செய்திகள் :

"இஸ்ரேலும் கைகோக்கிறது: ஈரான் போருக்கு தயார்; ஆனாலும் நிறுத்துகிறோம்" - ட்ரம்ப் கூறும் காரணம் என்ன?

post image

போர்... போர் நிறுத்தம்... புரிந்துணர்வு ஒப்பந்தம்... போர் நிறுத்தம்... போர்... மூன்று நாள்களுக்கு போர் நிறுத்தம்... மீண்டும் போர் - இது தான் கடந்த 155 நாள்களாக ஈரான் - அமெரிக்கா போரில் நடந்து வரும் சம்பவங்கள்.

கடந்த 24-ம் தேதி முதல் இரு நாடுகளும் சத்தமில்லாமல் போர் நிறுத்தத்தில் இருந்தன. ஆனால், அமெரிக்காவிற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்பை சந்திக்க இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஜூலை 28-ம் தேதி செல்ல, மீண்டும் தாக்குதலை தொடங்கியது ஈரான்.

இதற்குப் பதிலடி கொடுக்க அமெரிக்காவும் தாக்குதல் நடத்தத் தொடங்கியது.

ட்ரம்ப் எச்சரிக்கை

நேற்று ட்ரம்ப், "ஈரானை மிகக் கடுமையாகத் தாக்கப் போகிறோம். ஒரு கட்டத்தில் அவர்கள், 'எங்களால் இதற்கு மேல் இதைத் தாங்கிக்கொள்ளவே முடியாது' என்று கதறும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள்" என்று பேசியிருந்தார்.

ஈரான் தாக்குதல்
ஈரான் தாக்குதல்
இந்த நிலையில் ட்ரம்ப் தற்போது தனது ட்ரூத் பக்கத்தில் தாக்குதல் நிறுத்தம் குறித்து பதிவிட்டிருக்கிறார்...

"இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு உலகம் இதுவரை கண்டிராத அளவிலான ராணுவப் பலத்தோடும், அதிகாரத்தோடும் ஈரானிய இஸ்லாமியக் குடியரசுக்கு எதிராகத் தாக்க தயாராக, முழு வீச்சில் அமெரிக்கா தயாராக இருக்கிறது.

கோரிக்கை வந்துள்ளது...

இருந்தாலும், ஒரு ஒப்பந்தத்திற்கான எல்லைக்கோடுகள் ஒப்புக்கொள்ளப்பட்டு விட்டதால், எந்தவொரு தாக்குதலையும் நிறுத்தி வைக்குமாறு ஈரான் மற்றும் இதர மத்திய கிழக்கு நாடுகளிடமிருந்து நமக்குக் கோரிக்கை வந்துள்ளது.

இதில் ஹார்முஸ் நீர்ச்சந்தியை உடனடியாக, முழுமையாக மற்றும் முற்றிலுமாகத் திறப்பதும், ஈரானின் அணுஆயுத அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதும் அடங்கும்.

இஸ்ரேலும் கைகோக்கிறது

இந்தக் கோரிக்கையின் அடிப்படையில், உலகின் வருங்கால நலனைக் கருதியும், அதேபோல் வளம்மிக்க ஈரானின் எதிர்கால வாழ்வைக் கருதியும், விரைவாக ஒப்பந்தம் எட்டப்பட வேண்டும் என்ற நிபந்தனையுடன் தாக்குதலை ரத்து செய்ய நான் ஒப்புக்கொண்டுள்ளேன்.

இந்த உறுதிப்பாட்டில் இஸ்ரேல் நாடும் என்னுடன் கைகோக்கிறது. அனைவரும் உடனடியாக வேலையைத் தொடங்குங்கள், இதை விரைவாகச் செய்து முடியுங்கள்!"

60,000 பேர் எல்லை தாண்டல், பல உயிரிழப்புகள்... சியூட்டாவில் இப்போது என்ன நிலை?

மொராக்கோவிலிருந்து ஸ்பெயினின் சியூட்டா எல்லைக்குள் சுமார் 60,000 பேர் நுழைந்த சம்பவம், சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல உயிரிழப்புகளுக்கும் கடுமையான மனிதாபிமான நெருக்கடிக்கும் க... மேலும் பார்க்க

கயிறு இழுக்கும் போட்டியில் நிலைத்தடுமாறி விழுந்த அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன்; சுதாரித்த காவலர்கள்!

சேலம் மாவட்டம், அம்மாபேட்டை அருகில் உள்ள ஹோலி கிராஸ் தனியார் பள்ளியில் விளையாட்டு விழா போட்டிகள் இன்று நடைபெற்றன. அந்த பள்ளியின் முன்னாள் மாணவர் என்கிற முறையில் பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை அமை... மேலும் பார்க்க

நீட் போராட்டம், காவிரி: "அப்பப்பா… எவ்வளவு துரோகங்கள்!" - தயாநிதி மாறன் மறைமுக சாடல்

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, நீண்ட கால திமுக - காங்கிரஸ் கூட்டணி உடைந்தது. அதன் பின், தவெக உடன் கூட்டணி அமைத்தது காங்கிரஸ். இதன் பிறகு, திமுகவும், காங்கிரஸ் மாறி ம... மேலும் பார்க்க

"காங்கிரஸ் மேலிடம் சொல்வதை விட, திமுக சொல்வதை தான் டி.கே.சிவக்குமார் கேட்பார்" - நிர்மல் குமார்

காவிரி விவகாரம் மீண்டும் தமிழ்நாடு, கர்நாடகா இடையே பிரச்னையாக முற்றி வருகிறது. காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்ட மீண்டும் முயற்சிகளைச் செய்து வருகிறது கர்நாடகா அரசு. இதற்கு தமிழ்நாடு கண்டனங்களைத் தெரிவ... மேலும் பார்க்க

"காவிரி நம்மை பிரிப்பதற்குப் பதிலாக, ஒன்றிணைக்கட்டும்!" - விஜய்க்கு கர்நாடகா பாஜக சமாதான கடிதம்!

இந்தியாவில் எந்த மாநிலத்தில் காங்கிரஸும், பாஜகவும் ஒரு விஷயத்தில் ஒரே நிலைப்பாட்டில் இருக்கிறதோ என்னவோ, கர்நாடகாவில் ஒரு விஷயத்தில் இருக்கும். அது தான் காவிரி குறுக்கே அணை கட்டுவது. கர்நாடகாவில் காங்க... மேலும் பார்க்க

'வாக்குச்சாவடி எண் 75; வாக்கு எண் 412' - கொளத்தூர் EVM மெஷினில் என்ன பிரச்னை ஏற்பட்டது?

சென்னை சிந்தாதிரிப்பேட்டை கிடங்கில் கொளத்தூர் தொகுதியின் 14 பூத்களின் EVM மெஷின்களில் பதிவான வாக்குகளை சரிபார்க்கும் பணி ஐந்தாவது நாளாக நடந்து வருகிறது.EVM Verification "EVM இயந்திரங்கள் சரியாக பாதுகா... மேலும் பார்க்க