சொல்கிறார்கள், ஓபிஎஸ் எந்த முடிவெடுத்தாலும் நான்தான் தூண்டிவிடுவதாக வதந்தியைப் பரப்புகிறார்கள்.

ஓபிஎஸ் முடிவெடுத்துவிட்டார், டிடிவி தினகரன் இன்னும் முடிவெடுக்கவில்லை என்றும் சிலர் கேட்கிறார்கள். அமமுக என்ன செய்ய வேண்டும் என்பதை நாங்கள்தான் முடிவு செய்வோம். எங்கள் கட்சியிலுள்ள தகுதியான வேட்பாளர்களுக்குப் போட்டியிட வாய்ப்பளிக்கின்ற கூட்டணிக்குத்தான் நாங்கள் செல்வோம்.

திமுக கூட்டணியில் 7 ஆண்டுகளாக உள்ள கட்சிகளுக்கு தொகுதிப் பங்கீடு அறிவித்துவிட்டார்களா? நாங்கள் புதிதாக ஒரு கூட்டணியில் செல்லவிருக்கிறோம் என்றால் எத்தனை தொகுதிகள் என்று பேசிய பிறகுதான் கூட்டணிக்குச் செல்ல முடியும்.

தமிழ்நாட்டில் தற்போது கூட்டணிகளுக்குத் தலைமை வகிக்கும் கட்சிகளும், புதிதாக கூட்டணியை உருவாக்க நினைக்கும் கட்சிகளும் நாங்கள் அவர்களது கூட்டணிக்கு வர வேண்டும் எனப் பேசிவருவது உண்மை, ஆனால் நாங்கள் இன்னும் முடிவெடுக்கவில்லை.

டிடிவி தினகரன்
டிடிவி தினகரன்

தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மீண்டும் வரவேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்துகிறார். அது குறித்து நாங்கள் எந்த முடிவும் எடுக்கவில்லை.

டெல்லிக்குச் சென்று விட்டு வந்தாலோ, தலைவர்களைச் சந்தித்தாலோ எங்களுக்கு அழுத்தம் கொடுப்பதாகச் சிலர் கூறுகிறார்கள். நாங்கள் எந்த முடிவாக இருந்தாலும் வெளிப்படையாகவும், தைரியமாகவும் சொல்வோம். ஊடகங்கள் எங்கள் மீது சேற்றை வாரி இறைத்தாலும் உங்கள் ஆசைக்கு நாங்கள் முடிவெடுக்க மாட்டோம்.

நான் பெங்களூரிலிருந்து டெல்லி சென்று பாஜக தலைவர்களைச் சந்தித்ததாகப் பரப்பப்படும் செய்திகள் உண்மையல்ல. பழைய கூட்டணியில் உள்ளவர்கள் கூட்டணிக்காக என்னிடம் பேசுவது உண்மை. ஆனால் நான் யாரையும் சந்திக்கவில்லை. எந்த அழுத்தமும் எனக்கு இல்லை. கூட்டணிக்கான யாருடைய அழைப்பையும் நிராகரிக்கவில்லை.

நான் தேர்தலில் போட்டியிடுகிறேனா இல்லையா என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை.

2024 தேர்தலில் எப்படியோ திமுக-வுக்கு மக்கள் வாக்களித்து விட்டார்கள். திமுக கொடுத்த முக்கிய தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் இந்த முறை திமுகவுக்கு எதிராகத்தான் வாக்களிப்பார்கள்" என்றார்.

'என்னை அசிங்கப்படுத்துகின்றனர்'; 'இது என் கடைசி யுத்தம்' - ராமதாஸின் '25 இடங்கள்' டார்கெட்

பாமகவில் தந்தை - மகன் இடையே பிரச்னை நடந்து வருவது அனைவரும் அறிந்தது தான்.வரும் டிசம்பர் 29-ம் தேதி, சேலத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடக்க உள்ளது.இந்த நிலையில், ராமதாஸ் வீட... மேலும் பார்க்க

`தமிழ்நாட்டின்மீது வெறுப்புணர்ச்சி; பாஜக ஆதரவாளர்களே, ஒன்றிய அரசை கழுவி ஊற்றுகிறார்கள்!’ - ஸ்டாலின்

திருவண்ணாமலை, மலப்பாம்பாடி கலைஞர் திடலில், ரூ.2,095 கோடியில் முடிவுற்ற 314 பணிகளைத் திறந்துவைத்தல், 46 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, முதலமைச்சர் மு.... மேலும் பார்க்க

மீண்டும் அதிமுகவில் இணைந்த வேலுமணியின் நிழல் - பின்னணி என்ன?

கோவை அரசியல் களத்தில் எப்போதுமே பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. கொங்கு மண்டலத்தில் அதிமுக வலுவாக இருக்க முக்கிய காரணம் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி. கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் அவரின் கள... மேலும் பார்க்க

``விவசாயி வேடமிட்டு, விவசாயிகளை பாதிக்கின்ற சட்டங்களை ஆதரிப்பார்கள்!’’ - விமர்சித்த ஸ்டாலின்

திருவண்ணாமலையில் இன்றைய தினம், வேளாண் கண்காட்சியைத் தொடங்கி வைத்து, விவசாயிகளுக்கு வேளாண் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அப்போது அவர் பேசுகையில், ``நிலத்தில் நீரை பாய்ச்சியும்... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா தேர்தல்: அஜித் பவாருடனான பேச்சுவார்த்தை முறிவு; காங்கிரஸ் கூட்டணிக்கு வந்த சரத்பவார்

மகாராஷ்டிரா முழுவதும் இருக்கும் மாநகராட்சிகளுக்கு வரும் ஜனவரி 15ம் தேதி தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலில் ஆளும் பா.ஜ.க மற்றும் சிவசேனா(ஷிண்டே) கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன.அதே சமயம் இதே க... மேலும் பார்க்க