செய்திகள் :

கரூர்: விவசாயி மீது நாட்டு துப்பாக்கியால் துப்பாக்கிச் சூடு; 'நிலப் பிரச்னையா?' - போலீஸ் விசாரணை

post image

கரூர் அருகே நாட்டு துப்பாக்கியால் விவசாயி சுடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா சேவாப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் மகன் கருணகிரி (48). விவசாயத் தொழிலாளியான இவர் நேற்று (மே 22) இரவு 9.45 மணியளவில் வளையப்பட்டியில் காட்டுப் பகுதியில் தனது களத்து வீட்டில் உள்ள அவரது சித்தப்பாவுக்கு உணவு கொடுக்க இரு சக்கர மோட்டார் வாகனத்தில் சென்றுள்ளார்.

துப்பாக்கி சூடு
துப்பாக்கி சூடு

அப்போது, களத்து வீட்டின் அருகே பள்ளத்தில் சென்றபோது, பின்னால் மர்ம நபர்கள் நாட்டு துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

இதில் முதுகில் இடுப்பில் துப்பாக்கிச் சூட்டால் பலத்த காயத்துடன் ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள தனது அண்ணன் வீட்டிற்குச் சென்று, வலி தாங்க முடியாமல் தகவல் தெரிவித்துள்ளார்.

பின்னர், உடனடியாக அவரை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று இரவு சிகிச்சைக்குச் சேர்த்துள்ளனர்.

அவரது உடம்பில் 10 பால்ரச குண்டுகளால் சுடப்பட்டது தெரியவந்தது. மேலும் தொடர் சிகிச்சை விவசாயிக்கு அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் குறித்து, பாலவிடுதி போலீசார் இன்று மே 23 ஆம் தேதி காலை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

முதல் கட்ட விசாரணையில், நிலப் பிரச்னையில் முன் விரோதம் காரணமாக, சந்தேகத்தின் பேரில் அவரின் உறவினர்கள் 4 பேரைப் பிடித்து, பாலவிடுதி காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூர் அருகே நாட்டு துப்பாக்கியால் விவசாயி சுடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை சிறுமி கொலை: சாக்லேட் தந்து சிறுமியை அழைத்து சென்று கொலை; விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்

கோவை மாவட்டம் சூலூர் பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி, நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில் அப்பகுதியில் உள்ள ஒரு கடைக்குச் சென்ற நிலையில், வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை.இதனால் சந்தேகம் அடைந்த சிறு... மேலும் பார்க்க

ஹரியானா: மைனர் பெண்ணுடன் காதல்; பேட்மிண்டன் வீரரைச் சித்ரவதை செய்து கொன்ற பெண்ணின் குடும்பம்?

ஹரியானா மாநிலம் பிவாடி அருகில் உள்ள சைத்பூர் என்ற இடத்தைச் சேர்ந்தவர் மோனு. பேட்மிண்டன் வீரரான மோனு ஹரியானாவில் மாநில அளவிலான மற்றும் மாவட்ட அளவிலான பேட்மிண்டன் போட்டிகளில் கலந்து கொண்டு ஏராளமான பரிசு... மேலும் பார்க்க

கோவை 10 வயது சிறுமி கொலை வழக்கு: 2 பேர் கைது; ஒருவருக்கு கை, கால் முறிவு!

கோவை மாவட்டம் சூலூர் பகுதியை சேர்ந்த ஒரு 10 வயது சிறுமி, நடப்புக் கல்வியாண்டில் 5ம் வகுப்புக்கு செல்ல இருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை அப்பகுதியில் உள்ள ஒரு கடைக்கு சென்ற நிலையில், வெகுநேர... மேலும் பார்க்க

கோவை: காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்பு – பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாரா? - போலீஸ் விசாரணை!

கோவை மாவட்டம் சூலூர் பகுதியை சேர்ந்த ஒரு 10 வயது சிறுமி, நடப்புக் கல்வியாண்டில் 5ம் வகுப்புக்கு செல்ல இருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை சிறுமி தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்ததாக ... மேலும் பார்க்க

காவல் நிலைய பெண் ஊழியருக்கு நேர்ந்த பாலியல் கொடுமை; விஷம் குடித்த குற்றவாளி - கிருஷ்ணகிரி பரபரப்பு!

காவல் நிலையத்தில் கம்ப்யூட்டர் உதவியாளராக பணியாற்றும் பெண், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சம்பந்தப்பட்ட குற்றவாளி காவல் நிலையம் முன்பு விஷம் குடித்து ... மேலும் பார்க்க

`30 சவரன் நகை... 12 வருஷமா போலீஸ் ஸ்டேஷனுக்கு அலைஞ்சிட்டே இருக்கேன்!' - முதுகுளத்தூர் இளையராஜா

முப்பது சவரன் நகையைப் பறிகொடுத்து 12 ஆண்டுகளாகியும் மீட்க முடியாமல் அலைந்து கொண்டிருக்கிறார், சென்னையில் வசிக்கும் முதுகுளத்தூரைச் சேர்ந்த இளையராஜா.'ஜெயலலிதா முதலமைச்சரா இருந்த 2014ம் வருஷம் நகை தொலைஞ... மேலும் பார்க்க