செய்திகள் :

உத்தரப் பிரதேசம்: பிறந்தநாள் பார்ட்டியில் கேக்கை முகத்தில் தடவியதால் துப்பாக்கிச்சூடு; 3 பேர் பலி

post image

உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹர் என்ற இடத்தில் அங்குள்ள ஜிம் ஒன்றில் பிறந்தநாள் பார்ட்டி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இந்தப் பார்ட்டிக்கு நண்பர்கள், உறவினர்கள் மற்றும் ஜிம்மிற்கு அடிக்கடி வரக்கூடிய முக்கியமானவர்கள் அழைக்கப்பட்டு இருந்தனர். இந்தப் பிறந்தநாள் பார்ட்டி அதிகாலை வரை நடந்தது. நள்ளிரவு 12 மணிக்கு கேக் வெட்டினர்.

அதனைத் தொடர்ந்து கேக்கை எடுத்து ஒருவர் முகத்தில் ஒருவர் தடவியதாகத் தெரிகிறது. விழாவில் ஜிதேந்திர குமார் என்பவரும் கலந்து கொண்டார். அவர் தனது முகத்தில் கேக்கைத் தடவ வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். ஆனால் அவரது எதிர்ப்பையும் மீறி அமர்தீப் மற்றும் மணீஷ் ஆகியோர் கேக்கை முகத்தில் தடவியதாகத் தெரிகிறது. இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

துப்பாக்கிச்சூடு
துப்பாக்கிச்சூடு

இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் ஜிதேந்திர குமார் அந்த இடத்தில் இருந்து சென்றுவிட்டு சிறிது நேரத்தில் துப்பாக்கியுடன் வந்தார். அவர் வந்தவுடன் அமர்தீப் மற்றும் மணீஷ் ஆகியோரை மிகவும் அருகில் வைத்து துப்பாக்கியால் சுட்டார்.

இதில் இரண்டு பேரும் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். சம்பவ இடத்தில் நின்ற ஆகாஷ் என்பவர் அங்கிருந்து தப்பித்து ஓடினார். ஆனால் அவரை விரட்டிச்சென்று துப்பாக்கியால் சுட்டார். துப்பாக்கியால் சுட்டுவிட்டு ஜிம்மில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் எடுத்துக்கொண்டு ஜிதேந்திர குமார் சம்பவ இடத்தில் இருந்து தப்பித்து ஓடிவிட்டார்.

காயம் அடைந்த மூன்று பேரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் அவர்கள் அதற்குள் இறந்துவிட்டனர்.

இது குறித்து போலீஸ் அதிகாரி ஜெயின் கூறுகையில், ''சம்பவம் குறித்து 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜிம் உரிமையாளர் ருபேஷ் குமார் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்ற பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகிறோம்'' என்றார்.

மணீஷ் மற்றும் அமர்தீப் ஆகிய இரண்டு பேரும் விவசாயிகள் ஆவர். இவர்கள் இரண்டு பேரும் உள்ளூர் கவுன்சிலர் ஒருவரின் உறவினர்கள் ஆவர்.

'பஸ் எல்.இ.டியில் என்ன எழுதியிருக்கிறது?' - MTC பஸ் தகராறில் முதியவரை கொன்ற போதையில் இருந்த இளைஞன்

'பஸ் எல்.இ.டியில் என்ன எழுதியிருக்கிறது' என்று கேட்டு தகராறு ஆகி, சென்னையில் ஒரு கொலை நடந்துள்ளது.சென்னை தாம்பரம் பஸ் ஸ்டாண்டில் 25 வயதான இளைஞர் அமர்நாத் 70-G மாநகர பஸ்ஸில் ஏறியுள்ளார். அதே பஸ்ஸில் 74... மேலும் பார்க்க

மும்பையில் நள்ளிரவு டி.வி பார்ப்பதில் தகராறு: மனைவி, மகள், பேத்தியை கத்தியால் குத்திய முதியவர் கைது

மும்பை தானேயில் உள்ள ரபோடி கிராந்தி நகரில் வசிப்பவர் முகமது தாரிக் கான்(64). இவர் தனது மனைவி மற்றும் மகள், பேத்தியுடன் வசித்து வந்தார். சம்பத்தன்று முகமது தாரிக் கான் பேத்திக்கு பிறந்தநாள் ஆகும். இதனா... மேலும் பார்க்க

தேனி: பட்டாசு ஆலையில் வெடி விபத்து; இரு இளைஞர்கள் உயிரிழப்பு; தொடரும் விபத்துகள்

தேனி மாவட்டம் கம்பம் அடுத்துள்ள காட்டுப்பள்ளி வாசல் தெருவில் திருப்பதி என்பவருக்குச் சொந்தமான லட்சுமி பட்டாசு தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் அய்யப்பன், நாகர்ஜுன், சூர்யா, தினேஷ் (எ) தீனா... மேலும் பார்க்க

திருவள்ளூர்: ஏசி வாங்கிக் கொடுக்காததால் மனைவி எடுத்த விபரீத முடிவு? கணவரிடம் விசாரணை; என்ன நடந்தது?

திருவள்ளூரை அடுத்த பூண்டி ஜெயராம் தெருவைச் சேர்ந்தவர் ஆகாஷ் (26). திருவள்ளூர் மாவட்டம், புல்லரம்பாக்கத்தைச் சேர்ந்தவர் மோனிகா (25). இவர்கள் இருவரும் பூண்டியில் உள்ள ஒரு பள்ளியில் படித்தனர். அப்போது இர... மேலும் பார்க்க

5 சிறுமிகளுக்குப் பாலியல் வன்கொடுமை; குற்றவாளிக்கு 5 மரண தண்டனை; சிவகங்கையை அதிர வைத்த போக்சோ வழக்கு

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த விறகு வெட்டும் தொழிலாளர் சந்திரன் (49). இவருக்குத் திருமணமாகி ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். ஒரு சாதாரண குடும்பஸ்தனாக வலம் வந்த இ... மேலும் பார்க்க

தஞ்சாவூர்: மகளைக் கொலை செய்த இளைஞர்; 5 மாதங்கள் காத்திருந்து பழிக்குப் பழி வாங்கிய தந்தை

தஞ்சாவூர் அருகே உள்ள பிராந்தை பகுதியைச் சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி(53). தி.மு.க-வைச் சேர்ந்த இவர் ஆலங்குடி முன்னாள் பஞ்சாயத்து தலைவர். இவரது மகள் காவியா(26). இவர், ஆலங்குடி அரசு ஆதிதிராவிடர் தொடக்கப்ப... மேலும் பார்க்க