செய்திகள் :

Kanimozhi: "நம்முடைய கலை வடிவங்களையும் மொழியையும் பிடுங்கிக் கொண்டு சென்றுவிட்டார்கள்" - கனிமொழி

post image

இயக்குநர் பா. ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் நடத்தும் 'மார்கழியில் மக்களிசை' நிகழ்வு நேற்றைய தினம் தொடங்கியது.

6வது முறையாகத் தொடர்ந்து நடைபெறும் இந்த நிகழ்வை கனிமொழி எம்.பி., இயக்குநர்கள் வெற்றி மாறன், லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் ஆகியோர் பறையடித்துத் தொடங்கி வைத்தனர்.

Margazhiyil Makkalisai 2025
Margazhiyil Makkalisai 2025

இந்த நிகழ்வைத் தொடங்கி வைத்த பிறகு நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி இந்த நிகழ்வுக் குறித்துப் பேசினார்.

கனிமொழி பேசும்போது, "'மார்கழியில் மக்களிசை' என்பது அரசியல் பேசக்கூடிய மேடை. கலை என்பது மக்களைப் பிரதிபலிக்கும் ஒன்றாக மட்டும் இருக்கக் கூடாது.

உளி போல் சமூகத்தைச் செதுக்க வேண்டிய ஒன்றாக இருக்க வேண்டும். அப்படியான கலைக்கான மேடையைத்தான் ரஞ்சித் அமைத்துக் கொடுத்திருக்கிறார்.

Kanimozhi MP
Kanimozhi MP

இங்கு கலைஞர்கள் பேசக் கூடிய அரசியல் மிக முக்கியமான ஒன்று. நம்முடைய கலை வடிவங்களையும் மொழியையும் பிடுங்கிக் கொண்டு சென்றுவிட்டார்கள். இன்றைக்குப் பறையைக்கூட நம் கைகளிலிருந்து வேறு யாரோ எடுத்து வாசிக்கத் தொடங்கிவிட்டார்கள்.

அதை நமது என்று சொல்லக்கூடிய ஒரு மேடையாக இதனை ரஞ்சித் மாற்றியிருக்கிறார். அது நம்முடைய இசை என்பதை இங்கும் நாம் உரக்கச் சொல்லுவோம்" என்றார்.

'ஊரூரா கும்மிப்பாடிட்டு அலையிதன்னு கேவலமா பேசுனாங்க' - கலக்கும் வாசுதேவநல்லூர் கும்மிப்பாட்டு குழு!

'வாசுதேவநல்லூர் கும்மிப்பாட்டு' ங்கிறது தென் மாவட்டப் பகுதிகளில் மிகப் பிரபலமான, மக்களால் விரும்பப்படுகிற கும்மிப்பாட்டு குழுவாக இருந்து வருகிறது. கும்மிப்பாட்டு என்றாலே பெண்கள் கும்மியடிப்பதை தான் பா... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூர்: புதிய கற்கால வாழ்க்கை; 8000 ஆண்டுகள் பழமையான தேய்ப்புப் பள்ளங்கள் கண்டுபிடிப்பு

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே செண்பகத்தோப்பு பகுதியில் சுமார் 8,000 ஆண்டுகளுக்கு முன்பு பாறையில் புதிய கற்காலக் கைக்கோடரிகளை வழுவழுப்பாக்கும்போது உருவான தேய்ப்புப் பள்ளங்களை ராமநாதபுரம்... மேலும் பார்க்க