செய்திகள் :

ஸ்பெஷல் டிரைவ் ஆபரேஷன்; ஒரே இரவில் கைதான 133 ரௌடிகள் - எஸ்கேப்பான ஏ பிளஸ்... தொடரும் நடவடிக்கை!

post image

சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் அபின் தினேஷ் மோதக் உத்தரவின் பேரில், 12 காவல் மாவட்ட போலீஸார், 4 மண்டல மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸார் நேற்று ஒரே நாளில் அதிரடி ரெய்டு நடத்தினர். இந்த ரெய்டில் சரித்திர பதிவேடு ரௌடிகளான 133 பேர் சிக்கினர். அதைத் தொடர்ந்து கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களுக்கு எதிராகச் சிறப்பு ரெய்டும் நடத்தப்பட்டது. இந்த ரெய்டில் 101 நபர்கள் கைதுசெய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 21.4 கிலோ கஞ்சா மற்றும் 1,070 உடல்வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

அபின் தினேஷ் மோதக்

இது குறித்து சென்னை போலீஸார் கூறுகையில், ``ஸ்பெஷல் டிரைவ் ஆபரேஷன் என்ற பெயரில் நேற்றிரவு இந்த ரெய்டு நடத்தப்பட்டது. இதில் தி.நகர் காவல் மாவட்டத்தில் 18 ரௌடிகளும் அடையாறு காவல் மாவட்டத்தில் 16 ரௌடிகளும் புளியந்தோப்பில் 20 ரௌடிகளும் அண்ணாநகரில் 9 ரௌடிகளும் மயிலாப்பூர் காவல் மாவட்டத்தில் 12 ரௌடிகளும் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் குற்ற வழக்குகளில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவர்கள். நாங்கள் நடத்திய ரெய்டில் சிலர் தப்பி விட்டனர். அவர்களைக் கைதுசெய்யவும் நடவடிக்கை எடுத்துவருகிறோம். சென்னையைக் குற்றமில்லாத நகரமாக மாற்ற இந்த நடவடிக்கை தொடரும்'' என்றனர்.

ஒரே நாளில் 133 ரௌடிகளைக் கைதுசெய்திருப்பதாக சென்னை போலீஸார் தெரிவித்திருந்தாலும், முக்கிய ஏ பிளஸ் ரௌடிகளில் சிலர் தலைமறைவாகவே இருந்து வருகிறார்கள். அவர்களைப் பிடிக்க போலீஸார் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ராணிப்பேட்டை: அடிக்கடி சண்டை; மனைவி தலையில் கல்லைப் போட்டு கொன்ற கணவன்!

ராணிப்பேட்டை காரை புதுத்தெருவைச் சேர்ந்தவர் ரவி (45). பெயின்ட்டர் தொழிலாளி. இவரின் மனைவி தேவி (35). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில், தன்னுடைய மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து வந... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை: 10-ம் வகுப்புத் தேர்வில் தோல்வி; விபரீத முடிவெடுத்த மாணவி!

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அருகேயுள்ள வி.சி.மோட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் ரேணுகோபால். இவரின் மனைவி சசிகலா. இவர்கள் காய்கறி சில்லறை வியாபாரம் செய்து, அதில் கிடைக்கும் குறைந்த வருவாயில் குடும்ப... மேலும் பார்க்க

நெல்லை: காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு; போலீஸாரை அதிரவைத்த சிறுவர்கள்! - என்ன நடந்தது?

ஏ.ஐ தொழில்நுட்பத்திடம் பெட்ரோல் குண்டு செய்வது எப்படி என்பதை சிறுவர்கள் தெரிந்து கொண்டிருக்கிறார்கள். பின்னர், பழிவாங்கும் நடவடிக்கையாக காவல் நிலையத்தின் மீது பெட்ரோல் குண்டை வீசி எறிந்துவிட்டு தப்பிச... மேலும் பார்க்க

பஞ்சாப்: திருமணத்திற்கு மறுத்த பாடகி; கால்வாயில் சடலமாக மீட்பு; வாலிபர் மீதான வழக்கின் பின்னணி என்ன?

பஞ்சாப்பில் ஆயுத கலாசாரத்திற்குக் குறைவில்லாமல் இருக்கிறது. அடிக்கடி துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யும் சம்பவங்கள் சர்வசாதாரணமாக நடக்கின்றன. தற்போது பஞ்சாப்பில் பெண் பாடகி ஒருவர் துப்பாக்கி முனையில்... மேலும் பார்க்க

திண்டுக்கல்: தனியார் மருந்தகத்தில் கொத்து கொத்தாக கைப்பற்றபட்ட போதை தரும் மாத்திரைகள்; வாலிபர் கைது!

தமிழ்நாடு முழுவதும் போதைப்பொருட்களை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திண்டுக்கல் நகர் காவல்நிலைய டிஎஸ்பி கார்த்திக் தலைமையில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ப... மேலும் பார்க்க

`திருமணம் செய்து வைப்பதாகக்கூறி வரவழைத்து கொன்றோம்' மகளின் கண்முன்னே காதலனை கொலை செய்த தந்தை

தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை அருகிலுள்ள கரடிகுளத்தைச் சேர்ந்தவர் சஞ்சய். சென்னையில் சிற்பக்கலைஞராக வேலை பார்த்து வந்துள்ளார். இவரும் பக்கது ஊரான கெச்சிலாபுரத்தைச் சேர்ந்த உறவினர் கனகலெட்சுமியும் கா... மேலும் பார்க்க