செய்திகள் :

ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் போர்: தற்காப்பு எனும் பெயரில் ஐரோப்பிய நாடுகளும் இணைகிறதா?

post image

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் தொடுத்துள்ள போர் மூன்றாவது நாளாக இன்று தொடர்ந்து வருகிறது.

ஈரானில் தொடங்கிய போர் அன்றே மத்திய கிழக்கு நாடுகளுக்கும் பரவி... அங்கேயும் இன்னமும் தொடர்ந்து வருகிறது.

இந்த நிலையில், ஐரோப்ப நாடுகளும் இந்தப் போரில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளன. அந்த நாடுகள் - பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி.

இந்த மூன்று நாடுகளும் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது...

"ஆரம்பத்தில் அமெரிக்கா, இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கையில் ஈடுபடாத நாடுகளிலும் ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி வருவது அதிர்ச்சி அளிக்கிறது.

ஈரான் மீதான போர்
ஈரான் மீதான போர்

ஈரானின் இந்தப் பொறுப்பற்ற தாக்குதல்கள் எங்களது நெருங்கிய கூட்டாளிகளை குறி வைப்பதோடு, பிராந்தியத்தில் இருக்கும் எங்களது படைவீரர்களையும், மக்களையும் பயமுறுத்துகின்றன.

இந்தத் தாக்குதலை உடனடியாக நிறுத்தும்படி ஈரானைக் கேட்டுக்கொள்கிறோம்.

எங்களது நலம் மற்றும் எங்களது கூட்டாளிகளின் நலனைக் காக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளை எடுப்போம்.

இந்த விஷயத்தில் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளுடன் இணைந்து எங்களின் தற்காப்புக்காக பணியாற்ற ஒப்புக்கொண்டுள்ளோம்". எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸின் கப்பற்படை தளம் ஒன்று அமீரகத்தில் ஈரானிய தாக்குதலில் சேதமடைந்தது எனத் தகவல் வெளியானது. மேலும் பிரிட்டன் இரண்டு ஏவுகணைகளை இடைமறித்ததாகவும் சொல்லப்படுகிரது. இதனிடையே பிரிட்டன் பிரதமர் பிரிட்டிஷ் தளங்களை அமெரிக்கா "தற்காப்பு" நோக்கில் பயன்படுத்த அனுமதி வழங்கியுள்ளார். எனினும் இது தற்காப்பு மட்டுமே தான் எனவும், தாக்கி அழிக்கும் போரில் பிரிட்டன் ஈடுபடவில்லை, இனியும் ஈடுபடாது எனத் தெரிவித்தார்,

திருப்பரங்குன்றம் விவகாரம்: `நிபந்தனையற்ற மன்னிப்பு கோரத் தயார்' - மாவட்ட ஆட்சியர் அபிடெவிட் மனு

திருப்பரங்குன்றம் தீப விவகாரம் தொடர்பான வழக்கு நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் அமர்வில் விசாரணை வந்தது.மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார் நீதிமன்றத்தில் ஆஜரானார். இதற்கு முன்னதாக மதுரை மாவட்ட ஆட்சியர் உயர... மேலும் பார்க்க

ஈரான் : காமேனி மரணம் - மௌனம் காக்கும் இந்தியா | காரணம் என்ன?

ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா நாடுகள் போர் தொடுத்து வருகிறது. ஈரானின் அணு சக்தி மையங்கள், அணு சக்தி உள்கட்டமைப்புகள், ராணுவ தளங்கள் என பல்வேறு பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.அமெரி... மேலும் பார்க்க

படுவைரலான சவால்; கே.சி.வீரமணியால் பின்வாங்கும் தேவராஜி; பிடிகொடுக்காத எ.வ.வேலு- ஜோலார்பேட்டை சடுகுடு

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை தொகுதியில் தி.மு.க மாவட்டச் செயலாளரான க.தேவராஜி, சிட்டிங் எம்.எல்.ஏ-வாக இருக்கிறார். இவர் மீண்டும் ஜோலார்பேட்டை தொகுதியில் போட்டியிட விரும்பாமல், தொகுதி மாறும் திட... மேலும் பார்க்க

Modi: மரத்தில் மோடி உருவப்பொம்மை; மின்கம்பத்தில் ராகுல் உருவப்பொம்மை; குமரியில் என்ன நடக்கிறது?

பிரதமர் மோடி நேற்று மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். மேலும், திருப்பரங்குன்றம் கோயிலில் தரிசனம் செய்தார்.இந்த நிலையில் பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாகர்கோவில் மாநகர் மா... மேலும் பார்க்க

DMK : 'பௌர்ணமி தினத்தில் அறிவாலயத்தில் கூடிய அமைச்சர்கள்; போக்குவரத்து நெருக்கடியில் அண்ணா சாலை!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனு விநியோகம் ஜரூராக நடந்துகொண்டிருக்கிறது. பெளர்ணமி தினமான இன்று நல்ல நாள் என்பதால் சிட்டிங் அமைச்சர்கள் பலரும் அறிவாலயத்தை மொய்க்க மவுண்ட் ரோடு முழுவது போக்குவரத்த... மேலும் பார்க்க

"விவசாயிகள் விளைவித்துள்ள பயிர் மீது திமுக அரசுக்கு அக்கறை இல்லை.!" - எம்.ஆர்.விஜயபாஸ்கர்

கரூர் மாவட்டம், புகழூர் வாய்க்காலில் அடைக்கப்பட்டுள்ள பகுதியை விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகளுடன்இணைந்து, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் -சேலம் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ள புகழ... மேலும் பார்க்க