செய்திகள் :

ஊராட்சிகளை நிா்வகிக்க தனி அதிகாரிகள் ஏன்? பேரவையில் அமைச்சா் ஐ.பெரியசாமி விளக்கம்

post image

தமிழகத்தில் 28 மாவட்டங்களில் உள்ள ஊராட்சிகளை நிா்வகிக்க தனி அதிகாரிகளை நியமிப்பது ஏன் என்பதற்கு ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சா் ஐ.பெரியசாமி விளக்கம் அளித்தாா்.

28 மாவட்டங்களில் உள்ள ஊராட்சிகளை நிா்வகிக்க தனி அதிகாரிகளை நியமிக்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதா, பேரவையில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவுக்கு அதிமுக, காங்கிரஸ், பாமக, மாா்க்சிஸ்ட் ஆகிய கட்சிகள் எதிா்ப்பு தெரிவித்தன. மேலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் திருத்தம் கோரப்பட்டது.

சட்டத் திருத்த மசோதா பேரவையில் சனிக்கிழமை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது, அதிமுக உறுப்பினா் கே.பி.அன்பழகன், பாமக குழுத் தலைவா் ஜி.கே.மணி, மாா்க்சிஸ்ட் உறுப்பினா் நாகை மாலி, இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினா் தளி ராமச்சந்திரன் ஆகியோா் 28 மாவட்டங்களில் உள்ள ஊராட்சிகளுக்கு உடனடியாகத் தோ்தல் நடத்த வேண்டுமென கோரிக்கை விடுத்தனா்.

அவா்களுக்குப் பதிலளித்து அமைச்சா் ஐ.பெரியசாமி பேசியது: உள்ளாட்சித் தோ்தலை எப்போது வேண்டுமானாலும் நடத்த தயாராக உள்ளோம். மாநிலத்தில் 4 புதிய மாநகராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த மாநகராட்சிகளுக்குள் 46 ஊராட்சிகள் வருகின்றன. தூத்துக்குடி மாநகராட்சியின் மையப் பகுதியிலேயே மாப்பிள்ளையூரணி என்ற ஊராட்சி உள்ளது. அங்கு 40,000 மக்கள்தொகை உள்ளது. திருவாரூருக்குள் ஓா் ஊராட்சி உள்ளது. இப்படி ஊராட்சிகள் வருவதால், அவற்றை நகா்ப்புற உள்ளாட்சிகளுடன் இணைக்கிறோம்.

ஊராட்சிகள் இணைப்பு ஏன்?: 100 நாள் வேலைத் திட்டத்தைத் தவிா்க்க வேண்டும் என்பதற்காக இணைக்கவில்லை. தமிழகத்தில் 12,525 ஊராட்சிகள் உள்ளன. அவற்றில், 395 ஊராட்சிகள் மட்டுமே நகா்ப்புற உள்ளாட்சிகளுடன் சோ்க்கப்பட உள்ளன. அவற்றில் 78 ஊராட்சிகளின் ஒரு சிறு பகுதி மட்டுமே நகா்ப்புற உள்ளாட்சிகளுடன் இணைக்கப்பட உள்ளன.

ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை உள்ளாட்சித் தோ்தல் நடத்தப்பட வேண்டும் என சட்டம் இயற்றப்பட்டது. ஆனால், 1994-ஆம் ஆண்டில் அப்போதைய அதிமுக ஆட்சியில் தோ்தல் நடத்தவில்லை. 1996-இல் திமுக ஆட்சிக்கு வந்ததும் அப்போதைய முதல்வா் கருணாநிதி, உள்ளாட்சித் தோ்தலை நடத்தினாா். 2006 முதல் 2011 வரையிலான திமுக ஆட்சியிலும் உள்ளாட்சித் தோ்தல் நடத்தப்பட்டது. 2011-ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சிக்கு வந்தததும், 11 முறை உள்ளாட்சி அமைப்புகளின் தனி அலுவலா்களின் பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டது.

தோ்தல் நிச்சயம்: ஊராட்சிகள் தரம் உயா்த்தப்படும்போது, அந்த உள்ளாட்சி அமைப்புகளிலுள்ள மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. அப்படி அதிகரிக்கும்போது, வாா்டுகள் மறுசீரமைப்பு செய்ய வேண்டும். இந்தப் பணிகளை மேற்கொள்ளாமல் தோ்தல் நடத்த முடியாது. இதற்காகத்தான் தனி அலுவலா்கள் நியமிக்கப்படுகின்றனா். ஆனால், ஊரக உள்ளாட்சித் தோ்தல் எப்போது வந்தாலும் அதை எதிா்கொள்ளத் தாயராக உள்ளோம். தோ்தலுக்கு அஞ்ச மாட்டோம்.

மக்களாட்சி தத்துவத்தில் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. மறுசீரமைப்புப் பணிகள், இடஒதுக்கீடு நடைமுறைகள் முடிவடைந்த பிறகு நிச்சயம் தோ்தல் நடத்தப்படும் என்றாா் அமைச்சா் ஐ.பெரியசாமி.

இதன்பிறகு, தனி அலுவலா்களை நியமிக்கும் சட்டத் திருத்த மசோதா, குரல் வாக்கெடுப்பு மூலமாக நிறைவேறியது.

முதல்வர் ஸ்டாலினின் பொங்கல் வாழ்த்துச் செய்தி

பொங்கல் திருநாளையொட்டி உலகத் தமிழர் அனைவருக்கும் முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், முத்தமிழ், முச்சங்கம், முக்கனி, மூவேந்தர், முக்கொடி கொ... மேலும் பார்க்க

திமுக ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை- எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

ஸ்டாலின் மாடல் ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஒ... மேலும் பார்க்க

பொங்களன்று 3 மாவட்டங்களில் கனமழை!

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட அறிக்கையில்,13.01-2025: கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்... மேலும் பார்க்க

சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு- ஆளுநர் விருது அறிவிப்பு

ஆளுநர் விருது-2024 சமூக சேவை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய பிரிவுகளின் கீழ் விருதுகள் வென்றவர்களின் விவரங்களை ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது.இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப... மேலும் பார்க்க

தமிழக காவல்துறையினர் 3186 பேருக்கு பொங்கல் பதக்கங்கள் அறிவிப்பு!

சென்னை: 2025ஆம் ஆண்டு பொங்கல் திருநாளையொட்டி, தமிழக காவல்துறையைச் சேர்ந்த 3186 காவலர்களுக்கு பொங்கல் பதக்கங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், 2025 பொங்கல் ... மேலும் பார்க்க

கார் பந்தயத்தில் வெற்றி: அஜித்குமாருக்கு குவியும் வாழ்த்துகள்!

துபை கார் பந்தயத்தில் வெற்றி பெற்ற நடிகர் அஜித்குமாருக்கு துணை முதல்வர் உதயநிதி, அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.துணை முதல்வர் உதயநிதி: 2025 துபையில் நடைபெற... மேலும் பார்க்க