செய்திகள் :

'அம்மா உணவகத்தால் சென்னை மாநகராட்சிக்கு 1140 கோடி ரூபாய் இழப்பு!' - முதல்வருக்கு துணை மேயர் மெசேஜ்!

post image

சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் இன்று ரிப்பன் பில்டிங்கில் நடந்திருந்தது. இந்தக் கூட்டத்தில் பேசிய துணை மேயர் மகேஷ், அம்மா உணவகங்களால் ரூபாய் ஆயிரம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டிருப்பதாக கூறியிருக்கிறார்.

துணை மேயர் மகேஷ் குமார்
துணை மேயர் மகேஷ் குமார்

நேரமில்லா நேரத்தின் இறுதியில் பேசிய துணை மேயர் மகேஷ் குமார், `அம்மா உணவகங்களின் மீது இந்த அரசுதான் கவனம் செலுத்துவதைப் போலவும், இவர்களின் வருகைக்குப் பிறகுதான் வருவாய் உயர்ந்திருப்பதைப் போலவும் தோற்றத்தை உண்டாக்குகின்றனர்.

எங்களின் தலைவர் முதல்வராக இருந்தபோது சைதாப்பேட்டையிலுள்ள அம்மா உணவகத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்து அவற்றை புனரமைக்க உத்தரவிட்டார். அம்மா உணவகங்கள் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து சென்னை மாநகராட்சி 1445 கோடி ரூபாயை அதற்காக செலவளித்திருக்கிறது. ஆனால், அம்மா உணவகங்கள் மூலம் 305 கோடி ரூபாய் மட்டும்தான் வருவாயாக வந்திருக்கிறது.

மாநகராட்சிக்கு 1140 கோடி இழப்புதான் ஏற்பட்டிருக்கிறது. ஒவ்வோர் ஆண்டும் சென்னை மாநகராட்சிக்கு மட்டும் அம்மா உணவகத்தால் 90 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. எனவே, மாநகராட்சி ஆணையர் சமீரன் முதல்வரிடம் பேசி அம்மா உணவகத்துக்கென்று கூடுதல் நிதியை வாங்கித் தர வேண்டும்' என்றார்.

செந்தில் பாலாஜி: டாஸ்மாக் டெண்டர், பார் ஒப்பந்தங்களில் பல கோடி ரூபாய் முறைகேடு! - FIR விவரங்கள்!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, முன்னாள் டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் விசாகன் IAS உள்ளிட்ட 7 பேர் மீது டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் பல்வேறு முறைகேடுகள் தொடர்பாக ஊழல் தடுப்பு மற்றும... மேலும் பார்க்க

'கொசுவை திமுகக்காரனா லாரியில கடத்திட்டு வரான்?' - திமுக கவுன்சிலர் கலகல

சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் இன்று ரிப்பன் மாளிகையில் நடந்திருந்தது. இதில் பேசிய 181 வது வார்டு திமுக கவுன்சிலர் விஸ்வநாதன் 'எதற்கெடுத்தாலும் திமுக மீது பழி போடுகிறார்கள்!' என நகைச்சுவையாக பேச... மேலும் பார்க்க

`மேட்டூர் திறக்காததால் கடும் வறட்சி; ஏக்கருக்கு ரூ.25,000 இழப்பீடு வழங்க வேண்டும்!' - ஜி.கே.வாசன்

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் த.மா.க-வின் டெல்டா மண்டல செயல்வீரர்கள் கூட்டம், அதன் தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் நடைபெற்றது. இதில் என்.ஆர்.ரெங்கராஜன், சுரேஷ் மூப்பனார் உள்ளிட்ட பலர் கலந்துகொண... மேலும் பார்க்க

கோவை மெட்ரோ: `அனுமதி கிடைக்காததற்கு முறையான திட்ட அறிக்கை தயாரிக்காததே காரணம்!’ – வானதி சீனிவாசன்

பா.ஜ.க தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன், கோவை, மதுரை மெட்ரோ திட்டங்கள் நிராகரிக்கப்பட்டது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான திருத்தப்பட்ட விரிவ... மேலும் பார்க்க

மக்களவையில் நிறைவேறிய தேர்வுகள் முறைகேடு தடுப்பு திருத்த மசோதா 2026 - விவரம் என்ன?

நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த 'பொதுத் தேர்வுகள் (முறைகேடு தடுப்பு) திருத்த மசோதா 2026', மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறப்பட்டது. பொதுத் தேர்வுகளில் நடக்கும் வினாத்தாள் கசிவு... மேலும் பார்க்க

"ஆந்திராவில் பா.ம.க ; மருத்துவர் ஐயா வாழும் காலத்திலேயே பாமக ஆள வேண்டும்!" - அன்புமணி

மாமல்லப்புரத்தில் பாமகவின் பொதுக்குழு கூட்டம் இன்று (ஜூலை.29) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளராக வடிவேல் ராவணனும், பொருளாளராக திலகபாமாவும், பாமக தலைவராக அன்புமணி ராமதாஸும் தேர்வு... மேலும் பார்க்க