செய்திகள் :

தமிழக அரசின் உத்தரவை மீறி கர்நாடகாவுக்கு கனிமங்கள் கடத்தல்; வாகனங்களை பறிமுதல் செய்த அதிகாரிகள்!

post image

அண்டை மாநிலங்களுக்கு கனிமவளங்களை கொண்டு செல்ல தமிழ்நாடு அரசு மூன்று மாதங்களுக்கு தற்காலிகத் தடை விதித்துள்ளது கேரளா, கர்நாடக அரசுகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கனிமம் கடத்திய வாகனங்கள் பறிமுதல்

தமிழக அரசின் உத்தரவைத் தொடர்ந்து தமிழக எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது

மாநில எல்லையில் அமைந்துள்ள, கனிம வளம் அதிகம் வெட்டியெடுக்கப்படும் கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில், அண்டை மாநிலங்களுக்கு கனிமவளங்கள் கொண்டு செல்லப்படுவதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

காவல்துறை, வருவாய்த் துறை, கனிமவளத் துறை போக்குவரத்துத் துறையை கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழுக்கள் அனைத்து எல்லைச் சோதனைச் சாவடிகளிலும் தீவிர வாகனச் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றன.

கடந்த காலங்களில் அரசு அனுமதி பெற்று நூற்றுக்கணக்கான வாகனங்களில் கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து கர்நாடகாவுக்கு கனிமங்கள் கொண்டு செக்லப்பட்டு வந்தது இயல்பாக நடந்து வந்த நிலையில் தமிழக அரசின் அறிவிப்பு கனிமம் கொண்டு செல்வோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆய்வு செய்த கிருஷ்ணகிரி கலெக்டர்

இந்த நிலையில் கிருஷ்ணகிரி–ஓசூர் எல்லையில் அமைந்துள்ள ஜூஜுவாடி சோதனைச் சாவடியில் கனிமங்கள் ஏற்றிச் சென்ற இரண்டு வாகனங்கள், பாகலூர் அருகே கிருஷ்ணகிரி–கர்நாடகா எல்லைப் பகுதியில் அமைந்துள்ள சம்பங்கிரி எல்லைச் சோதனைச் சாவடியில் இரண்டு வாகனங்கள், தளி அருகே உள்ள கும்மலாபுரம் சோதனைச் சாவடியில் இரண்டு வாகனங்கள் என மொத்தம் ஆறு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டு, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டு, தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் என கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

'ரயில் நிலையத்திற்குச் சென்று தட்கல் டிக்கெட் எடுப்பவரா நீங்க?' - இனி ஆகஸ்ட் 1 முதல் டோக்கன் நடைமுறை

வருகிற ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் ரயில் நிலையத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்குப் புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது. என்ன நடைமுறை? இனி பயணிகள் ரயில் நிலையத்திற்கு வந்த ரயில் டிக்கெட் புக் செய்ய நீண்ட நே... மேலும் பார்க்க

`முதல்வர் விஜய் குறித்து பேசினால் நடவடிக்கை; அதே சீமான் பற்றி பேசினால் இல்லையா?' - நீதிமன்றம் கேள்வி

நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் தீரன் திருமுருகன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் ஒன்றை செய்திருந்தார். அதில், `நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், முன்னாள் முதல்வர் மு.... மேலும் பார்க்க

கரூர் கூட்ட நெரிசலில் இறந்தவர்கள் குடும்பங்களுக்கு வழங்கிய அரசு பணி ரத்து! - நீதிமன்றம் கூறியதென்ன?

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கிஉயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்க தடை விதிக்கக் கோரி நாம் தமிழர் கட்சியின் தீரன் திருமுருகன் மற்றும் வழக்கறிஞர் சீனி அகமது ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை அமர... மேலும் பார்க்க

தருமபுரி: கொரில்லா வேடமிட்டு ஹெல்மெட் விழிப்புணர்வு; போலீஸாரின் நூதனப் பிரசாரம் | Photo Album

தருமபுரியில் ஹெல்மெட் விழிப்புணர்வுதருமபுரியில் ஹெல்மெட் விழிப்புணர்வுதருமபுரியில் ஹெல்மெட் விழிப்புணர்வுதருமபுரியில் ஹெல்மெட் விழிப்புணர்வுதருமபுரியில் ஹெல்மெட் விழிப்புணர்வுதருமபுரியில் ஹெல்மெட் விழ... மேலும் பார்க்க

CJP Protest: கோரிக்கைகளை ஏற்பதாக அரசு உறுதி! - போராட்டத்தை வாபஸ் பெற்ற காக்ரோச் ஜனதா கட்சி

மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்று வந்த போராட்டத்தைக் காக்ரோச் ஜனதா கட்சி வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளது. Dharmend... மேலும் பார்க்க

"இந்த அரசை அகற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது!'' - தர்மேந்திர பிரதான் ராஜினாமா பற்றி ராகுல் காந்தி

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் மற்றும் தேசியத் தேர்வு முகமை தொடர்பான குளறுபடிகளைக் கண்டித்து, டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ... மேலும் பார்க்க