செய்திகள் :

All Party Meet: "விவசாயிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதே அரசியலை விட முக்கியம்!" - டி.கே. சிவக்குமார்

post image

காவிரி நீர் பகிர்வு விவகாரம் குறித்து விவாதிப்பதற்காகக் கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் தலைமையில் பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பேசிய கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார், "மாநிலத்தின் நலன் மற்றும் விவசாயிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதே அரசியலை விட மிகவும் முக்கியமானது.

Karnataka All Party Meet
Karnataka All Party Meet

மாநிலத்தின் நலன் சார்ந்த பிரச்னைகளில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றுபட்டு நிற்பதுதான் கர்நாடகாவின் பாரம்பரியம்.

எப்போதுமே குடிநீர் தேவைகளுக்கு முதலிடம் அளிக்கப்பட வேண்டும் என்பதே நமது அரசின் உறுதியான நிலைப்பாடு. இந்த முடிவில் நீங்கள் அனைவரும் என்னோடு முழுமையாக உடன்படுவீர்கள் என்று நம்புகிறேன்." எனக் கூறியிருக்கிறார்.

மேலும், காவிரி நீர் ஒழுங்குமுறைக்குழுவின் பரிந்துரைகள் மற்றும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகள் குறித்தும், மத்திய அமைச்சர்கள் சி.ஆர். பாட்டீல், பிரகலாத் ஜோஷி, வி. சோமண்ணா மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களுடன் நடத்திய ஆலோசனைகள் பற்றியும் கூட்டத்தில் டி.கே. சிவகுமார் விளக்கியிருக்கிறார்.

DK Shivakumar - Karnataka All Party Meet
DK Shivakumar - Karnataka All Party Meet

2.5 மணி நேரம் நடைபெற்ற இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முன்னாள் முதல்வர்கள் வீரப்ப மொய்லி, சித்தராமையா, பி.எஸ். எடியூரப்பா, எச்.டி. குமாரசாமி, டி.வி. சதானந்த கௌடா, பசவராஜ் பொம்மை மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆர். அசோகா உட்படப் பல முக்கியத் தலைவர்கள் பங்கேற்றனர்.

கபினி அணை நீர்மட்டம் உயர்வு; தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்த கர்நாடகா!

தமிழ்நாட்டிற்கு, கர்நாடகாவிலிருந்து காவிரி நீர் தற்போது திறந்துவிடப்பட்டிருக்கிறது. கேரள மாநிலம் வயநாடு மற்றும் கர்நாடகாவின் குடகு மாவட்ட காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாகக... மேலும் பார்க்க

"தீண்டாமைச் சுவரை உடனே அகற்றுங்கள்" - அமைச்சர் ராஜ்மோகன் காலில் விழுந்து கெஞ்சிய நபர்; என்ன நடந்தது?

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை மற்றும் மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் ஈரோடு மாவட்டம் வீரப்பன் சத்திரம் அருகில் உள்ள சிக்கய்ய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் 22-வது ஆண்டு புத்தக கண்காட்சி ... மேலும் பார்க்க

`நாளையிலிருந்து கோழி இறைச்சி கிடைக்காதா?' - கோழி வணிகர்களின் கூட்டமைப்பு சொல்வது என்ன?

தஞ்சையில் கோழி வணிகர்கள் கூட்டமைப்பின் மாநில செயற்குழு கூட்டம் இந்த மாதத் தொடக்கத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் ஒரு வார காலத்திற்கு கோழி இறைச்சி விற்பனையை முழுமையாக நிறுத்தி போராட... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: பள்ளி அருகில் வடாபாவ், சமோசா விற்க தடை; பிறந்தநாளில் சாக்லேட் வழங்கவும் கட்டுப்பாடு

மகாராஷ்டிராவில் புதிய உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை கமிஷனராக துகாராம் முண்டே பதவிக்கு வந்த பிறகு மாநிலம் முழுவதும் உணவகங்களில் அதிரடி ரெய்டு நடத்தி வருகிறார். மும்பையில் உள்ள கிரிக்கெட் கிளப்பில்... மேலும் பார்க்க

தமிழக அரசின் உத்தரவை மீறி கர்நாடகாவுக்கு கனிமங்கள் கடத்தல்; வாகனங்களை பறிமுதல் செய்த அதிகாரிகள்!

அண்டை மாநிலங்களுக்கு கனிமவளங்களை கொண்டு செல்ல தமிழ்நாடு அரசு மூன்று மாதங்களுக்கு தற்காலிகத் தடை விதித்துள்ளது கேரளா, கர்நாடக அரசுகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனிமம் கடத்திய வாகனங்கள் பறிமுதல... மேலும் பார்க்க

'ரயில் நிலையத்திற்குச் சென்று தட்கல் டிக்கெட் எடுப்பவரா நீங்க?' - இனி ஆகஸ்ட் 1 முதல் டோக்கன் நடைமுறை

வருகிற ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் ரயில் நிலையத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்குப் புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது. என்ன நடைமுறை? இனி பயணிகள் ரயில் நிலையத்திற்கு வந்த ரயில் டிக்கெட் புக் செய்ய நீண்ட நே... மேலும் பார்க்க