செய்திகள் :

`மேட்டூர் திறக்காததால் கடும் வறட்சி; ஏக்கருக்கு ரூ.25,000 இழப்பீடு வழங்க வேண்டும்!' - ஜி.கே.வாசன்

post image

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் த.மா.க-வின் டெல்டா மண்டல செயல்வீரர்கள் கூட்டம், அதன் தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் நடைபெற்றது. இதில் என்.ஆர்.ரெங்கராஜன், சுரேஷ் மூப்பனார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். பின்னர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ``மேகதாதுவில் அணை கட்டக் கூடாது என்பதில், தமிழகம், தமிழக அரசு மற்றும் அனைத்து கட்சிகளும் உறுதியாக இருக்கிறார்கள். மத்திய ஜல்சக்தி துறையின் இணை அமைச்சர் நாடாளுமன்றத்தில் மேகதாது குறித்துப் பேசியது விவசாயிகளுக்கும், தமிழகத்திற்கும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

த.மா.கா ஆலோசனைக் கூட்டத்தில் ஜி.கே.வாசன்

அவர், பொறுப்பற்ற முறையில் தமிழகத்தின் நியாயமான உரிமைகளை புறக்கணிக்கும் வகையில் தெரிவித்த கருத்து கண்டனத்துக்குரியது. நியாயமான நடுநிலையான செயலாக இல்லை. அந்தக் கருத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். மேகதாது அணை திட்டம் தொடர்பாக எந்த முடிவு எடுப்பதற்கு முன்பும், தமிழகத்தின் உரிமைகள் முழுமையாகப் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதைக கருத்தில் கொண்டு மத்திய அரசும், ஆணையங்களும் உணர்ந்து செயல்பட வேண்டும்.

காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவின் பெயரில், 15 நாள்களுக்கு, 3,500 கன அடி நீர் விதம் தண்ணீர் திறந்து விட வேண்டும் என கர்நாடக அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது. கர்நாடக அரசு தாமதமின்றி இந்த நீரை உடனடியாகத் திறந்து விட வேண்டும். தேர்தல் வாக்குறுதியின் படி, புதிய அரசு விவசாயிகளின் பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். டெல்டா பாசனத்திற்காக ஜூன் 12ம் தேதி, மேட்டூர் திறக்கப்படாததால் கடும் வறட்சி நிலவுகிறது. கால்நடைகளுக்கு குடிநீர் இல்லை. மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நெல் சாகுபடியும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, வறட்சி நிவாரணமாக ஏக்கருக்கு ரூ.25,000 வழங்க வேண்டும்.

ஜி.கே.வாசன்

உழவு மானியம் பெற விண்ணப்பிக்கும் விவசாயிகளிடம் இடுபொருள்கள் மற்றும் நுண்ணுாட்ட சத்து பொருள்களை வாங்க வேண்டும் என வற்புறுத்தக் கூடாது. புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிகளவில் மலர் சாகுபடி செய்யப்படுவதால் குளிர்சாதன கிடங்கு, நறுமண பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை அமைக்க வேண்டும். தென்னை வளர்ச்சி வாரியம் முழு திறனுடன் செயல்பட வேண்டும். அரசு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம், தேங்காய் எண்ணெய் கொள்முதல் செய்து ரேஷன் கடைகள் மூலம் விற்பனை செய்ய வேண்டும். கோயில் நிலங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். கண்காணிக்கப்பட வேண்டும். தவறுகள் நடந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

லாக்கப் மரண விவகாரங்களில், போலீஸார் முன்னெச்சரிக்கையுடன் கவனமாக இருக்க வேண்டும். ஆகஸ்ட் முதல் வாரத்தில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க வேண்டும். தமிழகத்தில் தமிழ் தாய் வாழ்த்துக்குத்தான் முதலிடம் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இருப்பினும் தேசிய பாடல் முக்கியம். ஒவ்வொரு மாநிலத்திலும் அவரவர் மொழிக்கு முதலிடம் கொடுக்க வேண்டும். நீட் தேர்வு தொடர்பாகப் பல நேரங்களில் நடக்கும் பிரச்னைகளைப் பார்க்கும்போது நீட் தேர்வு வேண்டும் என்று நினைப்பவர்கள்கூட, அது தேவையில்லை என்ற வகையில் மாணவர்கள் கொந்தளிப்போடு இருக்கிறார்கள் என்பதை அரசு உணர்ந்து செயல்பட வேண்டும்.

பட்டுக்கோட்டையில் ஜி.கே.வாசன்

மாணவர்களின் எண்ணங்களை பிரதிபலிக்க வேண்டியது அரசியல் கட்சியினுடைய கடமையாக இருக்கிறது. தேர்வு எழுதும் மாணவர்கள், பெற்றோர்கள் எல்லாம் நம்பிக்கை இழந்து சோர்ந்து போகின்றார்கள். பாராளுமன்றத் தேர்தலில் இருந்த கூட்டணியில் த.மா.க இனிமேல் இடம் பெற போவதில்லை. தனித்தன்மையோடு இயக்கத்தை நடத்த இருக்கிறோம். உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி அவசியம் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. எங்களின் இயக்கத்தை பலப்படுத்தக்கூடிய பணியிலே நாங்கள் இறங்கியுள்ளோம். உள்ளாட்சித் தேர்தல் நெருங்கும்போதோ அல்லது முன்கூட்டியோ தேர்தல் கூட்டணி குறித்து உறுதியாக அறிவிக்கப்படும்" என்றார்.

'லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் குற்றம்'- அரசு அலுவலகங்களில் `இது' கட்டாயம்; தலைமைச் செயலர் உத்தரவு!

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், துறைகள், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் அரசு நிறுவனங்களில் “லஞ்சம் கொடுப்பதும், வாங்குவதும் குற்றம்” என்ற வாசகத்துடன் கூடிய அறிவிப... மேலும் பார்க்க

செந்தில் பாலாஜி: டாஸ்மாக் டெண்டர், பார் ஒப்பந்தங்களில் பல கோடி ரூபாய் முறைகேடு! - FIR விவரங்கள்!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, முன்னாள் டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் விசாகன் IAS உள்ளிட்ட 7 பேர் மீது டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் பல்வேறு முறைகேடுகள் தொடர்பாக ஊழல் தடுப்பு மற்றும... மேலும் பார்க்க

'கொசுவை திமுகக்காரனா லாரியில கடத்திட்டு வரான்?' - திமுக கவுன்சிலர் கலகல

சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் இன்று ரிப்பன் மாளிகையில் நடந்திருந்தது. இதில் பேசிய 181 வது வார்டு திமுக கவுன்சிலர் விஸ்வநாதன் 'எதற்கெடுத்தாலும் திமுக மீது பழி போடுகிறார்கள்!' என நகைச்சுவையாக பேச... மேலும் பார்க்க

'அம்மா உணவகத்தால் சென்னை மாநகராட்சிக்கு 1140 கோடி ரூபாய் இழப்பு!' - முதல்வருக்கு துணை மேயர் மெசேஜ்!

சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் இன்று ரிப்பன் பில்டிங்கில் நடந்திருந்தது. இந்தக் கூட்டத்தில் பேசிய துணை மேயர் மகேஷ், அம்மா உணவகங்களால் ரூபாய் ஆயிரம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டிருப்பதாக கூறியி... மேலும் பார்க்க

கோவை மெட்ரோ: `அனுமதி கிடைக்காததற்கு முறையான திட்ட அறிக்கை தயாரிக்காததே காரணம்!’ – வானதி சீனிவாசன்

பா.ஜ.க தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன், கோவை, மதுரை மெட்ரோ திட்டங்கள் நிராகரிக்கப்பட்டது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான திருத்தப்பட்ட விரிவ... மேலும் பார்க்க

மக்களவையில் நிறைவேறிய தேர்வுகள் முறைகேடு தடுப்பு திருத்த மசோதா 2026 - விவரம் என்ன?

நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த 'பொதுத் தேர்வுகள் (முறைகேடு தடுப்பு) திருத்த மசோதா 2026', மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறப்பட்டது. பொதுத் தேர்வுகளில் நடக்கும் வினாத்தாள் கசிவு... மேலும் பார்க்க