செய்திகள் :

காவல் நிலைய பெண் ஊழியருக்கு நேர்ந்த பாலியல் கொடுமை; விஷம் குடித்த குற்றவாளி - கிருஷ்ணகிரி பரபரப்பு!

post image

காவல் நிலையத்தில் கம்ப்யூட்டர் உதவியாளராக பணியாற்றும் பெண், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சம்பந்தப்பட்ட குற்றவாளி காவல் நிலையம் முன்பு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை

காவல்துறையில் பணி செய்த கணவர் சில ஆண்டுகளுக்கு முன் விபத்தில் மரணமடைந்ததால், கருணை அடிப்படையில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அவர் மனைவிக்கு கம்ப்யூட்டர் உதவியாளராக பணி கிடைத்தது.

ஓசூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றிய அப்பெண் அருகிலுள்ள கிராமத்தில் பார்வைத்திறன் இல்லாத தாயுடன் தன் குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

கடந்த 16 ஆம் தேதி பணி முடிந்து ஓசூரிலிருந்து பேருந்தில் வந்து தன் கிராமத்தில் இறஙகியவர், இரண்டு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக டிராவல் வேனில் வந்த மூர்த்தி என்பவர், 'வீட்டில் இறக்கி விடுகிறேன், வேனில் ஏறவும்' என்று அழைத்ததால், ஊர்காரர் என்ற நம்பிக்கையில் அப்பெண் ஏறியுள்ளார்.

ஆனால், டிரைவர் மூர்த்தி வாகனத்தை ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் நிறுத்தி அப்பெண்ணை கடுமையாக தாக்கி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். ரத்தப்போக்குடன் வாகனத்திலிருந்து குதித்து தப்பித்த பெண், வீட்டிற்கு வந்து தன் தாயாரிடம் நடந்ததைச் சொல்லி அழுதுள்ளார். அதைத் தொடர்ந்து பாகலூர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

பாலியல் வன்கொடுமை

வழக்கு பதிவு செய்த பாகலூர் காவல்துறையினர், தலைமறைவான மூர்த்தியை தேடி வந்த நிலையில், காவல் நிலையம் வந்த மூர்த்தி பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். உடனே காவல்துறையினர் அவரை மீட்டு ஓசூர் மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது தீவிர சிகிச்சையில் உள்ளார் மூர்த்தி.

`30 சவரன் நகை... 12 வருஷமா போலீஸ் ஸ்டேஷனுக்கு அலைஞ்சிட்டே இருக்கேன்!' - முதுகுளத்தூர் இளையராஜா

முப்பது சவரன் நகையைப் பறிகொடுத்து 12 ஆண்டுகளாகியும் மீட்க முடியாமல் அலைந்து கொண்டிருக்கிறார், சென்னையில் வசிக்கும் முதுகுளத்தூரைச் சேர்ந்த இளையராஜா.'ஜெயலலிதா முதலமைச்சரா இருந்த 2014ம் வருஷம் நகை தொலைஞ... மேலும் பார்க்க

நீட் வினாத்தாள் கசிவில் கைதான ஆசிரியர்! - ரூ.1500 கோடி கோச்சிங் சாம்ராஜ்யத்தை உருவாக்கியது எப்படி?

மருத்துவ படிப்பு நுழைவுத்தேர்வுக்கான வினாத்தாள் இந்த ஆண்டு தேர்வுக்கு முன்பே கசிந்தது. இதையடுத்து இந்த மாதம் 3ம் தேதி நடத்தப்பட்ட நீட் தேர்வை மத்திய அரசு ரத்து செய்து இருக்கிறது. அதோடு அடுத்த மாதம் மீ... மேலும் பார்க்க

டெல்லி: `உடலில் ரத்தத்தை தெளிப்பார்கள்'- பெண்ணை பாலியல் கொடுமை செய்து மதமாற்ற செய்ய முயன்ற கும்பல்

டெல்லியில் பாட்லா என்ற இடத்தை சேர்ந்த 23 வயது பட்டியலினத்தை சேர்ந்த பெண்ணிற்கு சமூக வலைதளம் மூலம் சாஹில் என்ற நபரின் அறிமுகம் கிடைத்தது. அந்த நபர், தான் ஒரு பணக்கார இந்து குடும்பத்தை சேர்ந்தவர் என்றும... மேலும் பார்க்க

ஸ்பெஷல் டிரைவ் ஆபரேஷன்; ஒரே இரவில் கைதான 133 ரௌடிகள் - எஸ்கேப்பான ஏ பிளஸ்... தொடரும் நடவடிக்கை!

சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் அபின் தினேஷ் மோதக் உத்தரவின் பேரில், 12 காவல் மாவட்ட போலீஸார், 4 மண்டல மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸார் நேற்று ஒரே நாளில் அதிரடி ரெய்டு நடத்தினர். இந்த ரெய்டில் சரித்... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை: அடிக்கடி சண்டை; மனைவி தலையில் கல்லைப் போட்டு கொன்ற கணவன்!

ராணிப்பேட்டை காரை புதுத்தெருவைச் சேர்ந்தவர் ரவி (45). பெயின்ட்டர் தொழிலாளி. இவரின் மனைவி தேவி (35). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில், தன்னுடைய மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து வந... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை: 10-ம் வகுப்புத் தேர்வில் தோல்வி; விபரீத முடிவெடுத்த மாணவி!

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அருகேயுள்ள வி.சி.மோட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் ரேணுகோபால். இவரின் மனைவி சசிகலா. இவர்கள் காய்கறி சில்லறை வியாபாரம் செய்து, அதில் கிடைக்கும் குறைந்த வருவாயில் குடும்ப... மேலும் பார்க்க