செய்திகள் :

'தவெக அமைச்சரவை விரிவாக்கத்தில் யார் யாருக்கு இடம்?' - ரேஸில் இருப்போர் யார்?

post image

தவெக அரசு பொறுப்பேற்ற போது முதல்வர் விஜய்யோடு 9 அமைச்சர்கள் மட்டுமே பொறுப்பேற்றுக் கொண்டனர். இந்நிலையில், அமைச்சரவை விரிவாக்கம் குறித்த அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என தவெக முகாமில் கிசுகிசுக்கின்றனர்.

CM Vijay
CM Vijay

அமைச்சரவையில் இடம்பெற இப்போது வரைக்கும் பல லைன்களில் முக்கியமான எம்.எல்.ஏக்கள் முட்டி மோதிக் கொண்டிருப்பதாகவும் கூறுகின்றனர்.

பொறுப்பு ஆளுநர் அர்லேக்கர் இன்றிரவு சென்னை வருகிறார். இதைத்தொடர்ந்து, நாளை அமைச்சரவை விரிவாக்கத்துக்கு வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. முதல்வர் விஜய்யுடன் பொறுப்பேற்றுக் கொண்ட 9 அமைச்சர்களில் ஆனந்தை தவிர வேறு யாரும் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் கிடையாது.

CM Vijay
CM Vijay

'போஸ்டர் ஒட்டியவனுக்குதான் பதவி' என ஆனந்த் உட்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் பல மேடைகளில் பேசியிருக்கின்றனர். முதல் சுற்றில் அப்படியான எம்.எல்.ஏக்களுக்கு இடம் கொடுக்கப்படாததால், நாளை வெளியாகும் அமைச்சரவை பட்டியலில் மக்கள் இயக்கத்தை சேர்ந்த சிலரை எதிர்பார்க்கலாம் என்கின்றனர்.

குறிப்பாக, கட்சிக்குள் ஆனந்துக்கு நெருக்கமானவர்களாக அறியப்படும் அறந்தாங்கி பர்வேஸ், சேலம் பார்த்திபன், கல்லானை போன்றோரை அமைச்சரவையில் எதிர்பார்க்கலாம் என்கின்றனர்.

இஸ்லாமியர் யாருக்கும் அமைச்சரவையில் இடம் கொடுக்காததால், அதை மனதில் வைத்து பர்வேஸின் பெயர் டிக் அடிக்கப்பட்டிருக்கிறது என கட்சி வட்டாரத்தில் தகவல். அறந்தாங்கி பர்வேஸின் ஆதரவாளர்கள் 'அண்ணன் அமைச்சர் ஆகுறாரு!' என 10 நாட்களுக்கு முன்பாகவே கொண்டாட்டத்தில் ஈடுபட தொடங்கிவிட்டனர்.

தவெக சார்பில் 13 பெண் வேட்பாளர்கள் எம்.எல்.ஏக்களாக வென்றிருந்தனர். இந்த 13 பேருக்கிடையே தனி ரேஸ் நடந்து கொண்டிருக்கிறது. அவிநாசியில் வென்ற கமலியை அமைச்சரவையில் சேர்ப்பதன் மூலம் 'எளிய பின்னணியில் இருந்து வந்தவர்' என அரசியல் வட்டாரத்தில் பாசிட்டிவான பேச்சை உருவாக்கலாம் என கட்சியில் ஒரு பிரிவினர் நினைக்கின்றனர். ஆனால், அதே கொங்கு மண்டலத்தில் செங்கோட்டையன் தன்னுடைய ஆதரவாளரான சத்யபாமாவுக்கு தீவிரமாக ரெக்கமெண்ட் செய்கிறார்.

புஸ்ஸி ஆனந்த் குமாரபாளையம் விஜயலெட்சுமியை அமைச்சரவைக்குள் கொண்டு வர நினைக்கிறார். இவர்கள் போக ராணிப்பேட்டை தாஹிரா, பல்லாவரம் காமாட்சி போன்றோரும் முக்கியஸ்தர்கள் மூலம் காய்களை நகர்த்திக் கொண்டிருக்கின்றனர். இந்தப் பட்டியலிலிருந்து இரண்டு அல்லது மூன்று பேரின் பெயர் இறுதி செய்யப்படும் என்றும் விஷயமறிந்தவர்கள் கூறுகின்றனர்.

விஜய்

சென்னையில் வென்றவர்களுக்கு ஏற்கனவே அதிகமான இடங்களை கொடுத்துவிட்டதால், இதற்கு மேலும் சென்னையை சேர்ந்தவர்களுக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்க வேண்டுமா? எனும் கேள்வியும் கட்சிக்குள் எழுந்திருக்கிறது. ஆனால், ஆர்.கே.நகர் மரிய வில்சன், கொளத்தூர் வி.எஸ்.பாபு, வேளச்சேரி குமார் போன்றோர் அமைச்சரவை மீது கண்ணாக இருக்கின்றனர். இதில் மரிய வில்சனின் பெயர் மட்டும் டிக் அடிக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறுகின்றனர்.

TVK Vijay
TVK Vijay

இவர்கள் போக கம்பம் ஜெகன்நாத் மிஸ்ரா, திருநெல்வேலி ஆர்.எஸ்.முருகன், நாங்குனேரி ரெட்டியார்பட்டி நாராயணன் போன்றோரும் அமைச்சரவைக்கு அடி போட்டு கொண்டிருக்கின்றனர். தென்மாவட்டங்களுக்கான கோட்டாவில் இவர்களில் ஒருவரின் பெயர் டிக் அடிக்கப்பட வாய்ப்பிருக்கிறது. அதேநேரத்தில் விஜய்யின் தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் அவரின் நண்பர் தூத்துக்குடி ஸ்ரீநாத் உள்ளே வரும்பட்சத்தில் வேறு சிலர் ஏமாற்றமடையலாம் என்கிற பேச்சும் கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது.

இப்போது வரை முதல்வரோடு சேர்த்து 10 அமைச்சர்கள் பொறுப்பேற்றிருக்கிறார்கள். காங்கிரஸுக்கு 2 இடங்களும், விசிகவுக்கு 1 இடமும் ஐ.யூ.எம்.எல் க்கு ஒரு இடமும் ஒதுக்கப்படவிருக்கிறது. இந்த 14 இடங்களை தவிர்த்து மேலும் 10-11 இடங்களுக்குள் அமைச்சரவையை முடிக்க நினைக்கிறார்கள். தேவைப்பட்டால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருக்கும் அமைச்சர்களுக்கு கூடுதல் துறைகளை கொடுக்கவும் தயாராக இருக்கிறார்களாம்.

`முதல்வர் அறையில் ரீல்ஸ்; விஜய் இன்னும் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்!' - தமிழிசை சௌந்தரராஜன்

கோயம்புத்தூர் விமான நிலையத்தில் பா.ஜ.க-வின் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசியவர், ``தேர்தலுக்குப் பிந்தைய நடவடிக்கைகள் மற்றும் தேர்தலை எதிர்கொண்ட விதம் குறித... மேலும் பார்க்க

``அமைச்சரவையில் அதிமுகவா... ஆலோசித்து முடிவெடுப்போம்" - செல்வப்பெருந்தகை

அயோத்திதாசப் பண்டிதர் பிறந்த தின விழாவான இன்று, கிண்டியில் இருக்கும் அயோத்தி தாசர் மணிமண்டபத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மாலை அணிவித்து மரியாதை செய்தார். அதைத் தொடர்ந்து செய்தியாள... மேலும் பார்க்க

அண்ணா சாலை: நடைபாதை ஆக்கிரமிப்பும், அறுந்து கிடக்கும் ஒயர்களும் - சிரமத்தைச் சந்திக்கும் மக்கள்!

சென்னையின் மிக முக்கிய மற்றும் பரபரப்பான வழித்தடங்களில் ஒன்றான அண்ணா சாலை, எப்போதும் மக்கள் நடமாட்டமும் வாகனப் போக்குவரத்தும் நிறைந்து காணப்படும் பகுதியாகும்.இப்பாதையை தினமும் தகவல் தொழில்நுட்ப நிறுவன... மேலும் பார்க்க

``'வாட்ஸ்அப் பல்கலைக்கழக' பொய்ப் பிரசாரங்களை நம்ப வேண்டாம்" - எம்.பி கனிமொழி எச்சரிக்கை!

கோயம்புத்தூரில் நடைபெற்ற சுயமரியாதை திருமண விழாவில் தி.மு.க எம்.பி கனிமொழி கலந்துகொண்டு, மணமக்களை வாழ்த்தி உரையாற்றினார். அந்த உரையில், ``50 அல்லது 100 ஆண்டுகளுக்கு முன்பு சாதியக் கட்டுப்பாடுகளாலும், ... மேலும் பார்க்க

``சி.வி.சண்முகம் சொல்வது 100% உண்மை!" - விருதாச்சலத்தில் பிரேமலதா விஜயகாந்த்

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், விருதாச்சலம் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விருதாச்சல... மேலும் பார்க்க

சடாரென வந்த `விஜய்’ போட்டோ; சபைக்குறிப்பில் நீக்கப்பட்ட ஊழல் உறுதிமொழி - புதுச்சேரி பதவியேற்பு கலகல

புதுச்சேரி சட்டப்பேரவைக்கான 16-வது சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 9-ம் தேதி நடைபெற்றது. அதில் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. அதையடுத்து மே 13-ம் தேதி... மேலும் பார்க்க